உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தலில் போட்டியிடாத 334 கட்சிகள் பதிவு நீக்கம்; 22 தமிழக லெட்டர் பேடு கட்சிகளும் சிக்கின

தேர்தலில் போட்டியிடாத 334 கட்சிகள் பதிவு நீக்கம்; 22 தமிழக லெட்டர் பேடு கட்சிகளும் சிக்கின

புதுடில்லி,:நாடு முழுதும், ஆறு ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத, 334 கட்சிகளின் பதிவை தேர்தல் கமிஷன் நீக்கியுள்ளது. அலுவலகம் கூட இல்லாமல், 'லெட்டர் பேடு' கட்சிகளாக செயல்பட்டு வந்த, தமிழகத்தை சேர்ந்த 22 கட்சிகளும் இதில் அடங்கும். அரசியல் கட்சிகள், 1951ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 29ஏயின் கீழ் பதிவு செய்யப்படுகின்றன. பதிவு செய்த கட்சிகள் வரிவிலக்கு போன்ற பல சலுகைகளை பெறுகின்றன. தேர்தல் கமிஷனில் பதிவு செய்துள்ள, 2,800க்கு மேலான கட்சிகளில் பல அங்கீகாரம் பெறாதவை. பதிவு செய்தும் அங்கீகாரம் பெறாத கட்சிகள், ஆறு ஆண்டுகளுக்குள் லோக்சபா, சட்டசபை, இடைத்தேர்தல் என ஏதேனும் ஒரு தேர்தலில் போட்டியிட வேண்டியது கட்டாயம். ஆனால், 345 கட்சிகள், 2019 முதல் எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை என்பதை தேர்தல் கமிஷன் கண்டறிந்தது. பதிவு செய்த முகவரியில் அக்கட்சிகள் செயல்படவில்லை என்பதும் தெரிய வந்தது. அரசியல் களத்தை சுத்தம் செய்யும் விதமாக, அக்கட்சிகளை நீக்கும் நடவடிக்கையை, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார், தேர்தல் கமிஷனர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் அடங்கிய குழு துவங்கியது. முதலில், அக்கட்சிகளுக்கு ஜூன் மாதம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பின்னர் அந்தந்த மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கட்சிகள் விளக்கம் அளிக்க வாய்ப்பு தரப்பட்டது. ஆறு ஆண்டுகளில் எந்த தேர்தலிலும் போட்டியிடாதது, ஆண்டு கணக்கு சமர்ப்பிக்காதது, தலைமையக முகவரி, நிர்வாகிகள் விவரங்கள் புதுப்பிக்காதது ஆகியவற்றுக்கு கட்சிகள் கொடுத்த விளக்கம் திருப்தி தராததால், பதிவு செய்தும் அங்கீகாரம் பெறாத 334 கட்சிகளை, தேர்தல் கமிஷன் நீக்கியுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது. அந்த கட்சிகளின் பட்டியலையும் வெளியிட்டது. தமிழகத்தில் அண்ணா-எம்.ஜி.ஆர்----.-ஜெயலலிதா திராவிட முன்னேற்ற கழகம், அப்பா-அம்மா மக்கள் கழகம், இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி உட்பட 22 கட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. 'பதிவு செய்து, ஆனால் செயல்படாமல் உள்ள கட்சிகளால் தேர்தல் சீர்திருத்தத்துக்கு இடையூறு ஏற்பட வாய்ப்பு இருப்பதால், இக்கட்சிகள் பதிவு செய்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன' என தேர்தல் கமிஷன் தெரிவித்தது. இதையடுத்து, அங்கீகாரம் பெறாத கட்சிகளின் எண்ணிக்கை 2,854ல் இருந்து, 2,520 ஆக குறைந்துள்ளது. பதிவு செய்து, அங்கீகாரமும் பெற்றுள்ள பட்டியலில் 6 தேசிய கட்சிகளும், 67 மாநில கட்சிகளும் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

PTSridharan
ஆக 10, 2025 18:12

multi party system of democracy is grossly misy used and abused in our democratic set up....Legislatures and Parliamen , though can be bicameral...many upper houses have been abolished. in similar terms, the multi party system can be cut to size and number of parties can be restricted and limited ....if need be .....political will be converged and amendments suitably made in the statute. The growth of such parties are worse than mushroom growth.....castebased political parties shall not be patronised and or allowed to function ,.jaihind.


பேசும் போது
ஆக 10, 2025 13:04

பதிவு செய்யப்பட்ட கட்சிகள் எல்லாம் அனைத்து தேர்தல்களிலும் கண்டிப்பாக போட்டியிட வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்க வேண்டும்..... அதை செய்தாலே... தேர்தல் கூட்டணி என்று இவர்கள் அடிக்கும் கூத்துக்கள் பாதி காணாமல் போய் விடும்.... அதோடு ஒரு கட்சியின் சார்பில் வேட்பாளராக வேண்டும் என்றால்... குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் அந்த கட்சியில் உறுப்பினராக இருந்து இருக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்க வேண்டும். அப்படி செய்தால் பதவிக்காக கட்சி மாறும் அவலம் நடக்காது.


எஸ் எஸ்
ஆக 10, 2025 11:39

சுப்பிரமணியம் சுவாமியின் ஜனதா கட்சி, RM வீரப்பனின் எம்ஜிஆர் கழகம் போன்ற கட்சிகள் இன்னும் இருக்கின்றனவா?


GMM
ஆக 10, 2025 08:41

பதிவு செய்த கட்சிகள் வரிவிலக்கு போன்ற பல சலுகைகளை பெறுகின்றன. தேர்தலில் போட்டி போட வில்லை. 334 கட்சிகள் பதிவு நீக்கம். சரி, வரி விலக்கு பெற்ற நிதியை, அசையா சொத்தை முடக்க வேண்டும். சட்ட நடவடிக்கை தனியாக துவங்க வேண்டும். கட்சிகள் நீதிமன்றம் போல் தேர்தல் ஆணையம் கண்டு அஞ்சி நடுங்க வேண்டும்.


Padmasridharan
ஆக 10, 2025 08:38

வரவேற்கத்தக்கது சாமி. செய்திகள்ல தெரியற 2-4 கட்சிகளின் பெயர்கள் வோட்டு போடப்போகும்போது 20 க்கும் மேற்பட்ட கட்சியின் சின்னங்கள் காணப்படுகின்றன. இவங்கெல்லாம் எங்க இருந்தாங்க, என்ன பன்றாங்கண்ணே தெரியாது. இதுல வேற NOTA எதற்கும் பயன்படாத வோட்டு. வோட்டு பொத்தான அழுத்தினதும் உடனே சத்தம் வருது, ஆனா விளக்கு உடனே அணைய மாட்டேங்குது.


visu
ஆக 10, 2025 06:42

இந்த போலி மது ஒழிப்பு போராளி நந்தினி ஆனந்தன் என்று ஒரு திமுக அல்லக்கை கட்சி நடத்துவதா சொல்லிட்டிருந்துதே அந்த கட்சியை தடை செய்யலியா இவர் திமுக ஆட்சில இல்லை என்றால் மாநில அரசை எதிர்த்து போராடுவார் திமுக ஆட்சிக்கு வந்து விட்டால் மோடியை எதிர்த்து போராடுவார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை