உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காரில் மூச்சுத்திணறி 4 குழந்தைகள் பலி

காரில் மூச்சுத்திணறி 4 குழந்தைகள் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அம்ரேலி: குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள ரந்தியா என்ற கிராமத்தில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஏழு குழந்தைகள். குழந்தைகளை வீட்டில் விட்டு விட்டு, சமீபத்தில், விவசாய வேலைக்கு கணவன் - மனைவி சென்றனர். வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த, அவர்களது, 2 - 7 வயதுக்குட்பட்ட நான்கு குழந்தைகள், அருகே நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் எதிர்பாராதவிதமாக ஏறினர். அப்போது காரின் கதவு திடீரென மூடியது. வெளியே வர முடியாமல் தவித்த குழந்தைகள் மூச்சுத்திணறி உயிர்இழந்தனர். வீட்டுக்கு வந்த பெற்றோர், குழந்தைகளை காணவில்லை என தேடிய போது, காரில் அவர்கள் இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Barakat Ali
நவ 05, 2024 02:58

அதுவும் முன்னேறிய மாநிலம்தான் ....


சந்திரன்,போத்தனூர்
நவ 05, 2024 09:06

ஏலே இதிலும் உன் மூர்க்க புத்தியை காட்டாதே ஒரு எதிர்பாராத அசம்பாவிதம் நடக்குதுன்னா அது எந்த மாநிலத்தில் நடக்கிறது யார் ஆளுகின்ற மாநிலத்தில் நடக்கிறது என்று பார்ப்பது கேவலமான செயல்.


Amsi Ramesh
நவ 05, 2024 09:26

மூர்க்கனுக்கு முட்டியில் தான் மூளை இருக்கும் போல


karthik
நவ 05, 2024 09:37

... புத்தி வேற எப்படி வேலை செய்யும்


புதிய வீடியோ