உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நெரிசலில் 11 பேர் பலியான சம்பவம்; பெங்களூரூ கிரிக்கெட் அணியே முழு பொறுப்பு என்கிறது கர்நாடகா அரசு

நெரிசலில் 11 பேர் பலியான சம்பவம்; பெங்களூரூ கிரிக்கெட் அணியே முழு பொறுப்பு என்கிறது கர்நாடகா அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: கர்நாடகாவில் பிரீமியர் லீக் வெற்றி கொண்டாட்டத்தின் போது, கூட்டநெரிசல் ஏற்பட்டு, 11 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பெங்களூரு அணி நிர்வாகமே முழு பொறுப்பு என்று கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் அம்மாநில அரசு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற பெங்களூரு அணி கடந்த ஜூன் 4ம் தேதி ஆமதாபாத்தில் இருந்து பெங்கரூளுவுக்கு திரும்பியது. அப்போது, விதான் சவுதா மற்றும் சின்னசாமி மைதானத்தில் பெங்களூரு வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற லட்சக்கணக்கான ரசிகர்கள் ஒரே சமயத்தில் திரண்டதால் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wluwizbo&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த சம்பவம் கர்நாடகா அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. மேலும், கூட்டநெரிசலுக்கு கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மற்றும் பெங்களூரு அணி நிர்வாகத்தின் மீது அம்மாநில அரசு குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில், கூட்டநெரிசல் குறித்து கர்நாடகா அரசு விசாரணை அறிக்கை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது; வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த டி.என்.ஏ., என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க்ஸ் நிறுவனம், ஜூன் 3ம் தேதி போலீசாரை தொடர்பு கொண்டு, வெற்றி விழா குறித்து தகவல் தெரிவித்தது. இருப்பினும், அதிகாரப்பூர்வ அனுமதி கோரவில்லை. 2009 பெங்களூரு நகர ஆணையின் படி, கட்டாய அனுமதி தேவை. இதனால் விழாவிற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.போலீசார் அனுமதி மறுத்த நிலையிலும், 'ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு வாருங்கள், இலவச அனுமதி' என்று பெங்களூரு அணி நிர்வாகம், சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்தது. அதுமட்டுமில்லாமல், அந்த அணியின் நட்சத்திர வீரர் கோலியும், வீடியோ மூலம், ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்தார். இலவச அனுமதி என்று கூறியதால், ஒரே சமயத்தில் 3 லட்சம் பேர் குவிந்தனர். ஆனால், ஜூன் 4ம் தேதி மதியம் 3.14 மணியளவில், 'மைதானத்திற்குள் நுழைய பாஸ் தேவை' என்று நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் திடீரென அறிவித்தனர். இதனால், ரசிகர்களின் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. பெங்களூரு அணி நிர்வாகம், கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மற்றும் டி.என்.ஏ., இடையே மோசமான ஒருங்கிணைப்பு இருந்தது. நுழைவு வாயிலில் போதிய திட்டமிடல் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் கூட்டநெரிசல் ஏற்பட்டது, எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

spr
ஜூலை 17, 2025 18:28

"போலீசார் அனுமதி மறுத்த நிலையிலும், ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு வாருங்கள், இலவச அனுமதி என்று பெங்களூரு அணி நிர்வாகம் அறிவித்தது என்றால் அதற்கேற்ப காவல்துறை முறையான கட்டுப்பாடுகளை செய்திருக்க வேண்டும் . ஆனால் இதில் குற்றம் சாட்டப்பட்ட வேண்டியவர்கள் மக்களே. ஆர்வம் இருக்க வேண்டியதுதான் ஆனால் இப்படி இலவசம் என்றால் உயிரை விடுமளவிற்கு பைத்தியங்களாக இருப்பார்களா?


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 17, 2025 14:35

முதலமைச்சர் துணை முதலமைச்சர் இருவரும் பங்கு கொண்டு உள்ளனர் இந்த வெற்றி விழா கொண்டாட்டத்தில். எப்படி போலீசார் அனுமதி கொடுக்காத ஒரு கூட்டத்தில் முதலமைச்சர் துணை முதலமைச்சர் பங்கு பெறலாம்.


ஆரூர் ரங்
ஜூலை 17, 2025 14:16

அதெப்படி அனுமதி அளிக்கப் படாத கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர், அமைச்சர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்பட்டது ?.கூட்டத்திற்கு மக்கள் வந்து கொண்டிருந்தபோதே தடுத்து திருப்பியனுப்பியிருக்க முடியாதா? ஏக்கர் கணக்கில் பொய்.


SUBBU,MADURAI
ஜூலை 17, 2025 13:50

CM was there. Dy CM was there. Many other ministers were there They all posed with the trophy The celebration continued even after the stampede And whom did they put all the blame on? RCB, CM, DyCM etc were there without police clearance?


Senthoora
ஜூலை 17, 2025 14:31

கிரிக்கெட் பயித்தியம் என்ற சபக்கேடு ஒழிந்தால் தான் நாடும் திருந்தும், தீவிரவாதமும் முடங்கும், தாவுத் இப்ராஹீம் கிரிக்கெட் சூதாட்டத்தால் பல பில்லியன் டாலர் உழைத்து, தீவிரவாதிகளை ஊக்கப்படுத்துகிறார், ஆகமொத்தத்தில் இந்திய மக்களே தீவிரவாதத்துக்கு பணம் கொடுக்கிறாங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை