உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பார்லிமென்டிற்கு வர வேண்டும்; எம்.பி.,க்களுக்கு பா.ஜ.,, காங்., உத்தரவு

பார்லிமென்டிற்கு வர வேண்டும்; எம்.பி.,க்களுக்கு பா.ஜ.,, காங்., உத்தரவு

புதுடில்லி: திருத்தப்பட்ட வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நாளை லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், எம்.பி.,க்கள் அனைவரும் கட்டாயம் பார்லிமென்டில் இருக்க வேண்டும் என பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கொறடா உத்தரவு பிறப்பித்து உள்ளது. கடந்த ஆண்டு ஆக., மாதம் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்பு காரணமாக, அம்மசோதா பார்லிமென்ட் கூட்டுக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. குழு உறுப்பினர்கள், விரிவான ஆலோசனைக்கு பிறகு திருத்தப்பட்ட வக்பு வாரிய மசோதாவை மத்திய அரசிடம் தாக்கல் செய்தனர். இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. இதற்கும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=k4227si8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் பார்லிமென்ட் கூட்டத்தொடர் வரும் 4ம் தேதி முடியும் நிலையில், இம்மசோதா நாளை( ஏப்.,2) லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. தொடர்ந்து ராஜ்யசபாவிலும் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனையடுத்து லோக்சபா எம்.பி.,க்கள் அனைவரும் நாளை தவறாமல் பார்லிமென்டிற்கு வர வேண்டும் என பா.ஜ., கொறடா உத்தரவு பிறப்பித்து உள்ளது.அதேபோல், 3ம் தேதி ராஜ்யசபா எம்.பி.,க்கள் அனைவரும் அவைக்கு வர வேண்டும் எனவும் பா.ஜ., கொறடா உத்தரவு பிறப்பித்து உள்ளது.

காங்கிரசும் உத்தரவு

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியும், லோக்சபா எம்.பி.,க்களுக்கு நாளை அவைக்கு வர வேண்டும் என கொறடா உத்தரவு பிறப்பித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

spr
ஏப் 01, 2025 20:31

பாராளுமன்றம் சட்ட மன்றத்தை முடக்கும் நபரை கண்டுபிடித்து தாற்காலிக விலக்கம் செய்வதோடு, அந்தக் கூட்டத் தொடர் காலம் முழுவதற்கும் ஊதியம் சலுகைகள் வழங்கக்கூடாது. மத்திய அரசு இதற்கான சட்டத்தை உருவாக்கி அமுல்படுத்தலாம் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்யும் ஆளும்கட்சி ஆதரவில் இது சட்டமாக்கப்படும். இவை எதுவும் நடக்க வாய்ப்பில்லை என்றாலும் சொல்லி வைப்போமே.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 01, 2025 18:33

பாஜக உத்தரவு போட்டது நியாயம் ஏனெனில் ஆளும் கட்சி கண்டிப்பாக விவாதத்தில் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும். கட்டாயம். ஆனால் காங்கிரஸ் எதற்கு உத்தரவு போட்டது என்று தெரியவில்லை. காங்கிரஸ் தலைவர் டீ சர்ட் போட்டு கொண்டு வந்து கேஷூவலாக வருபவர். எதிர்க்கட்சிகளுக்கு தெரிந்தது எல்லாம் சபை நடுவே வந்து பதாகை ஏந்தி காச் மூச் சென்று கத்தி ரகளை செய்து வெளிநடப்பு செய்கிறோம் என்று வெளியே வந்து தயாராக உள்ள ஊடக மைக் முன்பு நின்று ஷோ காட்டி விட்டு கலைந்து சென்று விடுவார்கள். நாடாளுமன்றத்தை முடக்கி விட்டோம் என்று வாய் சவடால் விடுவார்கள். அங்கே பாராளுமன்றத்தின் உள்ளே மசோதா எதிர்ப்பு எதுவும் இல்லாமல் பாஸாகி விடும். கடைசியில் காங்கிரஸ் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் இந்த சினிமா காட்சியால் பலனைடய போவது தொலைகாட்சிகள் தான். விதவிதமான செய்தி ஒளிபரப்பு பேட்டிகள் விவாதங்கள் போன்றவைகளால் டிஅர்பி ரேட் யாருக்கு அதிகம் என்ற போட்டியில் வெல்வது யார் என்பது தான் கேள்வி. விவாதங்களில் பங்கேற்போருக்கு கணிசமான ஊதியம் கிடைக்கும். போக்குவரத்து படி கிடைக்கும்.


Rajah
ஏப் 01, 2025 18:14

எல்லா மதங்களின் சொத்துக்களையும் மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரவேண்டும். இதற்கென தனி அமைச்சு அமைக்கப்பட வேண்டும்.


Ramesh Sargam
ஏப் 01, 2025 17:30

இப்பவும் வருகிறார்கள். ஆனால் என்ன எந்த விவாதத்திலும் பங்கு கொள்ளாமல், ரகளை செய்துவிட்டு, கேன்டீன் சென்று அங்கே நன்றாக தின்றுவிட்டு வீட்டுக்கு சென்றுவிடுவார்கள்.


sankaranarayanan
ஏப் 01, 2025 17:25

பள்ளிகளில் ஸ்பெஷல் கிளாஸ் என்பார்கள் அதுபோன்றே காங்கிரசு ஆட்சியினுள் ஸ்பெஷல் ஆக ஒரு மதத்தினருக்கு மட்டும் பொருந்துபடி கொண்டுவந்த அயோக்கியத்தனம் இதை அடியோடு அழிக்க வேண்டும் இதனால் இழப்பு இங்கே வாழணும் அந்நிய மதத்தினர் அனைவருக்குமே


கல்யாணராமன்
ஏப் 01, 2025 17:17

அப்படி எவரேனும் ஆஜர் ஆகாமல் இருந்தால் அவர்களை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.


ஆரூர் ரங்
ஏப் 01, 2025 16:53

வக்ஃபு வருமானங்கள் சொத்துக்களை அவர்களைச் சார்ந்த திமிங்கலங்கள்தான் அதிகமாக அனுபவிக்கின்றனர் என்பதை அச்சமூகத்து சாமானிய மக்களே புரிந்து கொள்ளவேண்டும். சுரண்டலைத் தடுக்க சட்டம் என்றவுடன் துள்ளிக் குதிப்பது வாக்குவங்கி அரசியலுக்காகதான்.


J.V. Iyer
ஏப் 01, 2025 16:41

இந்த சட்டத்திருத்தம் நல்லமுறையில் சட்டமாக வாழ்த்துக்கள். இது மற்ற மதத்தினருக்கு நிம்மதி அளிக்கும். பொதுமக்களுக்கும் அமைதி.


சமீபத்திய செய்தி