உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தனியார் வங்கிகளில் பணி விலகல் 25% அதிகம்; ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!

தனியார் வங்கிகளில் பணி விலகல் 25% அதிகம்; ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'தனியார் வங்கிகளில் பணியாளர்கள் வேலையை விட்டு செல்வது 25 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் வங்கி செயல்பாடுகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது' என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0n9h3syr&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: பரவலாக தனியார் துறை வங்கிகள் மற்றும் ஸ்மால் பைனான்ஸ் வங்கிகளில் பணியாற்றும் பணியாளர்கள் பல்வேறு பிரச்னைகள் காரணமாக, பணி விலகுவது 25 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. வங்கியின் செயல்பாடுகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இழப்பு ஏற்படுவதுடன் ஆட்சேர்ப்பு செலவுகளையும் வங்கிகளுக்கு அதிகரிக்கிறது. வாடிக்கையாளர் சேவைகளில் இடையூறு ஏற்படவும் இது வழிவகுக்கிறது. பணியாளர்கள் விலகலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இது, மனித வளச் செயல்முறை மட்டுமல்ல நிறுவனத்தின் வளர்சிக்கு உதவும் இலக்குகளுக்கும் தேவையானதாகும். வங்கி செயல்பாடுகளில் அபாயங்களை ஏற்படுத்துகிறது. நகைகளுக்கு கடன் வழங்குதல், டாப்-அப் கடன்கள் உட்பட அனைத்திலும் ரிசர்வ் வங்கி நடை முறைகளை பின்பற்ற வேண்டும். முறைகேடுகள் ஏதும் நடக்கிறதா என்பதை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

சாண்டில்யன்
டிச 30, 2024 20:06

ஸ்ரீமதி ஸ்ரீமதிஸ்ரீமதிஸ்ரீமதிஸ்ரீமதின்னு துடிச்சு காலமெல்லாம் மலையேறிவிட்டது பொள்ளாச்சின்னும் இவ்வளவு கூச்சல் எனோ இல்லை அண்ணா பல்கலைக்கழகம் சம்பவத்துக்கு மறுநாள் இன்னொன்னு சோளக்காட்டில பிணம்னு வந்ததை அரசும் எதிரிகளும் ஒன்றாய் சேந்து அமுக்கியது எனோ தெரியவில்லை


VSMani
டிச 30, 2024 13:54

தனியார் வங்கிகளில் பணி விலகல் 25% அதிகம் ரிசர்வ் வங்கி எச்சரிக்கை தனியார் வங்கிகளில் பணிப் பளு அதிகம். அரசு வங்கியில் பணிப் பளு குறைவு. தனியார் வங்கிகளில் சம்பளம், படி குறைவு . அரசு வங்கியில் சம்பளம், படி அதிகம் தனியார் வங்கிகளில் வேலை நிரந்தரம் அல்ல ஒருவரும் பெண் கொடுப்பதில்லை. அரசு வங்கியில் வேலை நிரந்தரம் ஒருவரும் பெண் தர மறுப்பதில்லை தனியார் வங்கிகளில் கடன் வசூல் செய்தே ஆகவேண்டும் கட்டாயம். அரசு வங்கியில் அபப்டி இல்லை. பிறகு எப்படி தனியார் வங்கிகளில் பணி விலகல் இருக்காது? ரிசர்வ் வங்கி தனியார் வங்கிகளை எச்சரித்து அரசு வங்கிகள் போல கை நிறைய சம்பளம் கொடுத்தால் ஒருவரும் பணி விளக்க மாட்டார்கள்.


சாண்டில்யன்
டிச 30, 2024 12:19

கற்றோர்க்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு


vadivelu
டிச 30, 2024 11:57

வேறு அல்ல வேலை கிடைக்கிறதோ. நல்லதுதான், வேலையில்லா திண்டாட்டம் இல்லை.


Sivagiri
டிச 30, 2024 11:29

அரசு வங்கிகளிலும் மேனேஜர்கள், லோன் ஆபீசர், டார்கெட் முடித்தால் இன்க்ரீமெண்ட், ப்ரோமோஷன் என்பதால், லோன்தேவை இல்லை என்றாலும் விடுவதில்லை, வலுக்கட்டாயமாக, புதிய லோன்கள், க்ரெடிட் கார்டுகள் திணிக்கப்படுகின்றன, கொஞ்ச நாளில் அவர் போயிடுவார், வேற ஆள் வந்தால் அகௌண்ட் லாக் செய்து அலைய விடுவார் . . .


ஆரூர் ரங்
டிச 30, 2024 10:55

கடன் வசூலிப்பதை தனியாருக்கு அவுட் SOURCE செய்து விட்டார்கள். ஷேர்மார்க்கெட் ஏறிய பின் வங்கிகளுக்கு டெபாஸிட் கிடைப்பது கஷ்டமாகிவிட்டது. தனியார் வங்கிகளின் போட்டி அதிகமாகி விட்டதால் கடன் கொடுத்தலிலும் டார்கெட் நெருக்கடி. முதல் தலைமுறை வெள்ளைக்காலர் ஊழியர்கள் இதற்கெல்லாம் பழக்கப்பட நாளாகும். மற்றபடி JOB HOPPING கலாச்சாரம் எல்லாத் துறைகளிலும் சகஜமாகிவிட்டது. HR டிபார்ட்மென்ட்க்கு ஓயாத நிரந்தர தலைவலி ஏற்படுகிறது.


