மேலும் செய்திகள்
5 தொகுதிகளில் ஓவைசி கட்சி வெற்றி
36 minutes ago
ராஜஸ்தான், தெலுங்கானாவில் காங்.,குக்கு ஆறுதல் பரிசு
37 minutes ago
மிகவும் அவசியம்!
43 minutes ago
சுற்றுச்சூழல் ஆர்வலர் சாலுமரத திம்மக்கா 114 வயதில் மரணம்
48 minutes ago
பாட்னா: பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் அமைச்சரவையில் அமைச்சர்களாக உள்ள பா.ஜ.,வின் பிரேம் குமார் மற்றும் ஐக்கிய ஜனதா தளத்தின் பிஜேந்திர பிரசாத் யாதவ் தொடர்ந்து ஒன்பதாவது முறையாக எம். எல்.ஏ.,வாக வெற்றி பெற்றுள்ளனர். தற்போது நிதிஷ் அமைச்சரவையில் கூட்டுறவு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக உள்ள பா.ஜ.,வின் பிரேம் குமார், கயா தொகுதியில் போட்டியிட்டார். இதே போல், மின் துறை அமைச்சராக உள்ள ஐக்கிய ஜனதா தளத்தின் பிஜேந்திர பிரசாத் யாதவ் சுபால் தொகுதியில் போட்டியிட்டார். இவர்கள் இருவரும் 1990ல் இருந்து தொகுதி மாறாமல் கயா மற்றும் சுபாலில் இருந்து போட்டியிட்டு வருகின்றனர். தொடர்ந்து ஒன்பதாவது முறையாக அதே தொகுதிகளில் போட்டியிட்ட இவர்கள், இந்த முறையும் பல ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்து உள்ளனர்.
36 minutes ago
37 minutes ago
43 minutes ago
48 minutes ago