உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அக்னி -2 ஏவுகணை சோதனை நிறுத்திவைப்பு

அக்னி -2 ஏவுகணை சோதனை நிறுத்திவைப்பு

பாலாசூர் : தொழில் நுட்ப கோளாறு காரணமாக, அக்னி -2 ஏவுகணை சோதனை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒடிசாவின் பாலாசூர் அருகே, வங்கக்கடலில் உள்ள வீலர் தீவில், அக்னி -2 ஏவுகணை சோதனை நேற்று நடக்க இருந்தது. 2 ஆயிரம் கி.மீ., தூரம் சென்று எதிரியின் இலக்கை தாக்கவல்ல இந்த ஏவுகணை, அணுகுண்டை சுமந்து செல்லக்கூடியது. தொழில் நுட்பக்கோளாறு காரணமாக, இந்த சோதனை நேற்று நடக்கவில்லை. மீண்டும் இந்த சோதனை நடைபெறக்கூடிய தேதி பின்பு அறிவிக்கப்படும், என, ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