உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மியான்மர் புறப்பட்டது 80 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படை : வெளியுறவு அமைச்சர் தகவல்

மியான்மர் புறப்பட்டது 80 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படை : வெளியுறவு அமைச்சர் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மியான்மர் நாட்டுக்கு உதவி செய்வதற்காக, 80 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.மியான்மர் நாட்டில் நேற்று இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 ஆக பதிவாகின. இதில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000 ஐ தாண்டியுள்ளது. 2000க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். மேலும் உயிர்ப்பலி அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.இந்நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படையின் 80 பேர் கொண்ட குழு மியான்மருக்கு புறப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.இது குறித்து ஜெய்சங்கர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளாதாவது:தேசிய பேரிடர் மீட்பு படை (என்.டி.ஆர்.எப்) அணியின் 80 உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழு, மியான்மரின் நய்பிடாவ் நகருக்கு இன்று புறப்பட்டது. இவர்கள் அங்கு ஏற்பட்டுள்ள பேரிடர் பாதிப்புகளில் மீட்பு மற்றும் உதவி பணிகளில் ஈடுபட உள்ளனர்.இந்த அணியில், மீட்பு நிபுணர்கள், மருத்துவர்கள் மற்றும் சிறப்பு உபகரணங்கள் இடம் பெற்றுள்ளனர்.இந்திய அரசு மியான்மருக்கு மனிதாபிமான உதவியாக இந்த அணியை அனுப்பியுள்ளது. மருந்து பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.இவ்வாறு ஜெய்சங்கர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

மோடி தாசன்
மார் 29, 2025 18:34

சிறப்பு, சுதந்திர இந்தியாவில் இது வரை இப்படி நிகழ்வு நடந்துள்ளதா? மோடி ஜி யை தூற்றுபவர்கள் கொஞ்சம் யோசிங்க. தலைவர் மோடி தலைமையில் உலகத்துக்கே வழிகாட்டியாக நமது பாரத தேசம் விளங்குகிறது. மோடி ஐயா உங்களால் நாங்கள் பெருமை அடைகிறோம். பாரத மக்களை வெள்ளைக்காரன் எல்லாம் இப்ப பெருமையாக பார்க்கிறான். வாழ்க மோடி ஜி . முன்பு துருக்கி இப்ப மியான்மர். இந்தியா உலகத்துக்கே குருவாக மாறி வருகிறது. எல்லாம் மோடிஜி என்ற தேச பக்தனின் அயாராத உழைப்பு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை