உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மொழிகள் தொடர்பாக தேவையற்ற அரசியல் வேண்டாம்:

மொழிகள் தொடர்பாக தேவையற்ற அரசியல் வேண்டாம்:

அமராவதி : மொழிகள் தொடர்பாக தேவையற்ற அரசியலில் ஈடுபட வேண்டாம். ''தாய்மொழி வழியாக கல்வி கற்றவர்களே உலகில் சிறந்து விளங்குகின்றனர். என, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மத்திய அரசு ஹிந்தியை திணிக்க முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=h4xlc1nb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், பா.ஜ., கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு, ஆந்திர சட்டசபையில் இன்று கூறியதாவது: ஆங்கிலம் மட்டுமே அறிவுக்கு உத்தரவாதமான மொழி என்ற தவறான கருத்து பொதுவாக நிலவு கிறது. மொழி என்பது தொடர்பு கொள்வதற்கு மட்டுமே; மொழியால் அறிவு வளராது. எந்த மொழியும் வெறுப்புக்குரியது அல்ல . இங்கு ஆந்திராவை பொறுத்தவரை தாய்மொழி தெலுங்கு; ஹிந்தி தேசிய மொழி; ஆங்கிலம் சர்வதேச மொழி. தாய் மொழியில் கல்வி கற்பது எளிது. தாய்மொழி வாயிலாக கல்வி கற்பவர்கள் மட்டுமே உலகில் சிறந்து விளங்குகின்றனர். நம் வாழ்க்கையில் எத்தனை மொழியை கற்க முடியுமோ, அத்தனை மொழிகளை கற்கலாம். தேசிய மொழியை கற்றால், டில்லியில் தடையின்றி உரையாடலாம். . எனவே, மொழிகள் தொடர்பாக தேவையற்ற அரசியலில் யாரும் ஈடுபட வேண்டாம். அனைவருமே, முடிந்த வரை பல மொழிகளை கற்றுக் கொள்ளுங்கள்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

Dharmavaan
மார் 18, 2025 08:46

புத்திசாலியான பகுத்தறிவுள்ள பொறுப்பட்ட தேச அபிமான பேச்சு .இவரிடம் சுடாலின் பாடம் கற்க வேண்டும்


Minimole P C
மார் 18, 2025 07:02

well said Sir. But we Tamils in the name of Tamil are easily mislead by politicians and from 1960 we lost our mind and for Tamil we lost our life at pseduo Tamil promotors who all are mostly telugu speaking people,so they called themselves as dravidians and pushed us to a ditch, from where we coulnt come out. In the process we discarded our noble leader Kamarajar and now become orphans among corrupted politicians/officers and party men.


R. SUKUMAR CHEZHIAN
மார் 18, 2025 06:34

இங்கு உள்ள மூலையற்ற அரசியல் வியாபாரிகளுக்கு இது புரியாது, திராவிட கும்பல்கள் தமிழக மக்களின் சிந்தனை தரத்தையும் கெடுத்து விட்டனர். அறிவுளவர்கள் யோசிப்பார்கள். ஆந்திரா மக்கள் கொடுத்து வைத்தவர்கள். தமிழகத்தில் திராவிட தரிதிரம் கூடிய விரைவில் ஒழிய வேண்டும் என இறைவனை பிரார்த்திப்போம்.


Bala
மார் 18, 2025 03:36

அப்படி போடு அருவாளை. வெச்சார்யா ஆப்பு நம்ம திராவிடியா ஆட்களுக்கு


இந்தி வேனும் போடா
மார் 18, 2025 01:03

இந்தியாவில் ஹைடெக் CM என்று பல ஆண்டுகளுக்கு முன்பே புகழப்பட்டவர் நாயுடு. ஐயா நாயுடு அவர்களே நாங்கள் ரொம்ப நாளாகவே ஒரு கூ முட்டை கூட்டத்துகிட்ட மாட்டிகிட்டு, 1967, 1966 என்று பின்ணோக்கி போய்கிட்டு இருக்கோம். இப்பத்தான் அண்ணாமலைன்னு ஒருத்தர் வந்து இந்த கூ முட்டை கூட்டத்திற்கு தினந்தோறும் ஒவ்வொரு அடியையும் இடி மாதிரி கொடுக்கிறார்‌. விறைவில் நாங்களும் உங்கள் மாநிலத்தவர் போல பல மொழிகள் கற்க போகிறோம்.


Appan
மார் 17, 2025 22:51

இது தான் பயம் ..ஒரு தடவை பிஜேபியை எதிர்த்து ஆட்சி இழந்து ரொம்ப கஷ்ட்ட பட்டார் ..இப்போ தடுமாடுகிறார் ..முன்னாள் உச்சமன்ற நீதிபதி ரமணன் சொல்கிறார் .தெலுங்கர்கள் தமிழர்களை பார்த்து மொழி பற்றை கற்றுக்கொள்ளுங்கள் என்று..அனாலா நாயுடுவோ பிஜேபிக்கு ஜால்ரா அடிக்கிறார் ..ஏனென்றால் இவர்..........


Dharmavaan
மார் 18, 2025 08:49

நீதிபதி மொழி வெறியனாக இருக்கிறார் கேவலம் ஆனால் அரசியல்வாதி தேசநலனில் பேசுகிறார்


Selliah Ravichandran
மார் 17, 2025 22:06

He’s a good chief minister open mind.good speech for next Generation


Enrum anbudan
மார் 17, 2025 21:26

போலி மொழி அரசியல்வாதிகளை செருப்பால் அடித்த மாதிரி ஆந்திரா முதல்வர் கருத்து இருக்கின்றது. நன்றி


K.Ramakrishnan
மார் 17, 2025 21:24

இந்த அறிவுரையைஉங்க கூட்டணி கட்சிக்குசொல்லலாமே.....உங்கள் துணை முதல்வர் ஏன்தமிழர்களை சாடுகிறார்.தமிழரும், தெலுங்கரும் ஒற்றுமையாக வாழ்வது உங்களுக்கு பிடிக்காதா?


Appa V
மார் 18, 2025 01:37

திராவிட மாடல்னு சொல்லுங்க ..தெலுங்கன் ஆட்சி நடத்தினா திராவிட மாடலா தான் இருக்கும்


Mr Krish Tamilnadu
மார் 17, 2025 21:21

இரு மொழி கொள்கையிலேயே, இங்கு ஆங்கிலம் திறமையாக கற்பிக்கப்படுவது இல்லை. சொல் அறிவு, தொழில்நுட்ப அறிவு இரண்டும் இருந்தும் ஆங்கில உரையாடல் மொழி பெயர்ப்பு அறிவு இல்லாமல் நமது இளைஞர்கள் பின் தங்கி தான் இருக்கிறார்கள். மொழி பெயர்ப்பு திறன் இல்லாததால், திறமை இருந்தும் சபைகளில் கூனி குறுகி தான் நமது இளைஞர்கள் நிற்கின்றனர். திறமையை விட உரையாடல், மொழி பெயர்ப்பு அங்கு பெரிதாக பார்க்கப் படுகிறது. பிரதமர் உலக மொழி ஆங்கிலத்தில் உணர்வு பூர்வமாக பேசுவாரா? திறமைக்கு மட்டுமே மதிப்பளித்து. இன்டர்வீயூகள் மொழி பெயர்ப்பாளரோடு நடைபெறுகிறதோ, அன்று நாம் அனைத்து மொழிகளையும் கற்று கொள்வோம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை