உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சேவை ஏற்றுமதி 11 சதவீதம் அதிகரிப்பு;ரிசர்வ் வங்கி கவர்னர் மகிழ்ச்சி!

சேவை ஏற்றுமதி 11 சதவீதம் அதிகரிப்பு;ரிசர்வ் வங்கி கவர்னர் மகிழ்ச்சி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில், சேவை ஏற்றுமதி 11 சதவீதம் அதிகரித்துள்ளது. இது, நடப்பு கணக்கு பற்றாக்குறையை சமாளிக்க பேருதவியாக இருக்கிறது' என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் கூறினார்.உலகளாவிய தலைமைத்துவ உச்சி மாநாட்டில் பேசிய சக்திகாந்த தாஸ் பேசியதாவது:இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது. பண வீக்கமும், பொருளாதார தேக்க நிலையும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உலகளாவிய அளவில் நீடிக்கிறது. உக்ரைன் போர் காரணமாக, பொருள் வினியோக சங்கிலியில் ஏற்பட்ட பாதிப்புகள், அதன் தொடர்ச்சியான பணவீக்கம் ஆகியவற்றால், உலகம் முழுவதும் மத்திய வங்கிகள் கடும் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில், கடுமையான பொருளாதார பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான 'சாப்ட் லேண்டிங்' நிலை உறுதி செய்யப்பட்டுள்ளது.நடப்பு கணக்கு பற்றாக்குறையானது, ஜி.டி.பி.,யில் 1.1 சதவீதம் என்ற நிர்வகித்து விடக்கூடிய நிலையில் இருக்கிறது. 2024- 25ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில், வெளிநாடுகளுக்கான வர்த்தக ஏற்றுமதி அதிகரித்துள்ளது. சேவை ஏற்றுமதி முதல் அரையாண்டில் 11 சதவீதம் அதிகரித்துள்ளது.சேவை ஏற்றுமதியும், வெளிநாட்டு வாழ் இந்தியர் அனுப்பும் பணமும், நடப்பு கணக்கு பற்றாக்குறையை சமாளித்து விடும்.வெளிநாட்டு முதலீடு, நடப்பு கணக்கு பற்றாக்குறையை காட்டிலும் அதிகமாக உள்ளது; அந்நியச் செலாவணி கையிருப்பு உயரவும் வழிவகுக்கிறது.இந்தியா தற்போது உலகில் அதிகப்படியாக அந்நியச் செலாவணியை கையிருப்பில் வைத்திருக்கும் நாடுகளில் நான்காம் இடத்தில் உள்ளது. அதாவது, 682 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கைவசம் உள்ளன.இதைக்கொண்டு, நாட்டின் ஒட்டு மொத்த வெளிநாட்டுக் கடனையும், ஓராண்டுக்கான ஒட்டு மொத்த இறக்குமதி செலவையும் சமாளித்து விட முடியும்.இவ்வாறு சக்திகாந்த தாஸ் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ஒபாவி
நவ 15, 2024 07:32

அடுத்தவனுக்கு சேவை செய்வதில் நாமதான் டாப்


அப்பாவி
நவ 14, 2024 23:13

வங்கிகளுக்கு எப்போ அடுத்த 29 லட்சம் கோடி கொடுக்கப்போறீங்க? ஓ அது நிதியமைச்சர் கொடுக்கணுமா? அந்நிய முதலீட்டாளர்கள் காத்துக்கிட்டிருக்காங்க.


GMM
நவ 14, 2024 21:42

மகிழ்ச்சியான செய்தி. தேடிய செல்வத்தை அரசியல் கட்சிகள் அழிப்பதை மத்திய வங்கி கட்டுப்படுத்த முடியாதா ? அந்நிய கடனை படிப்படியாக அடைக்க வேண்டும். டிஜிட்டல் கரன்சி 1, 10, 50, 100 லட்சத்தில் வெளியிட வேண்டும். வங்கியில் பண பரிவர்த்தனை 1 லட்சம் மேல் அனுமதிக்க கூடாது. அரசிடம் மட்டும் தான் கருவூலம் இருக்க வேண்டும். தற்போது தொண்டு நிறுவனங்கள், தீவிரவாதிகள், அரசியல் கட்சிகளிடம் கருவூலம் உள்ளன ? சட்ட ஒழுங்கு சீராக இருந்தால், இன்னும் சேவை, ஏற்றுமதி அதிகரிக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை