உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டிரக் கவிழ்ந்ததால் தப்பிய 25 கோடி தேனீக்கள்

டிரக் கவிழ்ந்ததால் தப்பிய 25 கோடி தேனீக்கள்

வாஷிங்டன்: அமெரிக்காவில் விவசாயிகள், மகரந்த சேர்க்கைக்காக தேனீக்கள் வளர்ப்பவர்களின் சேவையைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இதனால், தேனீக்கள் வளர்ப்பு அங்கு ஒரு தொழிலாக உள்ளது. இவ்வாறு, 32,000 கிலோ எடையுள்ள தேனடைகளுடன் கூடிய டிரக் ஒன்று, அமெரிக்கா - வட அமெரிக்க நாடான கனடா எல்லையில் சென்று கொண்டிருந்தது. வாஷிங்டன் மாகாணத்தில் சென்று கொண்டிருந்த டிரக் திடீரென கவிழ்ந்தது. இதையடுத்து, அந்த டிரக்கில் இருந்த 25 கோடி தேனீக்கள் தப்பின.உடனடியாக, 'அந்தப் பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம்' என, போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். தேனீக்கள் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களின் உதவிகள் கோரப்பட்டன. இதனால், சில மணி நேரங்களில், அனைத்து தேனீக்களும், டிரக்கில் உள்ள தேனடைக்குள் வந்து சேர்ந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
ஜூன் 02, 2025 11:41

தப்பித்து சென்ற தேனீக்களை மீண்டும் பிடித்தார்களா? ஆச்சர்யமாக இருக்கிறது. அதேபோல சிறையிலிருந்து மற்றும் காவலர்களிடமிருந்து தப்பித்து செல்லும் குற்றவாளிகளை பிடிக்கமுடியுமா? தமிழகத்தில் ரொம்ப நாளாகவே வேங்கைவயல் தண்ணீர் தொட்டி குற்றவாளியை தேடுகிறோம். படவாப்பய, சிக்க மாட்டேன் என்கிறான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை