உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வங்கதேசத்தின் துடுக்கு பேச்சு; தடுப்பு போட்டது மத்திய அரசு; இந்தியா வழியாக ஏற்றுமதி செய்ய தடை

வங்கதேசத்தின் துடுக்கு பேச்சு; தடுப்பு போட்டது மத்திய அரசு; இந்தியா வழியாக ஏற்றுமதி செய்ய தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் தங்களுடைய நிலத்தால் சூழப்பட்டுள்ளதாக, அண்டை நாடான வங்கதேச அரசு கூறியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இனி இந்தியா வழியாக வங்கதேசம் ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.நம் அண்டை நாடான வங்கதேசத்தில், நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ், இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக உள்ளார். சீன ஆதரவாளரான இவர், சமீபத்தில் சீன அதிபர் ஷீ ஜின்பிங்கை சந்தித்து பேசினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=d7m3jc0c&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது, வங்கதேசத்தில் முதலீடுகள் செய்வதற்கு அழைப்பு விடுத்தார். 'இந்தியாவின் ஏழு வடகிழக்கு மாநிலங்கள், எங்களுடைய நிலப்பரப்பால் சூழப்பட்டுள்ளன. அவர்களால், வங்கக்கடலை அணுக முடியாது. அதனால், வங்கக்கடலின் பாதுகாவலனாக நாங்கள் உள்ளோம்' என முகமது யூனுஸ் கூறினார்.இதற்கு, மத்திய அரசு கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளது. 'இந்தியா, 6,500 கி.மீ., துார கடலோரத்தைக் கொண்டுள்ளது என்பதை மறந்துவிடக் கூடாது' என, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருந்தார்.இந்நிலையில், வங்கதேசம் தன் ஏற்றுமதிகளை, இந்திய விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் வழியாக மேற்கொள்ள வழங்கப்பட்டிருந்த அனுமதியை, மத்திய அரசு நிறுத்திஉள்ளது.

இதுகுறித்து, வெளியுறவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

நம் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் வழியாக, ஏற்றுமதியை செய்வதற்கு வங்கதேசத்துக்கு அனுமதி கொடுத்திருந்தோம். கடும் நெரிசல் மற்றும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், இந்தியா வழியாக ஏற்றுமதி செய்வதற்கு வங்கதேசத்துக்கு வழங்கியிருந்த அனுமதி நிறுத்தப்படுகிறது.இதன் வாயிலாக நம் ஏற்றுமதியாளர்கள் நீண்ட நேரம் காத்திருப்பது தவிர்க்கப்படும். அதற்காகவே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி, வங்கதேச அரசு கூறிய கருத்துக்கு இதை பதிலடியாக பார்க்கக்கூடாது.அதே நேரத்தில், மற்ற அண்டை நாடுகளான நேபாளம், பூடான், மியான்மருக்கான ஏற்றுமதிகளை மட்டும் இந்தியா வழியாக செய்ய வங்கதேசத்துக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே வந்துள்ள பொருட்கள் நிறுத்தப்படாது. புதிதாக இனி ஏற்க மாட்டோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Subash BV
ஏப் 10, 2025 18:09

MUSLIMS are intolarents. Its always better to be alert with them.


Yasararafath
ஏப் 10, 2025 12:47

இது வஙகதேசத்துக்கும் மத்திய அரசுக்கும் உள்ள பிரச்சனை.


sankaranarayanan
ஏப் 10, 2025 09:50

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பு எடுக்கும் முடிவுகள் போன்று நம் நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் யாராக இருந்தாலும் அண்டை நாடாக இருந்தாலும் அவர்களுக்கு நம் நாட்டில் ஒரு அங்குலம் கூட இடம் கொடுக்கவே கூடாது துணிந்து நில்லுங்கள் சீனாவின் தத்து புத்திரனாக இருந்தாலும் அதே கதிதான்


Neelachandran
ஏப் 10, 2025 09:24

வெளியுறவுத் துறையின் ராஜரீக வார்த்தைகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது


