வங்கதேசத்தினர் இருவர் கைது
மஹராஜ்கஞ்ச்:சட்டவிரோதமாக நம் நாட்டுக்குள் நுழைய முயன்ற வங்கதேசத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.நேற்று முன் தினம் மாலை, நேபாளத்தில் இருந்து பர்கத்வா எல்லை வழியாக நம் நாட்டுக்குள் நுழைய முயன்ற அஹமது ரூபெல் மற்றும் முகமது குகன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.