உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி அமைச்சர் போராட்டத்தில் கூச்சல், குழப்பம்: கெஜ்ரிவாலுக்கு எதிராக கோஷம்

டில்லி அமைச்சர் போராட்டத்தில் கூச்சல், குழப்பம்: கெஜ்ரிவாலுக்கு எதிராக கோஷம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஹரியானாவில் இருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தி, டில்லி அமைச்சர் ஆதிஷி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனார். 2வது நாளான இன்று(ஜூன் 22) போராட்டத்தில் கூச்சல், குழப்பம் நிலவியது. முதல்வர் கெஜ்ரிவாலுக்கு எதிராக கோஷம் எழுப்பியதால், பரபரப்பு ஏற்பட்டது.டில்லியில், வெயில் ஒரு பக்கம் வாட்டி வதைக்க, குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பல்வேறு பகுதிகளில் குடிநீருக்காக மக்கள் காலி குடங்களுடன் காத்திருக்கின்றனர். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன். இரு நாட்களில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவேன் என ஆம் ஆத்மியைச் சேர்ந்த டில்லி நீர்வளத் துறை அமைச்சர் ஆதிஷி கூறியிருந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=48dqrlx9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி டில்லியின் போகல் என்ற இடத்தில், நீர்வளத் துறை அமைச்சர் ஆதிஷி நேற்று காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கினார். 2வது நாளான இன்று(ஜூன் 22) போராட்டத்தில் கூச்சல், குழப்பம் நிலவியது. முதல்வர் கெஜ்ரிவாலுக்கு எதிராக கோஷமிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா, ஆம் ஆத்மி எம்.பி., - சஞ்சய் சிங், அமைச்சர் சவுரப் பரத்வாஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிஷி விளக்கம்

'இன்று உண்ணாவிரத போராட்டத்தில் சிலர் வந்து தொந்தரவு செய்தனர். பாஜ.,வினருக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். நாங்கள் மஹாத்மா காந்தி கற்பித்த வழியில் செல்கிறோம். இதுபோன்ற செயல்களால் நாங்கள் உண்ணாவிரத போராட்டத்தை நிறுத்த மாட்டோம்' என டில்லி அமைச்சர் அதிஷி விளக்கம் அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Raju
ஜூன் 22, 2024 22:40

வழக்கம் போல நீர் மோரும் களிசாதமும் ரகசியமாக கட்சி தொண்டர்கள் சப்ளை செய்வார்கள்.


K Subramanian
ஜூன் 22, 2024 19:33

Shame on this AAP Government with their CM DyCM and ministers are in jail. And this lady, no one else is available, keeps passing on the bucks on all others for their survival.


RAAJ68
ஜூன் 22, 2024 18:10

ஏழு பாராளுமன்ற தொகுதிகளையும் டெல்லி மக்கள் மோடிக்கு கொடுத்துள்ளனர் எனவே மோடி உடனே தலையிட்டு டெல்லி மக்களுக்கு தண்ணீர் தர வேண்டும். இல்லாவிட்டால் வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜாவுக்கு ஓட்டு அளிக்க மாட்டார்கள் மாட்டார்கள் மாட்டார்கள் மாட்டார்கள்


KR
ஜூன் 22, 2024 17:47

People are sick and tired of this drama company. Being in power in Delhi, they cannot do such protests. People wiped the unholy INDI alliance in Delhi LS polls. Will do the same thing in next year assembly polls now


Bala Paddy
ஜூன் 22, 2024 17:46

இது உண்ணா விரதமா? அப்போது டெல்லி பிரச்னைகள் தீரும்.


Anand
ஜூன் 22, 2024 17:37

இவளோட காலவரையற்ற உண்ணாவிரதத்தை யாரும் கண்டுக்கொள்ளாததால், தன்னோட ஆட்களை விட்டே உண்ணாவிரதத்தை தடுத்தது போல நாடகம் நடத்தி முடித்துக்கொள்வாள்.


Balasubramanian
ஜூன் 22, 2024 16:47

வழக்கம் போல் தண்ணீர் பீய்ச்சி அடித்து கூட்டத்தை கலைக்க முற்பட்டு இருந்தால் மக்கள் மகிழ்ச்சியாக குளித்து இருப்பார்கள்


Nandakumar Naidu.
ஜூன் 22, 2024 16:27

உண்ணாவிரதத்தை முடிக்காதே ஆதிஷி மா. . டெல்லி மக்கள் நிம்மதியாக இருப்பார்கள்.


Indhuindian
ஜூன் 22, 2024 16:27

காலவரையற்ற உண்ணாவிரதம்- கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும் பல்டி அடிக்காதீங்க


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி