உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவின் சாதனை உலகளாவிய கவனம் பெற்றது: ஜெய்சங்கர் பெருமிதம்

இந்தியாவின் சாதனை உலகளாவிய கவனம் பெற்றது: ஜெய்சங்கர் பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: இந்தியாவின் முன்னேற்றம் மற்றும் சாதனைகள் உலக அளவில் கவனம் பெற்றுள்ளது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.பெங்களூருவில் நடந்த கருத்தரங்கில், ஜெய்சங்கர் பேசியதாவது: 10 ஆண்களில் இந்தியா உலக அளவில் ஒரு பெரிய வீரராக கருதப்படுகிறது. இந்தியாவின் முன்னேற்றம் மற்றும் சாதனைகள் உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில்வே ஏதுவாக இருந்தாலும் உலக தரத்தில் கூட தனித்த நிற்கின்றன. உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவின் தொழில்நுட்பம், நிலவின் தெற்கு பகுதியில் சந்திரயான்-3 விண்கலத்தில் தரையிறங்கி சாதனை படைத்தது உள்ளிட்டவை உலக அளவில் இந்தியாவுக்கு மரியாதையை அதிகரிக்க செய்தது. திறமையான இந்தியர்களை மற்ற நாடுகள் தேடி வருகிறது. மத்திய கிழக்கு நாடுகளுடன் உறவுகள் வலுப்பெற்றது. எங்கள் வரலாறு, கலாசாரம் மற்றும் பாரம்பரியம் நம்மை தனித்து நிற்க வைக்கிறது. பழங்கால கலாசாரங்கள் வெற்றிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியது. பல துறைகள் பல்வேறு சாதனைகளை படைத்தது. ஒவ்வொரு அன்னிய நேரடி முதலீட்டு பேச்சுவார்த்தையிலும், நாங்கள் கடுமையாக சிந்திக்கிறோம். தேசிய பாதுகாப்பு, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றை உருவாக்குவதில் நாங்கள் மிகவும் அக்கறை கொண்டுள்ளோம். இன்று, பாரத் பிராண்ட் மிக பெரியதாக கருதப்படுகிறது. ஒரு லட்சிய பிராண்டாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Rasheel
நவ 24, 2024 13:19

இந்தியா பாஸ்போர்ட்டின் மதிப்பு பல மடங்கு கூடி இருக்கிறது. பொருளாதாரத்திலும், ராணுவ பலத்திலும், உலக அமைப்புகளின் மரியாதையை பெறுவதிலும் இந்தியா கடந்த 11 ஆண்டுகளில் முன்னிலை வகிக்கிறது. ஆனால் ஏழை பணக்கார வருமான வித்தியாசத்தில் அரசாங்கம் உழைக்க வேண்டியுள்ளது. அதற்கு manufacturing உற்பத்தி வளர்ச்சி மிக முக்கியம்.


venkatan
நவ 24, 2024 11:57

தேர்தல் முடிவுகளை இந்தியா, அமெரிக்காவை விட விரைவில் வெளியிடுகிறது என்று எலன் ம்யூசிக் கூறுகிறார். அங்கு டிசம்பர் வரை தேர்தல் நிறைவு நடவடிக்கைகள் தொடருமாம்


SUBBU,
நவ 24, 2024 10:31

Watch how PM Modis one decision benefited not just India, but the entire world. His move to purchase oil from Russia helped control the global oil price hike, saving the world from disastrous inflation.


கிஜன்
நவ 24, 2024 09:33

உண்மைதான் ....அதுபோல போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து இந்தியர்களை வரவழைத்த விதமும் ஒரு மரியாதையை ஏற்படுத்தி உள்ளது .... வெளியுறவுதுறையில் பல சாதனைகளை செய்துள்ளீர்கள் .... பாராட்டுக்கள் ....இம்ரான் கானே உங்களை புகழ்ந்துதள்ளியிருக்கிறார்.... இந்தோனேசிய அதிபர் புகழ்பெற்ற உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி என்று பிரதமர் முன்னிலையில் கூறுகிறார் ...வேறு என்ன பாராட்டு வேண்டும் ....


அப்பாவி
நவ 24, 2024 08:08

உலகில் மத்த நாடுகளும்.இதே அளவில் வளர்ச்சி அடைந்திருக்கிருக்கின்றன. இவிங்க வெறும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுடன் கம்பேர் செய்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.


Srinivasan
நவ 24, 2024 09:24

india is going to be 4th largest economy, acknowledged by IMF


Admission Incharge Sir
நவ 24, 2024 10:30

உன் லெவெல் அவ்வளவுதான் நைனா. நீயெல்லாம் கும்மிடிப்பூண்டி கூட தாண்டாத கட்சிக்காரன். பாகிஸ்தானையும், ஆப்கானிஸ்தானையும் விட்டால் உனக்கு உலகத்தில் என்ன தெரியும். நீ உன் லெவெலில் சிந்திக்கிறாய், ஜெய்சங்கர் ஜி அவர் லெவெலில் சிந்திக்கிறார்.


Kalyanaraman
நவ 24, 2024 08:01

உண்மைதான். இந்தியர்களும் உலகமும் வியக்கும் வண்ணம், இதுவரை பாரதம் கண்டிராத வளர்ச்சியை குறுகிய காலத்தில் அடைந்து விட்டது. மேலும் அடைந்து கொண்டிருக்கிறது. இதற்கு மத்திய பாஜக வின் தன்னலமற்ற - ஊழலற்ற வளர்ச்சியை நோக்கிய அயராத உழைப்பே காரணம் என்றால் மிகையில்லை. ஜெய் பாரதம் விஜயபாரதம் ¡ பாரத் மாதா கி ஜே .


நிக்கோல்தாம்சன்
நவ 24, 2024 08:00

எந்த கருத்தரங்கில் ? அதனையும் வெளியிட்டிருக்கலாம்


Ghori Muhammad,Tanjore
நவ 24, 2024 10:00

நுனிப்புல் மேயாமல் செய்தியை முழுவதுமாக படித்து கருத்தை பதிவிடவும்.


RAMAKRISHNAN NATESAN
நவ 24, 2024 14:17

பாரதம் துக்கடா துக்கடா வாக போகணும் ன்னு ஆசைப்படும் ........ அவங்க கேட்டதுல தப்பில்ல ..... எந்த அம்சத்தைப்பற்றிய கருத்தரங்கு என்னும் விபரம் செய்தியில் இல்லை ......


புதிய வீடியோ