உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: முன்னாள் காங்., எம்.பி., குற்றவாளி

சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: முன்னாள் காங்., எம்.பி., குற்றவாளி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சஜ்ஜன் குமாரை குற்றவாளி என அறிவித்து டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.கடந்த 1984 அக்., 31 ல் காங்., மூத்த தலைவரும், அப்போதைய பிரதமருமான இந்திராவை, சீக்கிய பாதுகாவலர்கள் இருவர் துப்பாக்கிகளால் சுட்டுக் கொன்றனர். இதைத் தொடர்ந்து, கலவரம் வெடித்தது. ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். டில்லி கன்டோன்மென்ட் பகுதியில் பல சீக்கியர்கள், வன்முறை கும்பல் தாக்குதலில் உயிரிழந்தனர். அந்த ஆண்டு நவ., 1 ல் சரஸ்வதி விஹாரில் இருவரை கொலை செய்தது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சஜ்ஜன் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது குறித்த வழக்கு டில்லி ரோஸ் அவென்யூ., நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. விசாரணை முடிந்த நிலையில், உத்தரவு இன்றைய நாளுக்கு( பிப்.,12) ஒத்திவைக்கப்பட்டது.இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி, சஜ்ஜன் குமாரை குற்றவாளி என அறிவித்து உத்தரவிட்டார். சீக்கிய கலவரம் தொடர்பான மற்றொரு வழக்கில், சஜ்ஜன் குமார் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

RAMAKRISHNAN NATESAN
பிப் 12, 2025 22:34

செல்வாக்குள்ள பலர் தப்பிவிட்டனர் .... ஒரு உதாரணம் ம பி முதல்வராக இருந்த கமல்நாத் .....


Karthik
பிப் 12, 2025 21:54

என்னாது..? அக்., 31 ல இந்திரா காந்திய சுட்டுட்டாங்களா..?? பிப்ரவரி 12 ல தீர்ப்பும் சொல்லிட்டாங்களா..?? ஆஹா.. ஓஹோ.. 100 நாளில் என்ன ஒரு விரைவான தீர்ப்பு... வாழ்க நீதிமான்கள்


sankaranarayanan
பிப் 12, 2025 21:36

1984-லில் நடந்த சாம்பவத்திற்கு உச்ச நீதி மன்றம் வெகு விரைவில் தீர்ப்பு அளித்துள்ளது இப்போதுதான் வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி, சஜ்ஜன் குமாரை குற்றவாளி என அறிவித்து உத்தரவிட்டார். எத்தனை வருடங்கள் உருண்டோடின எத்தனை தலைமுறை சென்றுள்ளது ஒரு நூற்றாண்டு கழித்துகூட தீர்ப்பு கொடுப்பார்கள் போலிருக்கிறது


M Ramachandran
பிப் 12, 2025 20:59

சீக்கியர்களுக்கு தன மானம் இருந்தால் ராஜீவ வழி குடும்ப ஏவலாளி மாட்டியிருக்கான்


Dharmavaan
பிப் 12, 2025 20:21

இந்த குடும்பத்துக்கு மோனாசிங் கொத்தடிமை வேலை பார்த்தது துரோகம் இல்லையா


Dharmavaan
பிப் 12, 2025 20:20

காங்கிரஸ் வெ/றிச்செயல்களை ஒரு படமாக வீடியோவாக எடுத்து யாராவது போட்டால் என்ன


N.Purushothaman
பிப் 12, 2025 19:26

நாற்பது வருஷமா இவர்ன் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிச்சிகிட்டு இருக்கார் ....அது எப்படின்னு அந்த காங்கிரஸ் கட்சிக்கு தான் வெளிச்சம் ..


என்றும் இந்தியன்
பிப் 12, 2025 18:34

அறிவீனமான அநீதிமன்றம் அநீதிபதிகள் 41 வருடம் ஒரு வழக்கு தீர்வு சொல்ல இதோ இவர்களுக்கு கொடுக்கப்படும் சில ஆதாயங்கள் List of benefits that SC judges enjoy that no other class of ordinary citizens enjoy: 1. Approximately 150-160 non-working days, including weekends, public holidays and vacations. 2. Exemptions from taxes for certain benefits 3. Exemptions from mandatory disclosure of assets 4. Car for life with chauffeur post retirement. 5. Domestic help for life post retirement 6. Lifetime secretarial assistants 7. Post retirement benefits like reimbursement of monthly phone and internet bills upto Rs 4200


Pats, Kongunadu, Bharat, Hindustan
பிப் 12, 2025 17:36

என்னா அறிவு. இத சொல்ல 40 வருசம். போய் தூக்குல தொங்கலாம்... யாரு? நாமதான்...


M S RAGHUNATHAN
பிப் 12, 2025 16:32

40 வருடங்கள் ஒரு தீர்ப்பு வருவதற்கு. இங்கு உச்ச நீதிமன்றம் ஆளுநரை ஏன் மசோதாக்களுக்கு அனுமதி தரவில்லை என்று கண்டிக்கிறது. இதே கேள்விகளை ஏன் உச்ச நீதி மன்றம் உயர் நீதி மன்றங்கள், மாவட்ட நீதி மன்றங்களை கேட்கவில்லை. ஆளுநரிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஏன் அனுமதி தரவில்லை, உங்கள் தரப்பு என்ன என்று கேட்க வேண்டியது தானே. An extraordinary solution should be found out to sort out an extraordinary problem or situation. There is no out of box thinking from our higher judiciary. The law passed by Parliament and approved by President was held unconstitutional by the SC. That is the NJA Act. நீதிபதிகள் நியமிக்கும் முறை When it hit the SC, they acted in double time to dismiss the act. Did it not act against the will of the people expressed through parliament. Sad to note the judges themselves are selfish.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை