உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தாண்டில் 1 லட்சம் பேர் பணிநீக்கம்; ஆட்குறைப்பில் ஐ.டி., நிறுவனங்கள் தீவிரம்

இந்தாண்டில் 1 லட்சம் பேர் பணிநீக்கம்; ஆட்குறைப்பில் ஐ.டி., நிறுவனங்கள் தீவிரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தாண்டு மட்டும், உலகம் முழுதும், செலவு குறைப்பு நடவடிக்கையாக, 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களை, முன்னணி ஐ.டி., நிறுவனங்கள் பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இது குறித்து 'லே ஆப்ஸ்' இணையதளம் தெரிவித்துள்ளதாவது: முன்னணி ஐ.டி., நிறுவனங்கள், முதல்கட்டமாக தீவிர ஆட்குறைப்பு நடவடிக்கையை துவங்கி உள்ளன. அதன்படி, இந்தாண்டு இதுவரை 218 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், 1,12,732 பேரைப் பணிநீக்கம் செய்துள்ளன. அடுத்த கட்டமாக, மேலும் பலரைப் பணிநீக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளன.பெரும்பாலான நிறுவனங்கள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, பொருளாதார சுணக்கம் ஆகியவை காரணமாக ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருகின்றன. அமேசான், இன்டெல் மற்றும் டி.சி.எஸ்., ஆகிய நிறுவனங்கள் இதுவரை ஆயிரக்கணக்கானோரை பணிநீக்கம் செய்துள்ளன.இதில், நிறுவனத்தின் தலைமைப்பொறுப்புகள், நடுத்தர தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் அதிகளவில் வேலையிழப்பிற்கு ஆளாகி உள்ளனர். இந்நிறுவனங்கள், பணியாளர்களுக்கான செலவைக் குறைத்து, ஏ.ஐ., தொழில்நுட்பம், கிளவுட் கம்ப்யூட்டிங் போன்றவற்றில் கூடுதல் முதலீடு செய்து வருகின்றன. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

BALAJI
நவ 03, 2025 12:04

Do you know how many expatriates are sent from Gulf, Saudi and Qatar. The numbers are staggering and look at the sub-human environment they had to work in these areas. Please stop paternizing USA and look at other countries.


ஆரூர் ரங்
நவ 03, 2025 11:33

டிராக்டர் பயன்பாட்டால் விவசாயக் கூலிகள் பாதிக்கபடுவார்கள் என்று கூறி கம்யூனிஸ்டு சங்கங்கள் டிராக்டர் மறியல் போராட்டம் நடத்தியது. வங்கிகளில் கணினி அறிமுகத்தை எதிர்த்து அவர்களது யூனியன் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டது நினைவுக்கு வருகிறது.


Vasan
நவ 03, 2025 13:16

லைட்டரால் தீக்குச்சி தொழில் பாதிக்க பட்டது. மிக்ஸி, கிரைண்டரால் ஆட்டுக்கல், அம்மிக்கல் தொழில் பாதிக்க பட்டது.


நாஞ்சில் நாடோடி
நவ 03, 2025 10:30

உடலுழைப்பு பணியே என்றும் நிரந்தரம். கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள், கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்...


R SRINIVASAN
நவ 03, 2025 09:42

நான் நமது பாரத பிரதமர் மோடிஜியை கேட்டுக்கொள்வதெல்லாம் இம்மாதிரி வேலையிழந்தவர்களுக்கு வங்கிகளில் PUBLIC RELATIONSHIP OFFICER என்ற POST-I உருவாக்கி ஏழை மக்களுக்கு அக்கௌன்ட் ஒபன் பண்ணுவதற்கும் KYC சரி பார்ப்பதற்கும் உதவி செய்யலாம். செமி கண்டக்டர்களை உற்பத்தி செய்தல் போன்ற தொழில்களில் ஈடுபடுவோருக்கு SUBSIDY கொடுத்தல், வங்கியில் கடன் பெறுதல் போன்றவற்றின் மூலம் அவர்களுக்கு மறு வாழ்வு கொடுக்கலாம்.


duruvasar
நவ 03, 2025 09:09

கார்பொரேட் கைக்கூலிகள் என தங்கள் தேவைக்கு முத்திரை குத்தும் ...


சண்முகம்
நவ 03, 2025 08:53

கம்யூட்டர் அறிமுகமான போது யாருக்கும் வேலை இருக்காது என்ற புலம்பல் இதை விட அதிகமாக இருந்தது.


Ramesh Sargam
நவ 03, 2025 09:28

புலம்பல் அல்ல. உண்மை. உதாரணத்துக்கு, நான் ஒரு தின பத்திரிகை அலுவலகத்தில் கம்போசர் ஆக பணியாற்றினேன். என்னுடன் ஒரு 25 கம்போசர்கள், மூன்று ஷிப்ட்களில் பணிபுரிந்தோம். கம்போசர் என்றால் செய்திகளை type செய்வது. பிறகு அதில் உள்ள பிழைகளை திருத்த ஒரு 20 ஊழியர்கள். அவர்களை proof-readers என்று அழைப்பார்கள். 1995 -க்கு பிறகு அட்வான்ஸ் computers வந்தபிறகு காம்போசர்ஸ், proof-readers வேலையை இழந்தோம். இது ஒரு உதாரணத்திற்கு. இதுபோன்று பல அலுவலகங்களில் computers வந்தவுடன் பல ஆயிரம் ஊழியர்கள் வேலை இழந்தனர். ஆகையால் புலம்பல் என்று சர்வசாதாரணமாக கூறாதீர்கள்.


Ramesh Sargam
நவ 03, 2025 08:18

ஏஐ தொழில்நுட்பம் காரணமாக இன்டெல், மைக்ரோசாப்ட், டிசிஎஸ் உள்பட 218 நிறுவனங்களில் 1,12,000 தொழில் நுட்ப ஊழியர்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளதாக செய்தி. நாளை ஏஐ யை விட வேறு ஒன்று கண்டறியப்படும், அறிமுகப்படுத்தப்படும். பிறகு ஏஐ படித்தவர்களுக்கே வேலை போகும். வளர்ச்சி முக்கியம். ஆனால் அது மனிதகுலத்தை அழிப்பதாக இருக்கக்கூடாது. இதில் இந்தியாவின் பல மாநிலங்களில் மூன்றாம் வகுப்பிலிருந்தே ஏஐ பாடம் கற்றுத்தர முடிவெடுத்துள்ளனர் பல பள்ளிக்கூடங்கள். இது எங்கு கொண்டுபோய் விடுமோ ? மற்ற படிப்பு படித்தவர்கள் வேலை இல்லாமல் எப்படி எல்லாம் கஷ்டப்படப்போகிறார்களோ, இறைவா?


Srprd
நவ 03, 2025 08:37

Is the real number of people laid off from TCS only 20000 ? I heard a rumour that this figure is just for public consumption.


முருகன்
நவ 03, 2025 08:38

ஒரு வருட சம்பளத்தை ஒரு மாதத்தில் பெற்றால் இப்படி தான் இருக்கும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை