உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் இந்தியாவுக்கு வரலாம்: ராஜ்நாத் சிங்

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் இந்தியாவுக்கு வரலாம்: ராஜ்நாத் சிங்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜம்மு : “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிப்போர், இந்தியாவுக்கு தாராளமாக வரலாம். பாகிஸ்தானை போலல்லாமல், அவர்களை நாங்கள் சொந்த மக்களாகவே கருதுவோம்,” என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரில், வரும் 18, 25 மற்றும் அக்., 1ல் மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் நடக்கும் முதல் தேர்தல் என்பதால், இந்த தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

பாதுகாப்பு

இந்த தேர்தலில், 'இண்டி' கூட்டணியின் அங்கமாக காங்கிரசுடன் கூட்டணி வைத்து, முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி போட்டியிடுகிறது.இந்நிலையில், ராம்பான் மாவட்டத்தில் நேற்று நடந்த பா.ஜ., பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங் பேசியதாவது: கடந்த 2019 ஆகஸ்டில், ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின், அங்கு பாதுகாப்பு மேம்பட்டுள்ளது. இளைஞர்கள் தற்போது துப்பாக்கிகளுக்கு பதில், லேப் - டாப்களை எடுத்துச் செல்கின்றனர். பா.ஜ., தலைமையில் அரசு அமையும் பட்சத்தில், இதுவரை கண்டிராத வளர்ச்சியை, ஜம்மு - காஷ்மீர் அடையும். இதைப் பார்த்து, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிக்கும் மக்கள், 'நாங்கள் பாகிஸ்தானுடன் வாழ விரும்பவில்லை; இந்தியாவுக்குச் செல்கிறோம்' என்று சொல்லும் அளவுக்கு வளர்ச்சி இருக்கும்.பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிப்போரை, வெளிநாட்டவர்களாக, பாக்., கருதுகிறது. ஆனால் இந்தியா அப்படி நினைக்கவில்லை. அவர்களை சொந்த மக்களாகவே கருதுகிறது; அவர்கள் தாராளமாக இந்தியாவுக்கு வரலாம்.

பயங்கரவாதம்

அண்டை நாடுகளுடன் நல்லுறவை பேணவே அனைவரும் விரும்புவர். உங்களால் நண்பரை மாற்ற முடியும்; ஆனால் அண்டை வீட்டாரை மாற்ற முடியாது. அது போலத்தான், பாகிஸ்தானுடன் நல்லுறவை பேண நாங்கள் விரும்புகிறோம். இதற்கு தடையாக இருப்பது பயங்கரவாதம். ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை நிறுத்தினால், பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சு நடத்தும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

pothi raja
செப் 10, 2024 15:01

யாரூ


அப்பாவி
செப் 09, 2024 21:45

ஓட்டுப்.பொருக்கும் ஸ்டேட்மெண்ட். ஒர்க்கவுட் ஆகுமா?


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
செப் 09, 2024 11:53

முதலில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு என்று கூறுவதே கேட்பதற்கு கஷ்டமாக உள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமித்த பகுதிகளை இராணுவ நடவடிக்கை மூலம் இந்தியாவுடன் இணைக்க வேண்டும்.


pothi raja
செப் 10, 2024 15:02

உண்மை


Srinivasan Krishnamoorthi
செப் 09, 2024 11:14

இந்த அறிவிப்பு அறிவு பூர்ணமானதல்ல. தீவிரவாதிகள் ஊடுருவ வழி ஏதுவாகலாம். உடனே பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க வழி பாருங்கள்


V RAMASWAMY
செப் 09, 2024 09:47

நுணலும் தன் வாயால் கெடும்.


pothi raja
செப் 10, 2024 15:04

அது நுனல் இது வலிமையான பாரதத் திருநாட்டின் பாதுகாப்பு அமைச்சர்


Nandakumar Naidu.
செப் 09, 2024 08:54

வேலிக்கு அப்புறம் இருக்கிற ஓணானை எடுத்து ஏன் வேட்டியில் விட்டுக் கொள்ள வேண்டும்? இவர்கள் நன்றி கெட்டவர்கள் என்று பங்களாதேஷை பார்த்து தெரிந்து கொள்ளவில்லையா? என்னதான் அவர்களை உள்ளே அழைத்து இந்தியாவில் வைத்துக் கொண்டாலும் இந்த நன்றி கெட்டவர்கள் பிஜேபிக்கு வாக்களிக்க போவதில்லை. ஏற்கனவே காந்தி நேரு செய்த தவறால் தனத்தால் இங்கு தங்கிவிட்ட முஸ்லிம்கள் பிஜேபிக்கு ஒருபோதும் வாக்களிக்க போவதில்லை? பிஜேபி ஏன் இப்படி அவர்களை பிடித்து தொங்கிக்கொண்டிருக்கிறது? இந்தியாவையும் இந்துக்களையும் காப்பாற்ற வழி பாருங்கள் திரு ராஜநாத் சிங் அவர்களே.


Kalyanaraman Andhukuru.R.
செப் 09, 2024 13:59

உண்மையான கருத்து.


pothi raja
செப் 10, 2024 15:05

யோசிக்க வேண்டும்


Appan
செப் 09, 2024 08:16

இப்போ இருக்கும் இஸ்லாமியர்களே இன்னும் இந்தியாவில் முழுமையாக இணைக்காமல் நாட்டை திணற அடிக்கிறார்கள் ..இன்னும் மேலும் அவர்கள் இந்தியாவுக்கு வரணுமா ?..ஒருபோதும் இஸ்லாமியர்கள் மற்றவர்களை மதிக்க மாட்டார்கள் ..Their basic principle is that all world people should be Muslim else covert them or kill them.. With them how anybody can co exit ?


Kumar Kumzi
செப் 09, 2024 08:02

இங்கே இருக்கிற மூர்க்கனுங்களாயே பல தொல்லைகள் இது வேறயா வேண்டாம் இந்த தலைவலி


RAJ
செப் 09, 2024 07:59

ஏன் சார் ? சும்மா இருக்கிற சங்க ஊதரிங்க..


Sampath Kumar
செப் 09, 2024 07:57

ippadiyae பிலிம் காட்டுங்க உங்க காஸ்மீர் பண்டிட்கள் மீது மட்டும் அக்கறை காட்டுங்க மற்றவன் ஏகேடு கேட்டால் எண்ணுக்கு enna entru unga kumbalin suyanalam thaan anaithu pirachanikum kaarnam


புதிய வீடியோ