உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏர் இந்தியாவின் செயல்பாடுகளில் 51 பாதுகாப்பு குறைபாடுகள்: ஆய்வில் தகவல்

ஏர் இந்தியாவின் செயல்பாடுகளில் 51 பாதுகாப்பு குறைபாடுகள்: ஆய்வில் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் செயல்பாடுகளில் 51 பாதுகாப்பு குறைபாடுகளை மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டி.ஜி.சி.ஏ.,) கண்டறிந்துள்ளது.கடந்த மாதம் 12ல் குஜராத்தின் ஆமதாபாதில் இருந்து லண்டன் புறப்பட்ட, 'ஏர் இந்தியா போயிங் 787 - -8' விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விழுந்து நொறுங்கியது. இந்த துயரச் சம்பவத்தின் முதற்கட்ட விசாரணை அறிக்கையில், விமானம் புறப்பட்டவுடன் இன்ஜின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள், 'ரன்' நிலையில் இருந்து, 'கட் ஆப்' நிலைக்கு மாறியதே விபத்துக்குக் காரணம் என குறிப்பிடப்பட்டது.இந்நிலையில், ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் செயல்பாடுகளை மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ஆய்வு செய்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் செயல்பாடுகளில் 51 பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டு உள்ளது. விமானிகளுக்கு போதுமான பயிற்சி இல்லை. போயிங் 787 மற்றும் 777 விமானிகளின் செயல்பாட்டில் ஏராளமான குறைபாடுகள் காணப்படுகின்றன. போதுமான பணியாளர்கள் இல்லாமல் விமானங்கள் இயக்கப்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது.சவால் நிறைந்த விமான நிலையங்களை அணுகும்போது பாதுகாப்பு அபாயங்களைக் கருத்தில் கொள்ளாதது என குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றை சரி செய்து உரிய அறிக்கை அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சரிபார்ப்பு நடவடிக்கைகளின் விவரங்களுடன், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் ஒழுங்குமுறை ஆணையத்திடம் எங்கள் பதிலை சமர்ப்பிப்போம் என ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. டாடா குழுமத்திற்குச் சொந்தமான விமான நிறுவனத்திற்கு ஏற்கனவே, விமானத்தில் அவசரகால உபகரணங்களைச் சரிபார்க்காமல் விமானங்களை இயக்குதல், சரியான நேரத்தில் இயந்திர பாகங்களை மாற்றாதது மற்றும் மறுசீரமைப்பு அமைப்பு உள்ளிட்டவற்றிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Prasad
ஜூலை 30, 2025 13:10

Safety always First! DGCA should shutdown their operations completely till all issues for Airworthiness is properly checked and fit to fly! Indigo Airlines should not take any price advantage while Air India is under temporary shutdown.


Ramesh Sargam
ஜூலை 30, 2025 13:01

அந்த மாபெரும் விபத்து ஏற்பட்டு, இப்பொழுது குறைபாடுகளை கண்டறிந்து என்ன பிரயோஜனம்? போன உயிர்கள் திரும்பப்போவதில்லை. இனிமேலும் உயிர்கள் போகாமல் இருக்க வொவொரு பயணத்திற்கு முன்பும் விமானங்களை முழுமையாக, முறையாக சோதனை செய்து, எந்த குறைபாடுகளும் இல்லை என்று நிச்சயப்படுத்திக்கொண்டு விமானங்கள் பயணத்தை தொடங்கவேண்டும்.


ஆரூர் ரங்
ஜூலை 30, 2025 10:58

இதே டாடா நடத்தும் ஏர் ஆசியா, விஸ்தார ஏர்லைன்ஸ் பற்றி மட்டும் புகார்கள் இல்லை. டாடா செய்த தவறு ஏர் இந்தியாவை அரசிடமிருந்து வாங்கியபோது முழுமையாக களையெடுக்காதது தான். பல திறமையற்ற ஆட்களை காங்கிரஸ் அரசு சிபாரிசில் திணித்து வைத்தது.


Indian
ஜூலை 30, 2025 10:34

இழுத்து மூடிட்டு பொங்க, வேற ஏதாவது ஆக்கபூர்மான வேல இருந்தா பாருங்க


Jack
ஜூலை 30, 2025 11:01

இழுத்து மூடிட்டு பொங்கறதா ... அரசாங்கம் டாடா குழுமத்திடம் ஒப்படைத்து தன்னுடைய இயலாமையிலிருந்து தப்பித்தது ..உலகம் முழுக்கவே விமான சேவை கம்பெனிகள் மிகவும் கடினமான சூழ்நிலையில் வேலை செய்கிறார்கள்..


சமீபத்திய செய்தி