உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வரையாடு பிரசவ காலம் துவக்கம்; பிப்.1ல் இரவிகுளம் பூங்கா மூடல்

வரையாடு பிரசவ காலம் துவக்கம்; பிப்.1ல் இரவிகுளம் பூங்கா மூடல்

மூணாறு; மூணாறு அருகே இரவிகுளம் தேசிய பூங்காவில் வரையாடுகள் பிரசவிக்க துவங்கியதால் பிப்ரவரி முதல் தேதி முதல் பூங்கா மூடப்பட உள்ளது.இங்கு அபூர்வ இன வரையாடு ஏராளம் உள்ளன. பூங்காவுக்கு உட்பட்ட ராஜமலைக்கு சுற்றுலா பயணிகளை கடும் கட்டுப்பாடுகளுடன் வனத்துறையினர் அனுமதிக்கின்றனர். தென்மேற்கு பருவ மழை துவங்கியதும் ஜூன், ஜூலையில் மேக மூட்டத்துடன் பெய்யும் சாரல் மழையின் போது வரையாடுகள் இனப்பெருக்கத்தில் ஈடுபடும். பிரவச காலம் பிப்ரவரியில் துவங்கி, மார்ச் இறுதி வரை நீடிக்கும். அப்போது ராஜமலைக்கு பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை.ஜனவரியில் வனக்காவலர்கள் அவற்றை கண்காணிப்பது வழக்கம். அவ்வாறு கண்காணிக்கப்பட்டதில் தற்போது, 2 குட்டிகள் பிறந்ததாக தெரியவந்தது. புதிதாக பிறந்த குட்டிகள் ராஜமலையில் தாயுடன் வலம் வருகின்றன. வரையாடுகளின் பிரசவம் துவங்கியதால் வழக்கம் போல் பிப்., ஒன்றில் பூங்கா மூடப்பட உள்ளது.ஏப்.29 முதல் மே 2 வரை நடந்த கணக்கெடுப்பில் இரவிகுளம் தேசிய பூங்காவில் புதிதாக பிறந்த 144 குட்டிகள் உள்பட 827 வரையாடுகள் உள்ளது. தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை