உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹார் சட்டசபை தேர்தல் எதிரொலி: சலுகை அறிவிப்பில் ரயில்வே தீவிரம்

பீஹார் சட்டசபை தேர்தல் எதிரொலி: சலுகை அறிவிப்பில் ரயில்வே தீவிரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பீஹார் மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால், புதிய ரயில்கள் இயக்கம், 10 ரயில்கள் நீட்டிப்பு போன்ற அறிவிப்புகளை ரயில்வே துறை வெளியிட்டுள்ளது. பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த அரசின் பதவிக்காலம் வரும் நவம்பரில் முடிகிறது. விரைவில் அங்கு பொதுத் தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்நிலையில், ரயில்வே துறையின் கவனம் பீஹார் பக்கம் திரும்பி உள்ளது. அம்மாநில மக்களை கவரும் வகையில், பல ஆண்டுகளாக இருக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றும் பணியை ரயில்வே நிர்வாகம் தீவிரப்படுத்தி உள்ளது. பீஹார், ஜார்க்கண்ட், மேற்கு வங்க மாநிலங்களில் உள்ள ஐந்து மாவட்டங்களை இணைக்கும் பாகல்பூர் - தும்கா -ராம்பூர்ஹட் இடையே, 177 கி.மீ., நீளமுள்ள ஒரு வழி ரயில் பாதையை, 3,169 கோடி ரூபாய் செலவில் இரட்டை வழிப்பாதையாக மாற்ற, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அத்துடன், ஈரோட்டில் இருந்து சென்னை பெரம்பூர் வழியாக, பீஹார் மாநிலம் ஜோக்பானிக்கு, 'அம்ரித் பாரத்' ரயில் சேவையை, நாளை மறுதினம் பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளார். மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி - ராஜேந்திரா நகர் விரைவு ரயில், பீஹார் மாநிலம் ஆராவுக்கும்; மஹராஷ்டிர மாநிலம் புனே - பீஹார் மாநிலம் தானாபூர் விரைவு ரயில் சுபாலுக்கும்; பீஹார் மாநிலம் ராஜ்கிர் ரயில், ஜார்க்கண்ட் மாநிலம் கோடெர்மாவுக்கும் என, மொத்தம் 10 விரைவு ரயில்களின் சேவையை நீட்டித்து இயக்க, அந்தந்த ரயில்வே மண்டலங்கள் தயாராக வேண்டும் என ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. ரயில்வேயில் நீண்ட காலமாக இருந்த கோரிக்கைகள் தற்போது நிறைவேற்றப்படுவது, பீஹார் மாநில ரயில் பயணியர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Barakat Ali
செப் 13, 2025 12:57

தமிழகம் போன்ற முன்னேறிய மாநிலங்களுக்குச் சலுகைகள் தேவையில்லை ... உ பி , பீகார் போன்ற முன்னேறும் மாநிலங்களுக்கே தேவை ......


suren
செப் 13, 2025 11:18

பீகாருக்கு முன்னுறிமை கொடுப்பது நியாயம் தான் ஆனால் தமிழகம் போன்ற நல்லவரவேற்புள்ள ரயில் வழித்தடங்களில் சென்னையுடன் திரும்பும் வடமாநில ரயில்களை சுமார் 40 ரயில்களய் தமிழ்நாடு முழவதும் உள்ள நெரிசல் உள்ள வழித்தடத்தில் நீடிப்பது காலத்தின் கட்டாயம். உதாரணம் வாரம் முழுவதும் ஓடும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உடன் கன்னியாகுமாரி -சென்னை egmore ரயில் நேர ஒற்றுமை உள்ள ரயில்களை இணைத்து இயக்கலாமே. என்று தணியும் இந்த சொதந்திர தாக்கம் .


Gokul Krishnan
செப் 13, 2025 08:41

முன் பதிவு பெட்டியில் கூட டிக்கெட் வாங்காமல் பயணிக்கும் பீகாருக்கு வந்தே பாரத் ரயில் அதுவும் அதிகாலை 3.25 புறப்படும் ரயில் 450 கிலோமீட்டர் தொலைவை 8 மணி 30 நிமிடத்தில் கடக்கும் வந்தே பாரத் ரயில் தேர்தல் ஜூரம் பிஜேபியை எந்த லெவலுக்கும் போக வைக்கும்


Gokul Krishnan
செப் 13, 2025 08:37

இதை பிற கட்சிகள் செய்தால் தேர்தலுக்காக நாடகம் என்று விமர்சனம் செய்யும் பிஜேபி செய்தால் மக்கள் மகிழ்ச்சி


அப்பாவி
செப் 13, 2025 08:37

தேர்தல் வரைக்கும்சலுகை குடுத்திட்டு முடிஞ்சதும் சேத்து வெச்சு உருவிடலாம்.


Moorthy
செப் 13, 2025 06:42

மூத்த குடிமக்கள் கட்டண சலுகை எங்கே ??


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை