உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தெருநாய்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: 3 நீதிபதிகள் அமர்வு நாளை விசாரணை

தெருநாய்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: 3 நீதிபதிகள் அமர்வு நாளை விசாரணை

புதுடில்லி: டில்லியில் தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைமை நீதிபதி கவாயிடம் விலங்கின ஆர்வலர்கள் முறையிட்டனர். இதனை பரிசீலனை செய்வதாக அவர் உறுதியளித்துள்ளார். இந்நிலையில், 3 நீதிபதிகள் அமர்வு முன்புஇந்த வழக்கு நாளை ( ஆக., 14) விசாரணைக்கு வர உள்ளது.நாய்க்கடி சம்பவங்கள் தொடர்பாக, நாளிதழ்களில் வந்த செய்தியின் அடிப்படையில் தானாக முன்வந்து வழக்குப் பதிந்து சுப்ரீம் கோர்ட் விசாரித்து வருகிறது. இந்த மனு, நீதிபதிகள் ஜே.பி.பர்த்திவாலா, நீதிபதி ஆர்.மஹாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது, ' 'டில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில், குடியிருப்பு பகுதிகளில் இருந்து தெருநாய்களை அப்புறப்படுத்தி காப்பகங்களில் அடைக்க வேண்டும். இதை தடுப்பவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். நாய்கள் இல்லாத தெருக்களை உருவாக்க வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இதற்கு நாடு முழுவதும் பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்த போதும், விலங்கின ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. திரை நட்சத்திரங்கள், பிரபலங்கள் எதிர்த்தனர். முன்னாள் மத்திய அமைச்சரும் விலங்கின ஆர்வலருமான மேனகா கூறுகையில், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு நடைமுறை சாத்தியம் இல்லாதது. போதிய நிதியில்லை. சமநிலையை பாதிக்கும் எனத் தெரிவித்தார்.பீட்டா அமைப்பைச் சேர்ந்த டாக்டர் கூறுகையில், ஏராளமான நாய்களை இடமாற்றுவது என்பது அறிவியல்பூர்வமாக சாத்தியமில்லை என தெரிவித்து இருந்தார்.இது குறித்து சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாயிடம் முறையிட்டனர். இதனை பரிசீலனை செய்வதாக தலைமை நீதிபதி அப்போது உறுதியளித்தார்.இந்நிலையில், இந்த வழக்கு 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்வி அஞ்சனேரியா அமர்வு முன்பு நாளை விசாரணைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 42 )

என்றும் இந்தியன்
ஆக 14, 2025 16:16

தெரு நாயும் அரசியல்வாதியும் ஒன்றே தான். இதோ இதன் அர்த்தம். ஆகவே அவர்களுக்கு எல்லாவித சுதந்திரம் உள்ளது. எப்போது எப்படி எவ்விடத்திலும் வேண்டுமானாலும் ஊளையிடலாம். எந்த நாய் எந்த நாயிடமும் உறவு கொள்ளலாம். எந்த நாய் யாரை வேண்டுமானாலும் கடிக்கலாம். எந்த நாயும் தனக்கென்று ஒரு இடத்தை வைத்துக்கொண்டு அதில் மட்டும் தனக்கு என்ன தோணுதோ அதை மட்டுமே செய்யும். இன்னும் நிறைய இருக்கின்றது அப்படி.


KRISHNAN R
ஆக 14, 2025 09:09

எப்படியோ போங் க...... என்று கடைசியில்...அம்போ தான்


MUTHU RAJA
ஆக 14, 2025 06:49

நாய்கள் தொல்லை அதிகரித்து கொண்டே செல்கிறது, இது நல்ல முடிவு, எதிர்ப்பவர்கள்,அனைத்துக்கும் பொறுப்பு ஏற்றுக்கொல்வார்களா?


Madhan Kumar
ஆக 14, 2025 00:15

தெரு நாய்களால் மக்களுக்கு பல இன்னல்கள் ஏற்படுகிறது உணர்ந்து அவற்றை வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்துமாறு மதிப்பிற்குரிய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது வரவேற்கத்தக்கது. அதே வேலையில் மது பழக்கத்தினால் நாட்டில் கொலை கொள்ளை கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது பல குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றது. பலரது மது பழக்கத்தினால் சிறு குழந்தைகள் முதல் வயதான பெண்கள் வரை பாதிக்கப்படுகிறார்கள் அவற்றையும் இந்தியாவில் தடை செய்யலாமே


Ramesh Sargam
ஆக 13, 2025 21:26

சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் கடந்த ஜூலையில் இருந்து, இம்மாதம் 10ம் தேதி வரை, 30,000 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என, பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதன்படி, 3.10 லட்சம் பேர் வரை, இதுவரை பாதிக்கப்பட்டிருக்க கூடும் என கணக்கிடப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் தினம் தினம் எத்தனை ஆயிரம் பேர் தெருநாய்க்கடிக்கு ஆளாகிறார்கள் என்பதை நீதிபதி அவர்கள் கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ப ஒரு நல்ல முடிவை எடுக்கவேண்டும்.


Sukumar R
ஆக 13, 2025 21:00

இந்தியாவில் பிறந்து விட்டதாலேயே தெரு நாய்கள் தெருவில் கிடந்து பிச்சை எடுத்து வாழ வேண்டுமா?. அவற்றிற்கு உரிய மரியாதை அளிக்க வேண்டாமா. அவற்றை குளிர் மழையில் இருந்து பாதுகாத்து காப்பகங்களில் வையுங்கள். அவற்றிற்கான உணவை PETA, மற்றும் விலங்கின ஆர்வலர்கள் கொடுக்கட்டும். பிரியமானவர்கள் ஒன்றை தத்து எடுத்துச் செல்லட்டும். அவர்க வீட்டிற்குள் வைத்து பார்க்கட்டும்.


Gokul Krishnan
ஆக 13, 2025 20:45

கோடி கணக்கான ரூபாய் மதிப்பு உள்ள நோட்டுக்களை எரித்த ஒரு நீதிபதி மேல் இத்தனை மாதங்களாக நடவடிக்கை இல்லை ஒரு எஃகு பை ஆர் கூட இல்லை ஆனால் நாடு முழுவதும் உள்ள தெரு நாய்களை எட்டு வாரங்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும் சபாஷ் சூப்பர் நீதிபதிகள் .. இதற்கு எத்தனை கோடி ரூபாய் உள்ளே போனதோ வெளி நாட்டு நாய் வளர்ப்பு நிறுவனங்கள் இடம் இருந்து


vivek
ஆக 14, 2025 04:26

ரெண்டுக்கும் என்ன சம்பந்தம் கோகுல


சந்திரசேகர்
ஆக 13, 2025 20:39

ரோட்டில் பைக்கில் செல்லும் போது திடீரென வந்து விழும் நாயாலும் பைக்கை விரட்டி கொண்டே வரும் நாயாலும் ஏற்படும் விபத்து மற்றும் இறப்புகளுக்கு யார் பொறுப்பு


C.SRIRAM
ஆக 13, 2025 20:38

வழக்கம் போல இம்மாதிரி வழக்குகளுக்கு ஏன் இவ்வாளவு முக்கியத்துவம் ?. நாட்டில் எத்தனையோ வழக்குகள் வருடக்கணக்கில் இழுத்து கொன்டே இருக்கிறது மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் எந்த விலங்குக்கும் இரக்கம் தேவையில்லை . ஜனாதிபதியின் கேள்விகளுக்கு எப்போது பதில் அனுப்புவார்கள் என்பதை தலைமை நீதிபதி அறிவித்தால் நலம் .


V RAMASWAMY
ஆக 14, 2025 09:10

நடவடிக்கை எடுத்து மக்கள் உயிர்களைக் காக்கும் பொறுப்பற்ற அதிகாரிகளால் ஏற்பட்ட விளைவு. மக்கள் உயிர் முக்கியமல்லவா? நாய்கள் தான் முக்கியம் என்றால் ஆர்வலர்கள் என்று பீற்றிக்கொள்ளும் நபர்கள் வீட்டிற்கு ஐந்து தெரு நாய்களை வளர்க்கலாமே?


தமிழ்வேள்
ஆக 13, 2025 20:29

பொதுமக்கள் தன்னிச்சையாக தெருநாய்களை கொன்று அழிக்க துவங்கினால், பீட்டா,நாய் பிரியர்கள்,மண்டையை ஆட்டும் மாண்புமிகு கோர்ட்,ஒவ்வொரு தெரு நாய்க்கும் ஒரு ஆயுதம் தாங்கிய காவலரை நியமிக்குமா?....கடிக்கின்றன குரைக்கின்ற துரத்துகின்ற தெருநாய்களை கொல்வது தவறே அல்ல...


முக்கிய வீடியோ