உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரள மாநில கள் பிரிட்டனில் விற்க முயற்சி

கேரள மாநில கள் பிரிட்டனில் விற்க முயற்சி

திருவனந்தபுரம் : பிரிட்டனில் கள் விற்பனை செய்ய, கேரள மாநில கள் வாரியம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கேரளாவில், 'கள்' விற்பனையை அனுமதித்து அரசின் கள் தொழில் மேம்பாட்டு வாரியம் கண்காணித்து வருகிறது. இந்தியா - பிரிட்டன் இடையே உள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் அடிப்படையில், கேரள கள்ளை பிரிட்டனில் விற்பனை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவாவின், 'பென்னி' மற்றும் நாசிக்கின், 'ஒயின்' பிரிட்டனில் விற்பனை செய்யப்படுவது போல கேரளாவின் கள் விற்பனை பிரிட்டனில் விரைவில் துவங்கும் என, கேரள மாநில கள் வாரிய தலைவர் ஜோசப் தெரிவித்துள்ளார். தென்னை அல்லது பனை மரத்தில் இருந்து இறக்கியவுடன், மூன்று நாட்களுக்கு தான் கள்ளை பயன்படுத்த முடியும். அதன்பின் கெட்டுப்போகும். எனவே, குணம் மற்றும் ஆல்கஹால் தன்மை மாறாமல் ஒன்று முதல் 12 மாதங்கள் வரை இருப்பு வைத்து பயன்படுத்தும் தொழில்நுட்பங்களை வழங்க, தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு கள் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பையும் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. விரைவில், பாட்டிலில் அடைக்கப்பட்ட கேரள மாநில கள் பிரிட்டனில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

VSMani
ஆக 06, 2025 11:18

பிரிட்டனில் கள் விற்பனை செய்ய, கேரள மாநில கள் வாரியம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கேரளா அரசு மக்கள் நலன் அரசு. கேரளா "கள்" ளை பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்ய முயற்சிக்கிறது. ஆனால் நமது தமிழக அரசு அதாவது "டாஸ்மாக் அரசு" வெளிநாட்டு மதுவை நம் மாநியத்தில் தயாரித்து "கள்" ளுக்கு தடைவிதித்து திராவிட திமுக அதிமுக கட்ச்சிகளின் மதுபான ஆலை முதலாளிகளிடம் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றுக்கொண்டு மக்களை சீரழிக்கிறது. இதற்கெல்லாம் ஆட்சி மாற்றம் ஒன்றே தீர்வு. திமுக அதிமுக இல்லாத மாற்று அரசியல் கட்சி ஆட்சி தேவை. மக்கள் யோசித்து சிந்தித்து செயல்பட்டு வாக்களிப்பார்களா? அல்லது, 500 ரூபாய் நோட்டுக்கும் ஒரு குவாட்டருக்கும் ஒரு பிரியாணிக்கும் விலை போவார்களா?


தென்காசி ராஜா ராஜா
ஆக 06, 2025 10:37

இங்கே உள்ள திராவிட மன்னராட்சி கள் க்கு அனுமதி கொடுக்கும்மா


VSMani
ஆக 06, 2025 10:34

குணம் மற்றும் ஆல்கஹால் தன்மை மாறாமல் ஒன்று முதல் 12 மாதங்கள் வரை இருப்பு வைத்து பயன்படுத்தும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தினால் வேதியியல் பொருட்களைத்தான் பயன்படுத்தவேண்டும். வேதியியல் பொருட்களை பயன்படுத்தினால் "கள்" "கெமிக்கல்" ஆகிவிடும்.


Kasimani Baskaran
ஆக 06, 2025 03:56

பாட்டிலில் அடைத்து உலக அளவில் ஏற்றுமதி செய்தால் அண்ணாமலை சொல்வது போல டாஸ்மாக்கை கூட அது சாப்பிட்டு விடும்.


புதிய வீடியோ