உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காலம் தவறி பூத்த நீலக்குறிஞ்சி

காலம் தவறி பூத்த நீலக்குறிஞ்சி

மூணாறு:கேரள மாநிலம் மூணாறு தனியார் விடுதி வளாகத்தில் காலம் தவறி நீலக்குறிஞ்சி பூக்கள் பூத்துள்ளன.மேற்கு தொடர்ச்சி மலையில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, கோவா ஆகிய மாநிலங்களில் ஓராண்டு முதல் 12 ஆண்டுகள் இடைவெளியில் பூக்கும் 64 வகை நீலக்குறிஞ்சி பூச்செடிகள். அவற்றில் கேரள மாநிலம் மூணாறில் மட்டும் 47 வகை குறிஞ்சி பூச்செடிகள் உள்ளன.அதில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் 'ஸ்டெரபாலந்தஸ் குந்தியானா' எனும் தாவரவியல் பெயர் கொண்ட குறிஞ்சி பூக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. அந்த வகை பூக்கள் மூணாறில் இரு கட்டங்களாக பூக்கின்றன.அதன்படி, 2016ல் மாட்டுபட்டி உட்பட ஒரு சில பகுதிகளிலும் 2018 ஆகஸ்ட்டில் இரவிகுளம் தேசிய பூங்கா, சொக்கர் முடி, மறையூர் உட்பட பல பகுதிகளில் பெரும் அளவில் குறிஞ்சிப் பூக்கள் பூத்தன.இந்நிலையில், மூணாறு சைலன்ட்வேலி ரோட்டில் உள்ள தனியார் விடுதி வளாகத்தில் ஸ்டெரபாலந்தஸ் குந்தியானா வகை குறிஞ்சி செடிகள் வளர்த்து வருகின்றனர். அவற்றில் தற்போது காலம் தவறி பூக்கள் பூத்துள்ளன. அவற்றை விடுதி ஊழியர்கள், மிகவும் கவனமாக பாதுகாத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி