உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்களூருவில் ரூ.100 கோடி சிட்பண்ட் மோசடி; கென்யாவுக்கு தப்பிய கேரள ஜோடி

பெங்களூருவில் ரூ.100 கோடி சிட்பண்ட் மோசடி; கென்யாவுக்கு தப்பிய கேரள ஜோடி

பெங்களூரு: கர்நாடகாவில் ரூ.100 கோடி சிட்பண்ட் மோசடி சம்பவத்தில் ஈடுபட்ட கேரளாவைச் சேர்ந்த ஜோடி, கென்யாவுக்கு தப்பியோடி விட்டதாக அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர். கேரளாவைச் சேர்ந்த வர்க்கீஸ் மற்றும் ஷைனி டாமி என்ற தம்பதி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த 2000ம் ஆண்டு முதல் சிட்பண்ட் நிறுவனம் நடத்தி வந்துள்ளனர். அதிக வட்டி கொடுப்பதாகக் கூறி 400க்கும் மேற்பட்டோரிடம் பணம் பெற்றுள்ளனர். வாங்கிய பணத்திற்கு வட்டியோ, அசலோ கொடுக்காமல், ரூ.100 கோடி வரை மோசடி செய்துள்ளனர். இருவரும் பணத்துடன் தலைமறைவான நிலையில், பாதிக்கப்பட்ட ஒருவர் அளித்த புகாரின் பேரில் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதன்பிறகு சுமார் 400 பேர் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில், மோசடி சம்பவத்தில் ஈடுபட்ட வர்க்கீஸூம், ஷைனி டாமியும் கென்யாவுக்கு தப்பிச் சென்று விட்டதாக கர்நாடகா போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீஸார் கூறுகையில், 'கடந்த ஜூலை 3ம் தேதி அவர்கள் குடியிருப்பை காலி செய்துள்ளனர். அவர்கள் இருவரும் கென்யாவுக்கு தப்பிச் சென்றுள்ளனர். ஆனால், அவர்களின் குழந்தைகள் எங்கே இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். வர்க்கீஸ் மற்றும் ஷைனி டாமியின் மகனின் தொலைப்பேசி எண்ணை வைத்து ஆய்வு செய்ததில், அவர் ஆலப்புழாவில் இருப்பது தெரிகிறது,' என்றனர். அதேவேளையில், இதுபற்றி தங்களுக்கு எந்த விபரமும் தெரியாது என்று கேரள போலீசார் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Natarajan Ramanathan
ஜூலை 09, 2025 22:32

இவர்கள் சம்பாதித்தது யாருக்காக? எப்படி சொந்த குழந்தைகளை விட்டுவிட்டு இப்படி ஓட முடிகிறது?


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஜூலை 09, 2025 22:11

சூப்பர் மூர்க்ஸ்


நிக்கோல்தாம்சன்
ஜூலை 09, 2025 20:44

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கென்யாவும் ஆலப்புழாவும் அருகருகில் வந்து போகும்


அப்பாவி
ஜூலை 09, 2025 20:33

முன்னாடியெல்லாம் லட்சக்கணக்கில் ஆட்டையப் போட்டு பெரிய ஆளுங்க தப்பிச்சு ஓடுவாங்க. 2014 க்கப்புறம் டிஜிட்டல் எக்கானமி வந்ததுக்கப்புறம் கோடிக்கணக்கில் சாமானியர்களும் தப்பிச்சு ஓடற அளவுக்கு வளர்ந்திருக்கோம். போட்ரா வெடிய. குத்துடா மெடல.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை