உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காருக்குள் சிக்கி மூச்சு திணறி குழந்தைகள் 4 பேர் உயிரிழப்பு; ஆந்திராவில் சோகம்!

காருக்குள் சிக்கி மூச்சு திணறி குழந்தைகள் 4 பேர் உயிரிழப்பு; ஆந்திராவில் சோகம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அமராவதி: ஆந்திராவில் விஜயநகரம் மாவட்டத்தில் விளையாடி கொண்டிருந்த குழந்தைகள் 4 பேர் காருக்குள் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகரம் மாவட்டத்தில் காருக்குள் அமர்ந்து குழந்தைகள் 4 பேர் விளையாடி கொண்டு இருந்தனர். அப்போது திடீரென்று கதவு மூடிக் கொண்டு திறக்க முடியாததால் 4 பேரும் உயிரிழந்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ynppgfnw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=010 வயதுக்குட்பட்ட நான்கு குழந்தைகளும் நீண்ட நேரம் காருக்குள் சிக்கி, மூச்சு திணறி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் உதய்,8, சாருமதி,8, சாரிஷ்மா,6, மானஸ்வி,6, என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. நீண்ட நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால், அவர்களின் பெற்றோர் அவர்களைத் தேடத் தொடங்கினர். அப்போது குழந்தைகள் காருக்குள் சிக்கி மூச்சு திணறி உயிரிழந்ததை அறிந்து, அதிர்ச்சியில் உறைந்தனர்.

3 பேர் பலி

அதேபோல், ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் மழைநீர் நிரம்பிய குழியில் மூன்று குழந்தைகள் மூழ்கி இறந்தனர். இறந்தவர்கள் ஷாலினி, 5, அஸ்வின், 6, மற்றும் கவுதமி, 8 என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

aaruthirumalai
மே 19, 2025 21:28

இப்ப உள்ள பெண்களின் அலட்சியம் உச்ச கட்டத்தில் உள்ளது. பெரும்பாலும்.


Rathna
மே 19, 2025 11:55

பெற்றோர்களின் கவன குறைவு.


hasan kuthoos
மே 19, 2025 11:47

பாவம் ஒன்றும் அறியா குழந்தைகள், அந்த நேரத்தில் என்ன பாடு பட்டிருப்பார்கள் , நினைத்தாலே நெஞ்சம் கனக்கிறது , பெற்றோர்கள் மனம் அமைதி அடைய இறைவனிடம் இறைஞ்சுவோமாக


BALACHANDRAN
மே 19, 2025 11:33

மனசுக்கு சங்கடமாக இருக்கிறது எதற்காக இந்த பிறப்பு எதற்காக இந்த இறப்பு


ديفيد رافائيل
மே 19, 2025 10:21

பெற்றவர்களின் அஜாக்கிரதை சிறுவர்களை தனியாக கார் மற்றும் lift போன்ற இடங்களில் அனுமதிக்க கூடாதுங்குற அறிவு இருக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை