உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்கிரசுடன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை; அறிவித்தார் கெஜ்ரிவால்

காங்கிரசுடன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை; அறிவித்தார் கெஜ்ரிவால்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கப் போவதில்லை என ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார்.டில்லியில் முதல்வர் ஆதிஷி தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. 70 சட்டசபை தொகுதிகளுடைய இங்கு, அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தேர்தல் நடக்கிறது. முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆளும் ஆத் ஆத்மி, தற்போதே தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9xzssnw9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில், எதிர்க்கட்சியான பா.ஜ.,வும் முனைப்பு காட்டி வருகிறது. இந்த சூழலில், டில்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் கூட்டணிக்கான இறுதிக்கட்ட ஒப்பந்தத்தில் உள்ளன. காங்கிரசுக்கு 15 இடங்களும், மற்ற இண்டியா கூட்டணி கட்சியினருக்கு 1 அல்லது 2 இடங்களும், மற்றவை ஆம் ஆத்மி கட்சியும் போட்டியிடும் என தகவல் பரவியது. இந்த தகவலை ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் மறுத்துள்ளார். அவரது அறிக்கை: டில்லியில் ஆம் ஆத்மி கட்சி தனது சொந்த பலத்தில் சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறது. காங்கிரசுடன் கூட்டணி அமைய வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

ngm
டிச 12, 2024 09:42

ஹும் எதுக்கும் இப்பவே EVM மெஷின் மேல் பழி போட்டு வையும்


M Ramachandran
டிச 11, 2024 20:42

இஙகு உள்ள கல்லுளி மங்க்கன்களையே தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட கூடியவர் நம் கெஞ்சிரிவால்


Nallavanaga Viruppam
டிச 11, 2024 16:03

காங்கிரெஸ்ஸை எதிர்த்து போராடி பின்பு காங்கிரஸ் கூட்டணியில் பதவி, பிறகு விலகல், மறுபடியும் சேர்த்துவிட்டு இப்போ பிரிவது. சந்தர்ப்பவாத அரசியலா அல்லது சந்தர்ப்பமே அரசியலா?


Bhakt
டிச 11, 2024 14:16

இந்த மூஞ்சிக்கே அந்த மூஞ்சிய பிடிக்கலையே...


Sridhar
டிச 11, 2024 13:38

கூட்டணி வச்சாலும் ஆப்பு, வைக்கலனாலும் ஆப்பு... பயபுள்ள என்னதான் செய்வான்?? பாவம் வாழ்வா சாவா பிரச்சனை வேற இதே ரேட்டுல போனா பஞ்சாபும் கையவிட்டு போயிரும், அப்புறம் என்ன பண்றது? இவ்வளவு தூரம் அந்நிய சக்திகளோடு சேர்ந்து பெரிய பெரிய திட்டமெல்லாம் போட்டது, பத்து வருசத்துல கவுரறுத்துக்குத்தானா?? சே எல்லாம் இந்த மோடி னாலதான்


rajan_subramanian manian
டிச 11, 2024 13:00

அய்யா தருமதுரை, ஏதாவது போட்டுக்குங்க.நாங்க இந்தமாதிரி எல்லா மாநிலக்கட்சிகளிடமும் எதாவது கிடைப்பதை வாங்கிக்கொண்டு மோடி ஒழிக என்று சட்டசபையில் மற்றும் மாநிலங்களவையில் அல்லது எதாவது ஒரு முட்டுச்சந்தில் கூவி எங்கள் வயிற்றை கழுவிக்கொள்வதை கடந்த பத்து வருடங்களாக விடாமல் செய்துவருவதை பார்த்தாவது எதாவது போட்டுக்கொடுங்கள்.நாங்கள் எப்படி கூவுவோம் என்பதை தமிழக சட்டசபையில் vistor பாஸ் வாங்கி கண்டுகழிக்கவும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 11, 2024 11:57

ஆம் ..... ஆம் ஆத்மீ, திரிணாமூல் மட்டுமல்ல ..... திமுகவும் ஒன்றிய அளவில் சம்பாதிக்க விரும்புகிறது .... கட்சித் தலைமைக்கே கூட, சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பெறுவோம் என்கிற நம்பிக்கை குறைந்து வருகிறது .... இனி காங்கிரசை உதறிவிட்டு வர திமுகவை பாஜக வற்புறுத்தும் ...... அதற்கான வேலைகள் ஆரம்பமாகிவிட்டன ..... எத்தனை நாளுக்குத்தான் இருட்டில் சந்தித்து கைகோர்ப்பு, கால்கோர்ப்பு செய்வது ??


பேசும் தமிழன்
டிச 11, 2024 19:01

என்ன இருந்தாலும்....நீங்கள் இருக்கும் வரை .. ...உங்கள் பங்காளி கட்சிக்கு எந்த கவலையும் இல்லை.....அது தான் பத்து தோல்வி பழனி ஏற்கெனவே சொல்லி விட்டாரே ....திமுக எங்கள் பங்காளி கட்சி என்று .....பிறகென்ன .... ஸ்வீட் எடு கொண்டாடு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை