வாசகர்கள் கருத்துகள் ( 15 )
எண்ணை எரிவாயு தேடுதல் மற்றும் உற்பத்தியில் புதிய உத்திகளை புகுத்தவேண்டியது மிக மிக அவசியம். தற்பொழுதுள்ள தொழில்நுட்பத்தில் நமது எண்ணை நிறுவனங்களின் வெற்றி விகிதம் மேலைநாடுகளை ஒப்பிடும்போது மிக குறைவாக உள்ளது. உதாரணத்திற்கு 10 கிணறுகளை தோண்டினால் அவற்றில் எத்தனை கிணறுகள் உற்பத்திசெய்யக்கூடியவையாக உள்ளது. மற்றொன்று அப்படி உற்பத்திசெய்க்கூடிய கிணறுகளிலிருந்து எஸ்டிமேட் செய்யப்பட்ட அளவிற்கும் உண்மையாக கிடைக்கக்கூடிய அளவிற்கும் இடைப்பட்ட நஷ்ட்டம் போன்றவைகளில் மிகுந்த வித்யாசம் உள்ளது. கடந்தகாலங்களில் உள்ள கிருஷ்ணா கோதாவரி, ஹஸீரா, அசாம் படுகைகளின் புள்ளிவிவரங்களை ஆராய்ந்தால் இவை விளங்கும். எனவே தற்பொழுதுள்ள தொழில்நுட்பத்தை மேம்படுத்தவேண்டியது மிக மிக அவசியம். இல்லையேல் முதலீடுகள் விரயம்தான் ஆகும்
எவ்வளவு எரிபொருள் இறக்குமதி செய்தாலும் உற்பத்தி செய்தாலும் அதனால் ஏற்படும் பயன்கள் அந்த அந்த மாநிலங்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது , மற்ற மாநிலங்களுக்கு உபயோகமாக இருக்க வாய்ப்பில்லை அய்யா
அப்படியென்றால் ஜார்க்கண்ட், ஒரிசா நிலக்கரி, அசாம், மகாராஷ்டிரா பெட்ரோல், அரேபியா, ஈரான், ரஷ்யா எண்ணெய்லாம் எப்படி தமிழகம் வருகிறது? கிடைக்கும் அளவில் பகிர்ந்து கொள்வதுதான் நாட்டிற்கு அழகு. எல்லாம் எனக்கே என்ற சுயநலன் அழிவையே தரும்.
இந்த கருத்து தவறு என அபிப்பிராயப்படுகிறேன்.
இறக்குமதி செய்து செய்து டாலர் மதிப்பு இப்போது 90 ரூபாயாக இருக்கு. இறக்குமதியை குறைப்பதற்கு உள் நாட்டு உற்பத்தி தேவை படுகிறது. இந்தியா சொந்த காலில் நிற்பதற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு பிடிக்க வில்லை. அமெரிக்க நேரடியாக அதிக வரிவிதிப்பு மூலமாக எதிர்க்கிறது.
நமது காவிரிப் படுகையில் ஒரு ஆயிரம் ஏக்கர் ஒதுக்கி, மீத்தேன் எடுப்பதில் கவனம் செலுத்தலாம். எளிதான செயல். கட்டுமர விஷநரி கும்பலை கட்டங்கட்டும் வேலையை முடித்தால் எளிதில், விரைவில் சாதிக்கலாம்.
அரச மரத்தை சுற்றிவந்து அடிவயிற்றை தொட்டுப் பார்த்த கதை. இன்னும் ஆரம்பிக்கவே இல்லை அதற்குள் ஆசியான் கூட்டணிக்கு அச்சாரம் போடும் கற்பனைப் புனைவு. முதலில் கண்டு பிடிக்கட்டும். பின்னர் உற்பத்தி துவங்கட்டும். பின்னர் கூட்டணி, பிரியாணி எல்லாம் தானே வரும்.
கருமமே கண்ணாயினார் மாதிரி பாலு ஜகத் தாயாருக்கும் மதுவை விற்கும் பணியில் ஸ்டாலின் அரசு ..
உல்லாச வாழ்க்கைக்காக ஏராளமான எரிபொருட்களை பயன்படுத்துவதைக் குறைத்தால் இது போன்ற திட்டங்கள் தேவைப்படாது. மினிமலிஸம் மட்டுமே அடுத்த தலைமுறைகளை பிழைக்க வைக்கும். . ஆனால் இதெல்லாம் இன்றைய தலைமுறைக்கு வேப்பங்காயாக கசக்கும்.
பூமியை சுரண்டுவது தற்கொலைக்கு சமம் பேரழிவுக்கு வழிவகுக்கும்
அதை மத்த நாட்டுக்காரன்கிட்ட போய் சொல்லு. நாம மட்டும் என்ன மாட்டு வண்டியிலயா பயணிக்க முடியும் இல்ல விறகடுப்பிலேயே சாகணுமா
அப்போ கடக்கால் அஸ்திவாரம் போடாம வீடு கட்டுங்கள். போர்வேல் நீரைப் பயன்படுத்தகூடாது. மெட்டல் பொருட்களை வாங்காதீர்கள். முடிஞ்சா வனவாசம் போங்க.
நதியை சுரண்டி மணல் அள்ளுவது மலைகளை வெட்டி க்ராநைட் சுரண்டவது நிலங்களை வெட்டி கனிம வளங்களை சுரண்டுவது திராவிட கலாச்சாரம்
ஆற்று மணலை கொள்ளையடிப்பது போலவா
பாராட்டப்படவேண்டிய செயல். பெட்ரோலிய இறக்குமதியை வெகுவாக குறைக்க வாய்ப்புள்ளது. மேலும் நிலக்கரி மின்சார உற்பத்தி சுற்று சூழலுக்கு கெடுவிளைவிக்கிறது. எரி வாயு மற்றும் ஹைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படும் மின்சார உற்பத்தியில் சுற்று சூழலுக்கு எந்தவிதமான தீங்குகளும் இல்லை.