உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹாரில் 35 லட்சம் வாக்காளர்கள் நீக்க நடவடிக்கை: தேர்தல் ஆணையம் தீவிரம்

பீஹாரில் 35 லட்சம் வாக்காளர்கள் நீக்க நடவடிக்கை: தேர்தல் ஆணையம் தீவிரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பீஹாரில் 35 லட்சம் வாக்காளர்களை தேர்தல் ஆணையம், வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்குகிறது.பீஹார் மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அதற்கான நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக உள்ளது. இதையடுத்து, அங்கு சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை தேர்தல் ஆணையம் தொடங்கி நடத்தி வருகிறது.தேர்தல் ஆணையத்தின் இந்த சிறப்பு நடவடிக்கையை காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட பல கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. வீடு, வீடாக சென்று நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் போது, நேபாளம், வங்கதேசம், மியான்மர் உள்ளிட்ட அண்டை நாடுகளைச் சேர்ந்தவர்கள் பெயர்கள் இருப்பது கண்டறியப்பட்டது.முழு விசாரணைக்கு பின்னர், அவர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவர் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. இந் நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளின் விளைவாக, 35 லட்சத்துக்கும் அதிகமான பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு பணிகள் மூலம் உயிரிழந்த 12.5 லட்சம் வாக்காளர்கள் (1.59 சதவீதம்) பெயர்கள் பட்டியலில் இன்னமும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 17.5 லட்சம் (2.2 சதவீதம்) பேர் பீஹாரில் இருந்து நிரந்தரமாக வெளியேறிவிட்டதும் தெரிய வந்துள்ளது. இது தவிர, 5.5 லட்சம் (0.73 சதவீதம்) வாக்காளர்கள் பெயர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.இந்த கணக்கீட்டின் படி, ஒட்டுமொத்தமாக 35.5 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுகின்றனர். இது ஒட்டு மொத்த வாக்காளர் பட்டியலில் 4.5 சதவீதம் ஆகும். ஜூலை 25ம் தேதிக்குள் திருத்தப் பணிகளை நிறைவு செய்ய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Sridhar
ஜூலை 15, 2025 15:02

அவ்வளவு வெளிநாட்டவர் இருக்கிறார்கள் என்று ஒரு அரசு இயந்திரமே கூறும்போது உள்துறை அமைச்சகம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. இப்போது பத்து லச்சம் பேர் இருந்தால் ஒரு தலைமுறைக்கு பிறகு அவர்கள் ஒரு கோடிக்கு மேல் இருப்பார்கள். இது தேர்தலை மட்டும் பாதிக்கும் விசயம் அல்ல. பாரதத்தின் பண்பாடை கலாச்சாரத்தை சீர்குலைத்து நாட்டின் சரித்திரத்தையே உருக்குலைப்பதுடன் இம்மண்ணின் மைந்தர்களையே அடிமைப்படுத்தும் அபாயம் நம் முன்பே நிகழ்ந்துகொண்டிருக்கிறது.


பெரிய குத்தூசி
ஜூலை 15, 2025 14:19

தமிழகத்தில் சுமார் 15 லட்சம் பங்களாதேஷ் மற்றும் ரோஹிங்கிய முஸ்லீம் கள்ள குடியேறிகள் உள்ளனர். சென்னை புறநகர் மற்றும் திருப்பூர். கோவையில் சுமார் 12 லட்சம் வெளிநாட்டினர் கள்ளக்குடியேறிகள் ஆதார், வோட்டர் அட்டை, ரேஷன் கார்டு என வைத்து உள்ளனர். இவர்களுக்கு அந்தந்த ஏரியா திமுக கட்சியின் வட்ட, மாவட்ட செயலாளர், காவல் துறை அதிகாரிகள் ஆசியோடு வசித்து வருகின்றனர். வரும் 2026 சட்டசபை தேர்தலுக்குள் வெளிநாட்டினர் எண்ணிக்கை 25-30 லட்சம் அதிகரிக்க திமுக தமிழக அரசு கள்ள குடியேறிகள் முகவர்களை அமர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. தேர்தல் கமிஷன் தமிழ்நாட்டிலும் கள்ள குடியேறிகள் வாக்குகளை வரும் ஜனவரிக்குள் நீக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூலை 15, 2025 14:13

தமிழகத்தில் அதைச்செய்ய ,, தே ஆணையம் தயங்குவது ஏன் >>>> ஓ, திமுகவுடன் 2026 முதல் பாஜக கூட்டணி வருதோ >>>>


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூலை 15, 2025 14:42

பாஜக + திமுக கூட்டணி .....


rajasekaran
ஜூலை 15, 2025 11:29

இது ரொம்ப ரொம்ப கம்மி. கோடி கணக்கில் வெளி நாட்டவர்கள் இருக்கிறார்கள். என் தேர்தல் ஆணையம் பயப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. மேலும் கண்டறியப்பட்ட அவர்களை உடனே நாடு கடத்த வேண்டும்.


உண்மை கசக்கும்
ஜூலை 15, 2025 10:27

தமிழகத்தில் அவர்கள் எவ்வளவு


GMM
ஜூலை 15, 2025 10:25

Nativity, birth death, School leaving certificate are issued based on original records. One person can get one certificate. If the commission used to verify voter ID based on a certificate, the accuracy will be more. Aadhaar, pan, ration Card and previous voter ID are proof of identification. A person can get more than one Aadhaar, ration card etc. or an illegal person can get adhaar because no verification from original records. A lawyer doesnt understand the difference between a certificate and the proof of identification. Correct?


shyamnats
ஜூலை 15, 2025 09:03

வரவேற்க தக்க இது போன்ற நடவடிக்கை நாடு முழுவதும் - மேற்கு வங்காளம், கேரளா, மகாராஷ்டிரம் போல அணைத்து மாநிலங்களிலும் - நடத்த பட்டு போலி வாக்காளர்கள் நீக்க படவேண்டும். இந்த ஆக்கிரமிப்பாளர்களுக்காக ஏதேனும் அரசியல் வியாதிகள் துணை போவார்களானால் அவர்களையும் தேச நலனை கருதி, விசாரணை செய்து தண்டனைக்கு உட்படுத்த வேண்டும்.


SUBBU,MADURAI
ஜூலை 15, 2025 08:57

Bihar voter list is inflated by 35 lakh? Bangladeshis? Ghost voters? Pakistanis? If Election commission wants to investigate why is deep state Yogendra Yadav going to Supreme Court? Will Supreme Court side with Bangladeshis again?


K Seetharaam
ஜூலை 15, 2025 08:47

Very good initiative. Illegal Bangladeshies, Rohinyas should be sent back to their country.


SANKAR
ஜூலை 15, 2025 08:55

why govt permitted a huge 15 lakhs to live illegally in Bihar for so long? for the past decade bjp coalition ruled for most of time.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை