உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போலி பாஸ்போர்ட் வங்கதேச நடிகை கைது

போலி பாஸ்போர்ட் வங்கதேச நடிகை கைது

மும்பை: மஹாராஷ்டிராவின் உல்லாஸ்நகரில், ரியா பார்டே என்ற நடிகை வசித்து வந்தார். இவர், பல்வேறு ஆபாச படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் ரியா, நம் அண்டை நாடான வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, அவரது பாஸ்போர்ட்டை ஆய்வு செய்ததில், நம் நாட்டில் சட்டவிரோதமாக அவர் வசித்து வந்ததை போலீசார் கண்டறிந்தனர்.இதைத் தொடர்ந்து, ரியா மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதேபோல் ரியாவுடன், அவரது பெற்றோர், சகோதரர், சகோதரியும் வசித்து வருவது தெரியவந்துள்ளது. எனினும், அவரது பெற்றோர் தற்போது கத்தார் நாட்டில் உள்ளனர். அவரது சகோதரரும், சகோதரியும் தலைமறைவாக உள்ளதால் அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள், எத்தனை நாட்களாக இதுபோல் சட்ட விரோதமாக வசித்து வருகின்றனர் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

RAMAKRISHNAN NATESAN
செப் 28, 2024 09:36

இது மோடியோட தப்பில்ல .......... ஜவஹர்லால் நேருவும் மோதிலால் நேருவும் உள்ளே விட்டுட்டாங்க .....


சமீபத்திய செய்தி