தமிழ்வேள்
டிச 30, 2024 10:54

வெறிகொண்டு வேலையை சுமத்தினால் ஓடாமல் என்ன செய்வார்கள்? இன்சூரன்ஸ் மியூச்சுவல் fund என்று ஊரப்பட்டதையும் விற்கச்சொன்னால் எப்படி ? எட்டு மணிநேரம் மட்டுமே வேலை .....வங்கி தொழிலுக்கு ஆறரை மணிநேரம் மட்டுமே வேலை .நீங்கள் 13 மணிநேரம் வேலை வாங்கினால் அது தவறு தானே ? மேனேஜ்மேண்ட் அழுத்தத்தால், அரசியல்வாதி, திருடன் தெறுபொறுக்கிகளுக்கு லோன் கண்டமேனிக்கு தரவேண்டும் ..வசூல் எப்படி ஆகும் ? ஆனால் அதன் வசூலுக்கு பொறுப்பு ஊழியரா? மேனேஜ்மேண்ட்டுக்கு என்ன பொறுப்பு ? வங்கியில் எதற்கு புத்தாண்டு கொண்டாட்டம், ஆடல் பாடல், ஒரேமாதிரி டிரஸ் ? இதற்கு யார் செலவு? வாலண்டைன் டே கொண்டாட்டங்கள் வங்கிக்கு தேவையா ? எதெற்கு எடுத்தாலும் கேக் கட்டிங் ...நீங்கள் என்ன ஐரோப்பிய பிறவிகளா ? வெட்டி செலவு செய்வது ..அப்புறம் லபோ திபோ எட்ன்று அடித்துக்கொண்டு கதறுவது .....


Ramamurthy Srinivasan
டிச 30, 2024 09:48

ஆமாம், வேலையை விட்டு செல்வார்கள். காரணம் பிரைவேட் பாங்கில் ஒருவர் ரெண்டுபேருடைய வேலையை செய்யவேண்டும். அவர்களுக்கு வேலை பளுவு அதிகம். காலை 9 மணிக்கு சென்றால் இரவு 9 மணிக்குதான் திருப்பி வர முடியும். ஸ்கேல் 1 ஸ்கேல் 2 கிரேடில் உள்ளவருக்கு மத்தளத்திற்கு ரெண்டு பக்கமும் அடி என்பது போல அவர்கள் வேலை.


RAMAKRISHNAN NATESAN
டிச 30, 2024 09:27

ஒரு தனியார் வங்கி - ஐ சி ஐ சி ஐ, நான் கேட்காமலேயே எனக்கு கிரெடிட் கார்ட் அனுப்பியது .... நான் இதற்காக நடவடிக்கை எடுக்கும்படி ரிசர்வ் வங்கிக்கு புகார் செய்தேன் ... பிறகு அவ்வங்கி என்னை அழைத்துப்பேசி க்ரெடிட் கார்டை திரும்பப் பெற்றுக்கொண்டது ..... திரும்பக் கொடுத்துவிட்டதாக என்னையும் ஒப்புகை ஈமெயில் - CC to ரிசர்வ் வங்கி - செய்யச்சொன்னார்கள் ... பிறகு சில நாட்களில் ரிசர்வ் வங்கி எனக்கு மின்னஞ்சல் செய்தது .... அதில் அவர்கள் கிரெடிட் கார்ட் ஐ திரும்பப் பெற்றுக்கொண்டதால் கோராமலேயே வங்கி உங்களுக்கு அனுப்பியதற்காக அவ்வங்கி மீது நடவடிக்கை தேவையில்லை .... இதே விஷயத்தில் இனி புகார்தாரர் புகார் அளித்தால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று விளக்கம் இருந்தது இதுதான் ரிசர்வ் வங்கியின் மேலாண்மை .....


A.C.VALLIAPPAN
டிச 30, 2024 10:50

dear sir what is your prime objective . credit card has been issued without your concern . you made complaint . RBI advised related bank to withdraw the actiontake back the card matter is over. this is good job RBI done . but your ego is very high you want to Hang all the bank offiicer for the credit issue. have you seen Anna university girl sexually assaulted you can address this issue. Present government they will make you disappear.


RAMAKRISHNAN NATESAN
டிச 30, 2024 13:02

Sir, my concern was about my mental agony caused by the bank and I wanted RBI to warn that private bank, since I would have not been the only victim. Thanks for your response.


கிஜன்
டிச 30, 2024 09:11

உங்க அறிக்கையை நல்லா செக் பண்ணுங்க .... கடந்த 7-8 ஆண்டுகளாகவே இப்படித்தான் இருந்திருக்கும் .... வருஷா வருஷம் அல்வா கிண்டுறவரை மாத்தினாதான் விடிவுகாலம் ...


Duruvesan
டிச 30, 2024 11:06

மடரச டிகிரி எல்லாம் பேங்க் வேலை கெடைக்காது


சாண்டில்யன்
டிச 31, 2024 04:48

மடரச டிகிரி எல்லாம் பேங்க் வேலை கெடைக்காது வறதெல்லாம் EWS கோட்டாலதான் வருதுகள்


முக்கிய வீடியோ