தேசியம்
மக்கள் தொகை குறைந்தது ஏன்?கோவாவில் கிறிஸ்துவ மக்கள் தொகை, 36 சதவீதத்தில் இருந்து, 25 சதவீதமாக குறைந்துள்ளது. அதேநேரத்தில், 3 சதவீதமாக இருந்த இஸ்லாமியர் மக்கள் தொகை 12 சதவீதமாக அதிகரித்து உள்ளது. இதற்கான காரணத்தை கிறிஸ்துவ சமூகத்தினர் ஆய்வு செய்ய வேண்டும். ஸ்ரீதரன் பிள்ளைகோவா கவர்னர்மன்னிக்க முடியாத தோல்வி!மணிப்பூரில் மீண்டும் கலவரம் ஏற்பட்டுள்ளது. முதல்வர் பைரேன் சிங், உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். மணிப்பூர் விஷயத்தில் பிரதமர் மோடி முற்றிலும் தோல்வி அடைந்து விட்டார். இந்த தோல்வி மன்னிக்க முடியாதது.மல்லிகார்ஜுனகார்கேதலைவர், காங்கிரஸ்சொத்து குவித்தது எப்படி?தெலுங்கானா தனி மாநில போராட்டத்துக்காக, தங்களையே தியாகம் செய்ததாக பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி தலைவர்கள் கூறுகின்றனர். ஆனால், அவர்களிடம் தற்போது பல ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகள் உள்ளன. தியாகம் செய்தவர்களுக்கு எப்படி இவ்வளவு சொத்து வந்தது?ரேவந்த் ரெட்டிதெலுங்கானா முதல்வர், காங்.,