உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புஷ்பா 2 வெளியீட்டில் ரசிகை பலியான சம்பவம்! போலீஸ் ஸ்டேஷனில் ஆஜரானார் அல்லு அர்ஜூன்!

புஷ்பா 2 வெளியீட்டில் ரசிகை பலியான சம்பவம்! போலீஸ் ஸ்டேஷனில் ஆஜரானார் அல்லு அர்ஜூன்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஐதராபாத்: புஷ்பா பட வெளியீட்டின் போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலியான சம்பவத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் போலீசில் விசாரணைக்காக ஆஜரானார். பிரபல நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் அண்மையில் வெளியான புஷ்பா 2 படம் வசூலில் புதிய சாதனையை படைத்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. பட ரிலீஸ் நாளில், ஐதராபாத்தில் உள்ள பிரபல தியேட்டரில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த சிறப்பு காட்சியில் நடிகர் அல்லு அர்ஜூன் சென்றார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் பலியானர். 8 வயது சிறுவன் படுகாயம் அடைந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1xdjwz8u&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக அல்லு அர்ஜூனை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமீன் பெற்றதால் அவர் சிறையில் இருந்து வெளிவந்தார். அதே நேரத்தில் அவரது வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அனைத்திற்கும் முதல்வர் ரேவந்த் ரெட்டியின் தூண்டுதலே காரணம் என்றும் பேசப்பட்டது. இந் நிலையில், ரேவதி பலியான சம்பவத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிக்கட்பள்ளி போலீஸ் ஸ்டேஷன் தரப்பில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டது. அதை பெற்றுக் கொண்ட அவர் விசாரணைக்காக தமது வீட்டில் இருந்து இன்று கிளம்பினார். மனைவி, மகளுக்கு தைரியம் கூறி விட்டு வீட்டில் இருந்து புறப்பட்டார். பலத்த பாதுகாப்புடன் அல்லு அர்ஜூன் போலீஸ் ஸ்டேஷனில் முறைப்படி ஆஜரானார். விசாரணையில் அவரிடம் சம்பவம் நடந்தது பற்றிய விவரங்களை கேள்விகளாக கேட்டு அவற்றை பதிவு செய்ததாக தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

என்றும் இந்தியன்
டிச 24, 2024 17:13

திருட்டு திராவிட அடிமை போலீஸ் துறை டாஸ்மாக்கினாட்டில் முஸ்லீம் நேரு காங்கிரஸ் அடிமை போலீஸ் துறை தெலங்கானாவில். இந்த தள்ளு முள்ளுவில் அல்லு அர்ஜுன் எப்படியய்யா பொறுப்பாக முடியும். அல்லு அர்ஜுன் வருகின்றார் அந்த இடத்திற்கு மக்கள் அதிகமாக கூடுவார்கள் என்று சொல்லி போலீசுக்கு அவர்கள் காவலுக்காக என்று சொல்லி ஏற்கனவே கொடுத்தாகிவிட்டது. அதில் நடந்த தள்ளு முள்ளை போலீஸ் கவனிக்க தவறி விட்டது. ஆகவே போலீஸ் மீது தான் தவறு.


Shiv G
டிச 24, 2024 14:44

சினிமாக்கள் மக்களின் மனதில் தோன்றும் எண்ணங்கள் மற்றும் நடத்தைகளை வலுவாகப் பாதிக்கின்றன. புஷ்பா போன்ற பல திரைப்படங்கள் வன்முறையையும், தவறான செயல்களையும் பெரிதும் புகழ்ந்து, இளம் தலைமுறைக்கு தீய கருத்துக்களை கொண்டு செல்லுகிறது. இவை மூலம் ஏமாற்றமும் குற்றச்செயலும் வெற்றியை பெற்றுத் தரும் என அவர்கள் நம்பக் கூடும். அரபு நாடுகளில் போல, சில நாடுகள் சினிமாக்களை கட்டுப்படுத்தி, நெறிமுறைகளையும் நல்ல்மதிப்புகளையும் பரிந்துரைக்கும் படங்களை மட்டுமே அனுமதிக்கின்றன. திரைக்கதை எழுத்தாளர்கள், நடிகர்கள், மற்றும் சென்சார் குழு, மக்களை ஊக்குவிக்கும் அர்த்தமுள்ள படங்களை உருவாக்குவதற்கு பொறுப்பேற்க வேண்டும். வன்முறை அல்லது மதியீனத்தைக் காட்டும் காட்சிகள் அனுமதிக்கப்படக்கூடாது. சினிமா மக்களை ஊக்குவிக்கவோ அல்லது பாதிக்கவோ முடியும். மானம், மரியாதை மற்றும் கடின உழைப்பை ஊக்குவிக்கும் திரைப்படங்களை ஆதரிப்போம். இது அனைவருக்கும் நல்ல சமுதாயத்தை உருவாக்க உதவும்.


SUBRAMANIAN P
டிச 24, 2024 13:24

இது தெளியாத பைத்தியங்கள்.


Bahurudeen Ali Ahamed
டிச 24, 2024 12:40

தவறு அல்லு அர்ஜுன் மீது மட்டுமல்ல, நம் மீதும்தான் நடிகர்களும் நம்மைப்போன்ற சாதாரண மனிதர்கள்தான் என்பதை மனதில் இருத்தல் வேண்டும், முக்கியமாக நமக்கு சுயமரியாதை மிக அவசியம், நடிகர்கள்கிட்ட போய் செல்பி எடுக்குறது அவசியமில்லாதது, செல்பி எடுக்கப்போனா அவர்களது பவுன்சர்கள் ஒரு நாயை பிடித்து தள்ளுவதுபோல் தள்ளுவார்கள் தேவையா இது?, ஒன்றை நினைவில் வைக்க வேண்டும் நம்மாலதான் நடிகர்கள் அந்த உயரத்தில் வாழ்கிறார்கள், ஒரு சகமனிதனாக அவர்களுக்கு மரியாதை கொடுங்கள், அவர்களை கடவுள் போல் நினைக்க வேண்டாம்


சமீபத்திய செய்தி