உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 5,8 ம் வகுப்பு மாணவர்கள் ‛ஆல் பாஸ் திட்டம் ரத்து

5,8 ம் வகுப்பு மாணவர்கள் ‛ஆல் பாஸ் திட்டம் ரத்து

புதுடில்லி : மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில், ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவர்கள் அனைவரையும் பாஸ் ஆக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பள்ளி கல்வி கொள்கையில், மத்திய அரசு இந்த திடீர் மாற்றத்தை செய்துள்ளது.அனைவருக்கும் கல்வி வழங்கும் நோக்கோடு, கல்வி உரிமை சட்டம் 2009ல் அமல்படுத்தப்பட்டது. இதன்படி, குறைந்தபட்சம் துவக்க கல்வி கிடைக்கும் வகையில், எட்டாம் வகுப்பு வரையில் அனைத்து மாணவர்களையும் பாஸ் ஆக்கும் நடைமுறை 2019ல் உருவாக்கப்பட்டது.

அரசாணை

ஆனால், 16 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்கள் இந்த திட்டத்தை கைவிட்டன. பள்ளிகளில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், மீண்டும் அதே வகுப்பில் படிக்கும் நடைமுறையை, இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கடைப்பிடித்து வருகின்றன.ஆனால், மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில், அனைவருக்கும் பாஸ் திட்டமே நடைமுறையில் இருந்தது. இந்நிலையில், இந்த கொள்கையில் மத்திய அரசு திடீர் மாற்றம் செய்துள்ளது. அனைவரையும் பாஸ் ஆக்கும் திட்டத்தை ரத்து செய்து அரசாணை நேற்று வெளியிடப்பட்டு உள்ளது.இந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் படிக்கும் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள், ஆண்டு இறுதித் தேர்வில் தோல்வி அடைந்தால், அவர்கள் அதே வகுப்பில் தொடர வேண்டும்.

ஆலோசனை

அதே நேரத்தில், இரண்டு மாதங்களுக்குள் அவர்களுக்கு மறுதேர்வு வாய்ப்பு தரப்பட வேண்டும். அதிலும் தேர்ச்சி பெறாவிட்டால், அவர்கள் தொடர்ந்து அதே வகுப்பிலேயே தொடர வேண்டும்.ஆண்டு இறுதித் தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு, தேவைப்பட்டால் பள்ளிகள் ஆலோசனை வழங்க வேண்டும். எந்தெந்த பாடத்தில், அந்த குறிப்பிட்ட மாணவர் பின்தங்கியுள்ளார் என்பதை சுட்டிக்காட்டி, மேம்படுத்துவதற்கு தேவையான பயிற்சிகளையும் அளிக்கலாம்.எந்த நிலையிலும் தேர்வில் தேர்ச்சி பெறாத எந்த ஒரு மாணவரையும், பள்ளியில் இருந்து நீக்கக் கூடாது. குறைந்தபட்சம் துவக்க கல்வி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.இந்த புதிய நடைமுறை, கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா மற்றும் சைனிக் பள்ளிகள் என, மத்திய அரசு நடத்தும் 3,000 பள்ளிகளுக்கு பொருந்தும்.ஏற்கனவே, 16 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்கள், அனைவரும் பாஸ் என்றநடைமுறையை பின்பற்றவில்லை. ஹரியானா மற்றும் புதுச்சேரி இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. மீதமுள்ள மாநிலங்கள், அனைவரும் பாஸ் என்ற நடைமுறையை பின்பற்றுகின்றன.கல்வி என்பது மாநிலங்களின் கட்டுப்பாட்டில் வருகிறது. அதனால், அனைவரும் பாஸ் என்ற நடைமுறையை கைவிடுவது தொடர்பாக, அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் எப்படி?

