உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெண் பயிற்சி டாக்டர் கொலை வழக்கு குற்றவாளிக்கு தூக்கு தண்டனை கொடுங்கள்; மே.வங்க அரசு மேல்முறையீடு!

பெண் பயிற்சி டாக்டர் கொலை வழக்கு குற்றவாளிக்கு தூக்கு தண்டனை கொடுங்கள்; மே.வங்க அரசு மேல்முறையீடு!

கோல்கட்டா: கோல்கட்டாவில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்த கீழமை கோர்ட் தீர்ப்புக்கு எதிராகவும், தூக்கு தண்டனை விதிக்கக் கோரியும் மே.வங்க அரசு ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8fk76kyf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு கோல்கட்டாவில், ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு, ஜூனியர் டாக்டராக பணியாற்றி வந்த 31 வயது பெண், கடந்தாண்டு ஆக., 9ல் மருத்துவமனையின் கருத்தரங்க அரங்கில் பிணமாக கிடந்தார்.கொலை நடந்த மறுதினம், சஞ்சய் ராய் என்ற இளைஞரை, போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு பின், குற்றவாளி சஞ்சய் ராய் மீது, பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கில் நேற்று (ஜன.,20) நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. குற்றவாளியான சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.இந்த தீர்ப்பிற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் டாக்டர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். ஆயுள் தண்டனை போதாது. தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்நிலையில், இன்று (ஜன.,21) குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்த கீழமை கோர்ட் தீர்ப்புக்கு எதிராகவும், தூக்கு தண்டனை விதிக்கக் கோரியும் மே.வங்க அரசு ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. 'ஏற்கனவே, குற்றவாளியான சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிப்பதே அனைவரது விருப்பம்' என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்து இருந்தார். இந்நிலையில், ஆயுள் தண்டனை விதித்த கீழமை கோர்ட் தீர்ப்புக்கு எதிராக ஐகோர்ட்டில் மேற்குவங்க அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

M Ramachandran
ஜன 22, 2025 17:19

இந்த அம்மா தகிடு தித்த பேர்வழி. பேச்சில் ஏதோ வில்லங்கம் தெரியுது


Minimole P C
ஜன 22, 2025 08:24

Mamta has to stop her practice of staging drama for evil things in soceity. If police governance is good and no corruption, the right things will happen automatically and evil things will perish and everybody will start beliving in law. Every time this lady is a law breaker in every agitations and now to save her face she pretends like this. First a soceity that respects and regards the law of the nation, then crime will get reduced as an off shoot effect.


Venkateswaran Rajaram
ஜன 21, 2025 19:21

இந்த பொம்பள ஓட்டுக்காக என்ன வேணும்னாலும் செய்யும் ,கிள்ளிவிட்டு தொட்டில் ஆட்டி விடும்.


அப்பாவி
ஜன 21, 2025 18:37

மொத்த டாக்டர்களும் இறங்கி போராடினால் ஒழிய தூக்காவது கூஜாவாவது..


Sudha
ஜன 21, 2025 18:17

மேற்கு வங்கத்தில் ஒரு பயனற்ற ஆட்சியை அசைத்து கீழே இற க்கியவர் மம்தா. ஒரு சில பிஜேபி ஆதரவு முதல்வர்கள் போல் அல்லாமல், துணிச்சலாக எதிர்ப்பவர். தமிழக ஈழ உறவை போல மேற்கு வங்க பங்களாதேஷ் உறவு இயற்கையானது. 60 ஆண்டுகள் மத்திய அரசு இந்த உறவை கட்டுப்படுத்த முடியாமல் கொச்சைப்படுத்தியது. இப்பொழுது முன்னேற முயற்சிக்கும் மேற்கு வங்கத்தை வெறும் வார்த்தைகளால் வளைக்க பார்ப்பது பிஜேபி தான். சொந்த ஊரான டெல்லி யிலேயே தடுமாறும் பிஜேபி மண்ணின் மகளை வஞ்சனையால் வெல்ல பார்க்கிறது. Live and let live என்பதை பிஜேபி கடைபிடிக்கவேண்டும். இந்த காமுகன் தூக்கில் இட்டாலும் ஆயுள் பெற்றாலும் மம்தாவின் சதி என்று பெரும் போது சிரிப்பு வருகிறது. இதே போன்ற குற்றம் அண்ணா பல்கலையில் நடந்துள்ளது. என்ன செய்கிறார்கள் பார்ப்போம். அங்கே சிபிஐ விசாரணை வேறு. கேட்டல் மம்தா எல்லாவற்றையும் அழித்து விட்டாராம். ஆக ஒரு முதலவர் என்ன வேண்டுமானாலும் செய்வார் என்று சொல்ல்பவர்கள், அதை தமிழகம் கர்நாடக கேரளா அனைத்திலும் பொருத்தி பாருங்கள்


என்றும் இந்தியன்
ஜன 21, 2025 17:40

நம்ப முடியாதவை இதில் 1-ஒருவன் கற்பழித்திருக்க முடியாது ஒரு பெண்ணை இந்த காலத்தில் அவர்களும் சண்டைக்கு வந்திருப்பார்கள் 2- ஒருவன் ஒருத்தியை கொலை செய்திருக்க முடியாது 3 ஒருக்காலும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு இவனுக்கு கடும் தண்டனை கொடு என்று சொல்லமாட்டார்கள். அதன் காரணம் இப்படித்தானிருக்கமுடியும். இதன் உள்ளே ஒரு பெரிய வலை இருக்கின்றது அதாவது இவன் உயிரோடு இருந்தால் அந்த பெரிய குழுமம் எது என்று இந்திய மக்கள் அனைவருக்கும் தெரிந்து விடும் என்று இவனை இவர்கள் கொலை செய்யாமல் நீதிமன்றம் செய்ததாக இருந்தால் தப்பித்து விடலாம் என்று TMC பிளான் என்று மிக மிக தெளிவாகத்தெரிகின்றது


Barakat Ali
ஜன 21, 2025 17:39

சகோதரர் துக்ளக்கார் போலவே அணுகுமுறை ....... விஷ விருட்சங்கள் அனைத்தும் இப்படித்தானா ????


K.n. Dhasarathan
ஜன 21, 2025 17:26

கோலைக்காரர்களும் கொள்ளைக்காரர்களும் சுதந்திரமாக உலவுவது இதனால்தான், இது ஒரு தீர்ப்பு, மேல் முறையீடு, பிறகு பல வருடங்கள் கொலைகாரர்கள் சுகமான சிறை வாசம், நீதிபதிகளுக்கு எப்போதுதான் உண்மையான உணர்வு வரும் ? ஒரு கொலை அதுவும் அதிகாலை 03.00 am அளவில் நடந்திருக்கிறது, உலகத்து அனைத்து உயிர்களும் நல்ல தூக்கத்தில் இருக்கும்போது இந்த வெறி பிடித்த மிருகம், அந்த மருத்துவரை பாலியல் கொடுமை செய்தது, அடுத்து தாக்குதல் நடத்தி, கொலையும் செய்து, தப்பி உள்ளது. இவனை போன்றா மிருகங்கள் தேவையா ? இவன் உயிரோடு இருந்து பல செலவுகளும் செய்து அரசு அவனை வைத்திருக்கணுமா ? நீதி துறை மிக மென்மையாக நடந்து கொள்கிறது. சரியில்லை, இவனை போன்றவர்களை ஊக்குவிப்பது போல இருக்கிறது.


கத்தரிக்காய் வியாபாரி
ஜன 21, 2025 16:54

ஒருபக்கம் இப்படி தீர்ப்பு குடுக்க அழுத்தம் குடுத்துவிட்டு, இப்ப மேல்முறையீடு


S Srinivasan
ஜன 21, 2025 15:44

Ellam drama,