உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் மோடி பதவி நீடிக்காது சிவசங்கரப்பா கணிப்பு

பிரதமர் மோடி பதவி நீடிக்காது சிவசங்கரப்பா கணிப்பு

தாவணகெரே: ''பிரதமர் நரேந்திர மோடி யை, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், பீகார் முதல்வர் நிதீஷ் குமாரும் ஆட்டி படைப்பர்,'' என, காங்கிரஸ் மூத்த எம்.எல்.ஏ., சாமனூர் சிவசங்கரப்பா தெரிவித்தார்.தாவணகெரே வடக்கு தொகுதி காங்கிரஸ் மூத்த எம்.எல்.ஏ., சாமனுார் சிவசங்கரப்பா அளித்த பேட்டி:கடந்த 20 ஆண்டுகளாக தாவணகெரே தொகுதி எம்.பி., ஆக இருந்த பா.ஜ.,வின் சித்தேஸ்வர் தொகுதிக்காக எதுவும் செய்யவில்லை. இம்முறை மக்கள் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என, எனது மருமகள் பிரபாவை வெற்றி பெற வைத்து எம்.பி., ஆக்கி உள்ளனர். எனது மருமகளுக்கு வாழ்த்துகள்.லோக்சபா தேர்தலில் பா.ஜ., 10 இடங்கள் குறைவாக பெற்றிருந்தாலும் கூட, மோடி மீண்டும் பிரதமர் ஆகியிருக்க முடியாது. தனி பெரும்பான்மையுடன் அவர்கள் ஆட்சியை பிடிக்கவில்லை. பிரதமர் பதவி, மத்திய அமைச்சர்கள் பதவிக்கு போட்டி எழுந்தது.ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பீகார் முதல்வர் நிதீஷ் குமார் ஆகிய இருவரும், பிரதமர் மோடியை ஆட்டி படைப்பர். இதனால் மோடியால் நீண்ட நாட்கள் பிரதமராக நீடிக்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

kalyan
ஜூன் 20, 2024 16:47

அமாவாசை வந்தால் மண்புழுவுக்கும் சற்று விஷம் இருக்கும் என்று ஒரு பழ மொழி கூறுவார்கள் அதுபோல் இருக்கே ?


R SRINIVASAN
ஜூன் 20, 2024 08:57

ராகுல் வின்சி தலை கீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் இந்தியாவின் பிரதமராக வர முடியாது .காங்கிரெஸ்க்காரர்கள் புலம்பிக்கொண்டே இருக்க வேண்டியதுதான் .


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை