உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஸ்பைஸ்ஜெட் ஊழியர்களை விரட்டி விரட்டிய தாக்கிய ராணுவ அதிகாரி; வீடியோ வெளியாகி பரபரப்பு

ஸ்பைஸ்ஜெட் ஊழியர்களை விரட்டி விரட்டிய தாக்கிய ராணுவ அதிகாரி; வீடியோ வெளியாகி பரபரப்பு

புதுடில்லி: ஸ்ரீநகர் விமான நிலையத்தில், லக்கேஜ் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், ஸ்பைஸ்ஜெட் ஊழியர் மீது ராணுவ அதிகாரி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்கப்பட்ட ஊழியர்களில் ஒருவருக்கு முதுகெலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இன்னொருவருக்கு தாடை உடைந்துள்ளது.கடந்த, ஜூலை 26ம் தேதி ஸ்ரீநகர் விமான நிலையத்தில் வழக்கமான விமானப் போக்குவரத்து நடைமுறை படி, பயணிகளின் உடைமைகளை விமான நிலைய ஊழியர்கள் ஆய்வு செய்தனர். அப்போது, டில்லி செல்லும் SG-386 விமானத்தின் ஏறும் வாயிலில், மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் ஊழியர்கள் நான்கு பேரை சரமாரியாக தாக்கினார். அதிகப்படியான லக்கேஜ் கொண்டு செல்வது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையில் முடிந்தது. ராணுவ வீரர், விமான நிறுவன ஊழியர்களை விரட்டி விரட்டி தாக்கிய சம்பவத்தின் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடந்த சம்பவத்துக்கு ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது.இது குறித்து விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:பயணி மொத்தம் 16 கிலோ எடையுள்ள இரண்டு கேபின் பைகளை எடுத்துச் சென்றார். இது அனுமதி வழங்கப்பட்டுள்ள எடையை விட இரண்டு மடங்கு அதிகம். இது தொடர்பாக ஊழியர்கள் கேட்ட போது, பயணி கடுமையாக தாக்கியுள்ளார். இது விமானப் பாதுகாப்பு விதிமுறைகளின் கடுமையான மீறலாகும்.காயமடைந்த அனைத்து பணியாளர்களும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது கடுமையான காயங்களுக்கு மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். ஒருவருக்கு முதுகெலும்பு முறிந்துள்ளது. இன்னொருவருக்கு தாடை உடைந்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தால் உள் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பயணியை பறக்கத் தடை செய்யப்பட்ட பட்டியலில் சேர்க்கக் கோரியும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் டி.ஜி.சி.ஏ.,வுக்கு சிசிடிவி காட்சிகளுடன் விமான நிறுவனம் தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

அப்பாவி
ஆக 04, 2025 15:41

அத்தனை ஊழியர்களும் சேர்ந்து அவனை தூக்கி போட்டு மிதிச்சிருக்கணும். தனியா சொகுசு விமானத்தில் போக வேண்டியதுதானே.. இல்லே அப்பாச்சி ஹெலிகாப்டர் இருக்குமே.


ஆரூர் ரங்
ஆக 03, 2025 21:54

இங்கே கல்வீசித் தாக்கியவருக்கு மந்திரி பதவி. மனு கொடுக்க வந்த பெண்ணை அடித்தவர் மந்திரி. மக்களை ஒசி ன்னு கிண்டலடித்தவர் மந்திரி. ஆக முக்கிய தகுதியே அடிதடி வசவு


visu
ஆக 03, 2025 18:19

ஏன் கைது செய்யப்படவில்லை யாரா இருந்தாலும் விமான நிலையத்தில் சட்டத்தை மீறினால் நடவடிக்கை எடுத்தால்தான் பயம் இருக்கும்


Subburamu Krishnasamy
ஆக 03, 2025 18:19

What ever be the reason, manhandling the spicejet stop is highly deplorable. His behavior is damaging the discipline image of the armed forces. Indian army and airport authority must conduct an impartial enquiry and must take appropriate actions against the persons concerned


அப்பாவி
ஆக 03, 2025 17:18

All animals are equal, army animals are more equal.


Apposthalan samlin
ஆக 03, 2025 17:05

முதுகு எலும்பை உடைக்க வேண்டும்


Vijay D Ratnam
ஆக 03, 2025 17:01

ராணுவத்தில் இருந்தா கொம்பா முளைத்து இருக்கு. பொறுக்கிப்பயலா இருப்பானோ. சம்பளத்துக்கு வேலை பார்க்கும் தனியார் நிறுவன ஊழியர்களை விரட்டி விரட்டி தாக்கி இருக்கான். ஒருத்தர் முதுகெலும்பு உடைந்து இருக்கிறது, இன்னொருவருக்கு தாடை உடைந்து இருக்கிறது. ரவுடிப்பயலா இருப்பானோ. கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க படவேண்டும். விமானத்தின் அடிப்பகுதியில் கார்கோ ஹோல்டு பகுதிக்கு கொண்டு போய் அவன் முட்டியை உடைத்து இருக்க வேண்டும். உலகம் முழுக்க விமான பயணத்தில் கேபின் பை என்பது 7 கிலோ மட்டுமே அனுமதிக்கப்படும். இந்தாளு 32 கிலோ எடுத்துட்டு போனால் எப்படி அனுமதிப்பார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும். அந்தாள் ராணுவத்துக்கு அன்ஃபிட். பத்து ஆண்டுகள் ஜெயிலில் தூக்கி போடவேண்டும்.


Padmasridharan
ஆக 03, 2025 16:31

இந்த மாதிரி தாக்குதல்கள் காவலர்கள் நிறையவே செய்வர் ஏனென்றால் இவர்களுக்கு CCTV எங்குள்ளது எங்கில்லை என்பதை நன்கறிவர். பின்பு துரத்தினோம் அவங்களே விழுந்து எலும்பை முறிச்சிக்கிட்டாங்க என்பர்.


Jack
ஆக 03, 2025 15:53

அதிகாரி மப்பில் இருந்திருப்பார் ..சிப்பாய்கள் தான் மன அழுத்தத்தில் இருப்பார்கள்


அசோகன்
ஆக 03, 2025 15:40

ராணுவ வீரர்களின் உடமைகளை எடுத்து செல்ல என்ன கண்டிப்பு வேண்டியிருக்கு...... தேசத்திற்காக உயிரை கொடுப்பவர்களின் உயிரை எடுப்பதுதான் திராவிட கொள்கை...... தயாளன் மூக்கு சிவந்திருக்குமே


சமீபத்திய செய்தி