இது குறித்து, தமிழக பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழக அரசு இதுவரை தேசிய கல்வி கொள்கையை ஏற்கவில்லை. அதனால், தமிழகத்தில் ஏற்கனவே உள்ள நடைமுறை தான் தொடரும். மேலும், தமிழகத்துக்காக புதிய கல்வி கொள்கையை அறிமுகப்படுத்தும் வகையில் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு, பல்வேறு செயல் திட்டங்களை அரசுக்கு வழங்கியுள்ளது. அது குறித்து பரிசீலித்து, அரசு தான் கொள்கை முடிவு எடுக்கும். அதனால், அதிகாரிகள் மட்டத்திலிருந்து இதற்கு பதில் அளிக்க இயலாது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

திறன் மேம்படும்

மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கத்துடனேயே, அனைவரையும் பாஸ் ஆக்கும் திட்டம் ரத்து செய்யப்படுகிறது. இது, மாணவர்கள் சிறந்த முறையில் பாடங்களை கற்றுக் கொள்வதற்கு உதவும். - சஞ்சய் குமார்செயலர், மத்திய பள்ளி கல்வித்துறை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

kannan
டிச 24, 2024 18:37

விஷகர்ம திட்டத்திற்கு ஆள் கிடைக்கவில்லைபோலும்


Parthasarathy
டிச 24, 2024 22:24

ஆல் பாஸ் பண்ணா ...க்கு கூட ஆட்கள் கிடைக்க மாட்டாங்க. ஒன்பதாவது படிச்சாங்கன்னு பேர் தான் இருக்கும். ஆனால் உங்கள மாதிரி முட்டாளா இந்த மாதிரி தப்பு தப்பாக கருத்து சொல்லிண்டு திரிய வேண்டியது தான்.


Suppan
டிச 24, 2024 16:34

இந்தமாதிரியான ஆல் பாஸ் மாணவர்களிடம் எடுக்கப்பட்ட சர்வேயில் 50% சதவிகித ஒன்பதாம் வகுப்பு மாணவர்களால் மூன்றாம் வகுப்பு பாடத்தைக் கூட சரிவர புரிந்துகொள்ளமுடிய வில்லை என்று தெரிகிறது. தரம் முக்கியமில்லையா? இதற்கு யார் பொறுப்பு? ஆசிரியர்களென்றால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? சும்மா இடைநிற்றல், குலக்கல்வி என்று கம்பு சுற்றுவதில் பயனில்லை.


அப்பாவி
டிச 24, 2024 16:11

நான் அடிக்கும்.போது இவ்வொரு வருஷமும் தேர்வு நடக்கும். இவனுங்க இப்போ அமெரிக்காவைப் பாத்து சூடு போட்டுக்கிட்டு 5, 8 க்கு தேர்வு கொண்டு வர்ராங்க. அப்புறம் டீ ஸ்டேட் சோரிஸ் நு ஒப்பாரி வெப்பாங்க.


S S
டிச 24, 2024 13:13

இதனால் இடைநிற்றல் அதிகரிக்கும். குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கையும் பெருகும்.


ஆரூர் ரங்
டிச 24, 2024 17:03

கல்வியில் நாட்டமில்லாப் பிள்ளைகளை வலுக்கட்டாயமாக பள்ளிக்கு அனுப்புவதில் என்ன பயன்?. காலை மதிய சத்துணவு சாப்பிட மட்டுமா? அதற்கு பதிலாக அவரவருக்கு பிடித்த வேலையை அல்லது கலையைக் கற்றுக் கொண்டு பிழைப்பதில் என்ன தவறு?


vbs manian
டிச 24, 2024 12:52

மாணவர் எதிர்காலம் பற்றி அக்கறை உள்ள எவரும் ஆல் பாஸ் முறையை ஏற்கமாட்டார்கள்.


N.Purushothaman
டிச 24, 2024 10:30

வரவேற்கத்தக்க ஒன்று... கல்வியை பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு விட்டதால் பெற்றோர்கள் தாங்கள் கஷ்டப்பட்டாவது படிக்க வைக்கிற சூழல் உருவாகி உள்ளதால் தோல்வியால் இடை நிறுத்தம் என்பது மிகைப்படுத்தப்பட்டதாகவே தெரிகிறது ...திருத்தம் சரியே ...


Velan Iyengaar
டிச 24, 2024 10:21

ஒரே நாளில் ரெண்டு கேவலமான முடிவுகள்.. இது ஒன்னு ... இன்னொன்னு பாப்கார்ன் மீதான GST வரிவிதிப்பு எப்படி ஆட்சி செய்யக்கூடாது என்று கற்றுக்கொடுக்கிறார்கள்


veera
டிச 24, 2024 12:05

சிட்னியில் பாப்கார்ன் விலை எவ்வளவு? இந்திய பாப்கார்ன் பற்றி கவலைவெண்டாம்


Velan Iyengaar
டிச 24, 2024 10:19

நவீன துக்ளக் ஹா ஹா ஹா. படிப்பு இடைநிறுத்தத்தை குறைக்கப் பார்க்கும் திட்டத்தை கைவிட்டு குலத்தொழிலை ஊக்குவிக்கும் வினோதம் இதுவல்லவே சனாதனம் நாட்டை பின்னோக்கி இழுப்பது எப்படி என்று ரூம் போட்டு யோசிப்பார்கள் போல


செல்வக்கடுங்கோவாழியாதன்,அரண்மனைபுதூர்
டிச 24, 2024 11:16

இந்து மதத்தில் எது கூறப்பட்டிருந்தாலும் அது மக்களின் நன்மைக்காகவே இருக்கும் மற்ற மதத்தினரை காஃபீர் என்று கூறி அவர்களை அழிக்க சொல்லி அறிவுறுத்தாமல் அரவனைக்க கற்றுக் கொடுப்பது சனாதன தர்மம். குலத்தொழில் மற்றும் சனாதன தர்மம் பற்றி வாய்கிழிய பேசும் போலிப் பெயரில் ஒளிந்திருக்கும் மூர்க்கனே முதலில் உன் மதரசாவில் படிக்கும் பிள்ளைகளுக்கு என்ன சொல்லித் தருகிறார்கள் தெரியுமா? தண்டவாளத்தில் உள்ள பிஷ் பிளேட்டை கழற்றி விட்டு எப்படி ரயிலை கவிழ்ப்பது என்று சொல்லித் தருகிறார்கள் இதற்கு பெயர் என்ன? முதலில் இதற்கான உன் பதிலை சொல் பிறகு எங்களின் சனாதனத்தை பற்றி பேசலாம்...


Mettai* Tamil
டிச 24, 2024 13:11

இந்த குலத்தொழில், சனாதனம் இத விட்டா வேற எதுவுமே தெரியாதா? இந்து மதத்தில் நெறைய பேர் கலப்பு திருமணம் செஞ்சுகிட்டு இருக்காங்க. இதுல குலத்தொழில் எப்படி கண்டுபிடிப்பீங்க. மற்ற மதத்தவர்கள் கலப்பு திருமணம் செய்தாலும் அவர்கள், தங்கள் மதத்திற்கே மாற்றி விடுகிறார்கள். அவர்கள் தான் பெண்ணுக்கு சொத்துரிமை கொடுக்காதது, இன்னும் ஆண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை கல்யாணம் செய்வது, மதத்துக்கு ஒரு சட்டம் இருப்பது இப்படி நாட்டை பின்னோக்கி இழுப்பது உங்களை போன்ற கூட்டத்தினால் தான் ...


raman
டிச 24, 2024 19:55

வேலன் ஐயங்கார் போலிப்பெயர் எப்படி வைத்துக்கொள்ள வேண்டும் என்று கற்றுக்கொண்டு பதிவு இடவும்


Mohan
டிச 24, 2024 10:12

வரவேற்க வேண்டிய விஷயம்... ஆனா விடியல் அரசு இதை செயல்படுத்தாது காரணம் பசங்க படிச்சுட்டாங்கன்னா நம்ம வியாபாரம் பாதிக்கும். ஆல் பாஸ்னா வெட்டியா ஊற சுத்தலாம் நம்ம வியாபாரம் கொடிகட்டி பறக்கும் .. இதை 2009 ல மன்மோகன் சிங் அரசு கொண்டு வந்த செயல் மாணவர்களின் கல்வியில் விளையாடி விட்டது. பிஜேபி வந்த உடனே செஞ்சிருக்கணும்


nv
டிச 24, 2024 10:06

இலவசமாக கல்வி குடுக்கலாம், சோறு போடலாம் ஆனால் படிப்பது அவசியம் என்று குழந்தைகளுக்கு சொல்ல வேண்டும். படிக்கவில்லை என்றால், தேர்வில் தோல்வி என்றால் மேலே போக முடியாது என்று சொல்லி கொடுக்க வேண்டும். இப்போது பெரும்பாலான மக்கள் உணவுக்காகவும், பொழுது போக்குகாகவும் மட்டுமே பள்ளி செல்கின்றனர். இதில் மாற்றம் அவசியம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை