உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆதார், பான் உள்ளவர்கள் இதை கட்டாயம் பண்ணுங்க! மத்திய அரசின் லேட்டஸ்ட் அலர்ட்

ஆதார், பான் உள்ளவர்கள் இதை கட்டாயம் பண்ணுங்க! மத்திய அரசின் லேட்டஸ்ட் அலர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஆதார் கார்டை பான் அட்டையுடன் இதுவரை இணைக்காதவர்கள், வரும் டிசம்பர் 31க்குள் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு புதிய கெடுவை விதித்துள்ளது. தனிநபர்கள் ஒவ்வொருவருக்கும் முக்கிய ஆவணமாக பார்க்கப்படுவது ஆதார் கார்டும், பான் அட்டையும் தான். வங்கி பரிவர்த்தனை, வருமான வரித்துறை போன்றவற்றுக்கு இவை பயன்படுத்தப்பட்டு வருகிறது.நாடு முழுவதும் வங்கிகணக்கு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுடன், ஆதார் அட்டையை இணைக்க ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதேபோல, ஆதார், பான் இணைப்பு என்பது கட்டாயமாகவும் ஆக்கப்பட்டு உள்ளது.இந்த இணைப்பு நடவடிக்கைக்காக பலமுறை மத்திய அரசு கால அவகாசம் வழங்கி வந்துள்ளது. இந்நிலையில், டிசம்பர் 31ம் தேதிக்குள் ஆதார் கார்டை, பான் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளாவிட்டால் வங்கி பரிவர்த்தனை உள்ளிட்ட சேவைகளில் பாதிப்பு ஏற்படும் என்றும் கூறி உள்ளது.பல்வேறு பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் பான் எண் உள்ளிட்ட விவரங்களை வைத்துக் கொண்டு, முறைகேடுகளில் ஈடுபடுவதாக எழுந்த தொடர் புகார்களையடுத்து மத்திய அரசு இதுபோன்ற நடவடிக்கை எடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

மு. தணிகாசலம்
நவ 13, 2024 06:02

பான் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை வங்கிகளில் மற்றும் அஞ்சலகங்களில் செய்து கொடுக்க ஏற்பாடு செய்யலாம் இதற்காக ஒரு சொற்ப தொகையை கட்டணமாக பெறலாம். வங்கிக்கோ அல்லது அஞ்சலகத்திற்கோ நேரிடியாகச் சென்று பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்களுக்கு முதல் மூன்று வருகை புரியும் நாட்களுக்கு எச்சரிக்கை செய்துவிட்டு நான்காவது முறை வருகை புரியும் போது, பான் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப் பட்டிருந்தால் மட்டுமே சேவை கிடைக்கும் என கறாராக வங்கிகள் அல்லது அஞ்சலகங்கள் தெரிவிக்கலாம்.


அப்பாவி
நவ 12, 2024 19:34

குற்றவாளிகளைப் புடிக்க துப்பில்லேன்னாலும் பிதுமக்களை சாவடிக்கிறதில் அலாதி இன்பம்.


kalyan
நவ 12, 2024 13:52

ஆயதர் பான் இணைப்பது மிக அவசியம் . பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும் , ஓய்வூதியம் இல்லாவிட்டாலும் எப்போதாவது வீடு மனை வாங்கவோ விற்கவோ செய்யும் போதும் , வெளிநாடு செல்லும்போதும் Tax Return செய்ய நேரிடும் . அப்போது இணைக்கவில்லை என்றால் சிக்கல் நேரிடும் .


Ramesh Sargam
நவ 12, 2024 12:27

நான் தனியார் பணியில் இருந்தபோது என்னிடம் PAN card இருந்தது. இப்பொழுது பணியிலிருந்து ஓய்வு அதாவது retire ஆகிவிட்டேன். பென்ஷன் மற்றும் வேறு எந்தவகையிலும் வருமானம் இல்லை. எனக்கு இப்பொழுதும் அந்த PAN கார்டு அவசியமா? இப்பொழுதும் அதை ஆதார் கார்டுடன் இணைக்கவேண்டுமா?


Muthuraman
நவ 12, 2024 13:12

ஆம் இல்லை எனில் உங்க வங்கி கணக்கு முடக்க படும்


GMM
நவ 12, 2024 12:03

ஆதார் அங்க அடையாளம் அரசிடம் இருக்கும்.


வைகுண்டேஸ்வரன்
நவ 12, 2024 10:27

வங்கிக் கணக்கு துவங்க ஆதார் கட்டாயம் தேவை. PAN கார்டு வைத்துக் கொண்டு ஒரு மோசடியும் பண்ண இயலாது. PAN கார்டில் வீட்டு முகவரி கூட இல்லை. ஓட்டலில், விமான நிலையங்களில், ரயில் களில், மருத்துவமனைகளில் என்று எங்குமே PAN கார்டை ஏற்க மாட்டார்கள். அப்படிப்பட்ட PAN கார்டால் என்ன தான் பிரயோஜனம் என்று பல சமயங்களில் எனக்குத் தோன்றும்.


Sivak
நவ 12, 2024 13:56

நீ திமுக காரனா ? தெரிய வாய்ப்பில்லை ... பான் கார்ட் நகல் கொஞ்சம் எனக்கு குடுங்க.. அப்புறம் பாருங்க விளையாட்டை ....


sundarsvpr
நவ 12, 2024 08:42

வருமான வரி கட்ட தேவை இல்லாதவர் ஆதார் அட்டை வைத்துள்ளனர். இவர்கள் தேவை படும்பொழுது இணைத்தால் போதும் என்ற விபரம் தெரிவித்தால் நல்லது.


GMM
நவ 12, 2024 08:39

பான் அட்டை தனி நபர் கொடுக்கப்படும் பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி ஃபோட்டோ மட்டும் இருக்கும். ஆதாரில் பெயர், பிறந்த தேதி , முகவரி மற்றும் ஃபோட்டோ இருக்கும். ஆதாரில் அங்க அடையாளம் இருக்கும். பான், வாக்காளர் அட்டையில் இருக்காது. ஆகவே, இரண்டையும் ஆதாருடன் கட்டாயம் இணைக்க வேண்டும். 11 ஆண்டு பள்ளி இறுதி சான்றில் தலைமை ஆசிரியர் இரு அங்க அடையாளம் பதிவு செய்வார். அங்க அடையாளம் இல்லாத எந்த ஆவணமும் ஏற்க மறுக்க முடியும். சட்டப்படி செல்லாது. ? மத்திய அரசு உத்தரவு சரியே.


வைகுண்டேஸ்வரன்
நவ 12, 2024 10:23

ஆதார் கார்டில் அங்க அடையாளம் இருக்கிறதா? முன் மூளையைக் கொஞ்சம் உபயோகிக்கவும். நன்றி.


Kanns
நவ 12, 2024 13:25

Aadhar is MentalSpy-Master Against People WITHOUT PUNISHING ANY extensive Power-Misusing Rulers,Officials esp Police Judges, Media, Vested False-ComplainantGangs women, unions/groups, SCs,advocatesEtc. Govt /Courts NOT STOPPED its Misuses& Mega-FRAUDS by Foreign Infiltrators >1billion, All given Aadhar-PANcards& All Citizen Benefits/ Freebies/Concession etc etc DENIED to Native Citizens Not Having Mental Aadhar. Aadhar also DESTROYED Indians ECONOMY by Looting People for Extravagant Expenses While Promoting Black-Money FDI BenamisSHAME on Dictators