Mecca Shivan
ஏப் 10, 2025 08:13

காங்கிரஸ் பாரதத்திற்கு செய்த பல துரோகங்களில் மிக முக்கியமான ஐந்து .. ஒன்று கச்சத்தீவை தாரை வார்த்தது ..இரண்டாவது வங்கதேசத்தை உருவாக்கியபோது இப்போதைய மிசோரம் வங்கதேச எல்லையருகே வங்கதேச பகுதியில் கணிசமாக இந்தியாவுடன் இணைத்திருக்கலாம் . மூன்றாவது ஜம்மு அரசர் இந்தியாவிடம் உதவி கேட்ட உடனேயே பெரும் படையை அனுப்பியிருந்தால் இன்று மொத்த காஷ்மீரும் நம் கட்டுப்பாட்டில் இருந்திருக்கும் .. சீனாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே இருக்கும் எல்லையும் இருந்திருக்காது ..சீனாவும் அக்சின் காஷ்மீர்பகுதியை பாகிஸ்தானிடமிருந்து பிச்சையாக பெற்றிருக்காது .. நான்காவது மாலத்தீவுகள் மற்றும் குறைந்தபட்சம் தமிழீழ இலங்கையில் உரிமை கோராமல் பிரிட்டிஷ்காரர்களிடம் மண்டியிட்டது . ஐந்தாவது நேபால், பூட்டான் மற்றும் திபெத் பகுதிகளையும் உள்ளடக்கிய பாரதத்தை தவறவிட்டது


Manithan
ஏப் 10, 2025 08:37

மிக மிக சரியான கூற்று. தெளிவான புரிதல் மக்களிடம் வேண்டும். ஆட்சியாளர்கள் உண்மையை புரிய விடாமல் கல்வி திட்டத்தை கெடுத்து வைத்துள்ளார்கள்.


Minimole P C
ஏப் 10, 2025 08:05

This guy Yunus is unnecessaorily creating peoblems between India and Bdesh. He must be squarly dealt by the Indian Govt. Trump doesnt like this guy as he is Bidens servant. He only gave him Noble prize. But he never behaves like a Nobel lauratte.


SRIDHAAR.R
ஏப் 10, 2025 07:34

பாரத தேசத்திற்கு எதிரான சக்திகளை யாராக இருந்தாலும் ஒழித்துக்கட்ட வேண்டும்


Kogulan
ஏப் 10, 2025 07:02

இந்தியாவின் வலிமை தெரிந்தும் சிறுபிள்ளை தன்மையால் பங்களா நடிக்கிறது


Ram Moorthy
ஏப் 10, 2025 03:34

இந்தியா நன்றி இல்லாத அண்டை நாடுகளுக்கு குறைந்த விலையில் வாகன எரிபொருள் உணவு மருந்துகளை தாராளமாக கொடுத்து வருகிறது ஆனால் வோட்டு போட்ட மக்களுக்கு சொந்த நாட்டு மக்களுக்கு எந்த நேரடி உதவியும் செய்வதில்லை என்ன காரணம் என்றும் தெரியவில்லை அகதியாக வந்தவன் கூட அரசு வேலை அரசு மனையில் சுதந்திரமாக வாழ்கிறான் ஆனால் பாஜக கட்சி ஆதரவாளன் என்று பெருமை கொள்ள இடம் இல்லை எல்லாம் மாறும் என்று நினைத்த எங்களுக்கு உழைப்பு மற்றும் துன்பம் மட்டுமே மிச்சம்


Sivakumar
ஏப் 10, 2025 05:30

நானும் ஒரு பிஜேபி அனுதாபி தான். மாற்றத்திற்காக இரண்டுமுறை வாக்களித்து ஏமாற்றமே மிச்சம். காங்கிரஸ் ஆட்சி எவ்வளோ மேல். கண் கேட்டபின் சூரிய நமஸ்காரம் என எனக்கு நானே கூறிக்கொள்கிறேன்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 10, 2025 06:39

உங்களுடைய ஆதங்கம் புரிகிறது. அதனால் தான் திராவிட கட்சிகளை இனிமேல் தலை தூக்காதபடி ஒழித்து கட்ட வேண்டும். இல்லையெனில் கார்கே கூறியது போல இரண்டாவது அல்ல மூன்றாவது சுதந்திர போர் வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை