உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹிந்தி திணிப்பு குற்றச்சாட்டு ராகுலுக்கு அமைச்சர் கேள்வி

ஹிந்தி திணிப்பு குற்றச்சாட்டு ராகுலுக்கு அமைச்சர் கேள்வி

புதுடில்லி :''தமிழகத்தில், ஹிந்தி திணிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் ஸ்டாலின் முன்வைக்கும் குற்றச்சாட்டில், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலின் நிலைப்பாடு என்ன,'' என, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கேள்வி எழுப்பியுள்ளார்.மத்திய தகவல் - ஒலிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:'பீஹார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசத்தில் ஹிந்தியை தவிர மைதிலி, ப்ரஜ்பாஷா, பண்டேலி, அவாதி உட்பட பல்வேறு வட இந்திய மொழிகள் பேசப்பட்டு வந்தன. மேலாதிக்க மொழியான ஹிந்தி திணிக்கப்பட்ட பின் அந்த மொழிகள் காணாமல் போயின' என, தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டு குறித்து, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் என்ன நினைக்கிறார் என்பதை அறிய ஆவலாக உள்ளேன். ஹிந்தி பேசும் மக்கள் வாழும் தொகுதியின் எம்.பி.,யான அவர், ஸ்டாலினின் குற்றச்சாட்டை ஆதரிக்கிறாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.தமிழகத்தில், ஹிந்தி திணிக்கப்படுவதாக ஸ்டாலின் கூறும் குற்றச்சாட்டு ஆழமற்றது. தி.மு.க., அரசின் மோசமான நிர்வாகத்தை மறைப்பதற்காக இந்த பிளவுபடுத்தும் சூழ்ச்சியை அவர் கையில் எடுத்துள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

kalyanasundaram
மார் 15, 2025 19:10

WHY CETRAL GOVERENMENT IS NOT BANNING HINDI FROM THOSE SCHOOLS TEACH HINDI OWNED BY POLITICIANS . THIS IS THE VERY RIGHT TIME FOR THIS ACTION SINCE BY SUAH ACTIONS THESE THIRD RATE POLITICIANS WILL LOOSE HUGE AMOUNTS THEY COLLECT FROM STUDENTS .


கோபாலன்
பிப் 28, 2025 07:07

இந்தி திராவிட வியாபாரம். நீட் எதிர்ப்பு போலவே இந்தி எதிர்ப்பு. இந்தியை இலவசமாக கற்றுக் கொடுப்பது தான் இந்தி திணிப்பு. நல்ல வருமானம் உள்ள திராவிட அரசியல்வாதிகள் பள்ளியில் பணம் வாங்கி கொண்டு படித்தால் அது திணிப்பு இல்லை.


நாஞ்சில் நாடோடி
பிப் 28, 2025 09:30

சரியான கருத்து ...


Kasimani Baskaran
பிப் 28, 2025 05:41

கடைசி பாரா நிர்வாகத்திறமையை பாராட்டி இருப்பது சூப்பர். திராவிட நிர்வாகம் ஆய் போனவர்களை மரபணு சோதனை செய்து கண்டுபிடிக்க மூன்று ஆண்டுகளாக முயல்கிறார்கள். அதாவது சாலையில் கிடைக்கும் கழிவுகளை கண்டுபிடித்து, சேகரித்து, ஆய்வகத்துக்கு அனுப்பி, அதில் மரபணுவை கண்டுபிடித்து துப்புதுலக்க முயல்கிறார்கள். செருப்பால் போஸ்டரை அடித்த பாட்டியை கண்டுபிடிக்க பல படைகளை அனுப்பினார்கள். அப்படியும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் ஞானசேகரனின் செல் போன் பிளைட் மோடில் இருந்தது மட்டும் நிமிடத்தில் உறுதி செய்ய முடிகிறது. சார் என்று ஒருவரும் இல்லை என்று வேறு சுய சான்றுடன் சான்றிதழ் வேறு கொடுக்கிறார்கள்.


Priyan Vadanad
பிப் 28, 2025 05:13

ராகுலை திமுக கூட்டணியிலிருந்து பிரிக்க எடுக்கும் நடவடிக்கை. ஆம் என்றோ இல்லை என்றோ சொல்ல முடியாத ஒரு நிலை உருவாகி இருக்கிறது. இப்போது இந்தி தெரியாது போடா என்கிற ஒரு பாட்டு இப்போது வேகமாக தமிழர்களால் விரும்பி கேட்கப்படுகிறது. ஆகவே இந்த தினமலர் செய்தி, நமது தமிழ்நாட்டில் மறைமுகமாக ஊடுருவும் இந்தி திணிப்புக்கு எதிரான மனநிலையை நீர்த்துப்போகச் செய்யும் சூழ்ச்சி இது.


vivek
பிப் 28, 2025 11:48

ராகுலுக்கு சொந்த அறிவு இல்லை என்று பிரியன் வடை சொல்றாரு


Laddoo
பிப் 28, 2025 12:28

ஏலேய் 200ரூவா கோழி குஞ்ஜூ , தமிழக மாணவர்களும் மக்கு ஆகணுமா? கும்மிடிபூண்டியை தாண்டாத கிணற்று தவளைகளாய் இருந்தது போதும். இப்போதைக்கு இருக்கும் கல்வி போட்டியில் மும்மொழியை தவிர அரபி, மாண்டரின், பிரெஞ்சு, ஸ்பானிஷ் மற்றும் ஜெர்மன் மொழிகள் கண்டிப்பாக கற்று தேற வேண்டும். த்ரவிஷன்கள் மாதிரி ரெண்டு மொழிகளை கற்று குண்டு சட்டியில் குதிரை ஓட்ட வேண்டுமா? சிந்தியுங்கள்.


Bye Pass
பிப் 28, 2025 04:23

Sun நியோ Sun Neo HD ரெண்டும் திராவிட இந்தி சேனல் தானே ..பொறாததுக்கு மராத்தி பெங்காலி சேனல் வேற ..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை