உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மேற்கு வங்கத்தில் மீண்டும் வெடித்தது டாக்டர்கள் போராட்டம்; மறுபடியும் மம்தாவுக்கு தலைவலி

மேற்கு வங்கத்தில் மீண்டும் வெடித்தது டாக்டர்கள் போராட்டம்; மறுபடியும் மம்தாவுக்கு தலைவலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: இளம்பெண் டாக்டர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து டாக்டர்கள் நடத்தி வந்த போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில், அங்கு மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது.அண்மையில் ஆர்.ஜி.,கர் மருத்துவமனையில் இரவுப்பணியில் இருந்த இளம்பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டியும், டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும், 40 நாட்களாக மேற்கு வங்கத்தில் டாக்டர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், மருத்துவப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. முதல்வர் மம்தா பானர்ஜி பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், தங்களின் முடிவில் பிடிவாதமாக இருந்த டாக்டர்கள், பின்னர், அரசு அளித்த வாக்குறுதிகளின் பேரில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் டாக்டர்கள் மீது நோயாளியின் உறவினர்கள் தாக்குதல் நடத்தியதால், மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது. கோல்கட்டா அருகே உள்ள கமர்ஹதி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர் உயிரிழந்தார். இதனால், ஆத்திரமடைந்த உறவினர்கள், பணியில் இருந்த டாக்டர்களை தாக்கியுள்ளனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட உறவினர்களில் 4 பேரை கைது செய்தனர். மேலும், இது குறித்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, மருத்துவப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தைக் கண்டித்து டாக்டர்கள் மற்றும் நர்சுகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், மேற்கு வங்கத்தில் மீண்டும் பரபரப்பு நிலவி வருகிறது. இது முதல்வர் மம்தா பானர்ஜிக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Ramanujam Veraswamy
செப் 29, 2024 04:52

Enough is enough. Doctors have to be shown the place in the Society. Though the profession is highly appreciable yhe lot they make through Corporate bodies etc is putting sick people in ransom. More over mass movement on each and every issue is not the right solution.


ஆரூர் ரங்
செப் 28, 2024 21:34

நம் மாநிலத்தில் கூட அரசியல்வாதிகள் மருத்துவமனைகளில் மாமூல் வாங்குகிறார்கள் எனும் புகார்கள் உண்டு.


J.Isaac
செப் 28, 2024 21:06

உண்மையாகவே இவர்கள் மருத்துவர்கள் தானா ?


krishna
செப் 28, 2024 21:53

ORU KILO ARISIKKE, MADHATHTHA VITTA DESA VIRODHI, MAMATHA BEGATHUKKU, MUTTU KODUPPADHU SUPER.


RAMAKRISHNAN NATESAN
செப் 28, 2024 22:04

அத்தொழிலின் புனிதத்தை அறிந்திருந்தால் இக்கேள்வியே பிறந்திருக்காது ........


Kumar Kumzi
செப் 28, 2024 22:07

ஆமா நீ சோத்துக்கு வக்கில்லாம மதம் மாறியவன் தானே நீ எப்படி ஒரிஜினல் ஆக முடியும்


Ramesh Sargam
செப் 28, 2024 21:06

மம்தாவுக்கு ஏட்பட்டிருக்கும் இந்த தலைவலிக்கு டாக்டர்களிடம் மருந்து கிடையாது. மருந்து கடைகளிலும் மருந்து இல்லை. மருத்துவர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தால், மமதாவின் தலைவலி காணாமல் போகும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை