உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; உச்சகட்ட பரபரப்பு

டில்லி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; உச்சகட்ட பரபரப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நிகழ்த்தப்பட்ட நிலையில், இண்டிகோ விமான நிறுவனத்தின் குறைகேட்பு பக்கத்தில், டில்லி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10ம் தேதி டில்லி செங்கோட்டையில் உமர் என்பவன் ஓட்டி வந்த கார் மூலம் வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றினான். இந்த தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். தலைநகரில் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக என்ஐஏ குழு அமைத்து விசாரித்து வருகிறது. இந்தத் தாக்குதல் சம்பவத்தில் டாக்டர்கள் போன்ற உயர்நிலையில் உள்ளவர்களுக்கு தொடர்பிருப்பது தெரிய வந்தது. மேலும், இது தொடர்பாக அடுத்தடுத்து டாக்டர்கள் சிக்கி வருகின்றனர். கார் வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து டில்லியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. பல்வேறு இடங்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.இந்த நிலையில், இண்டிகோ விமான நிறுவனத்தின் குறைகேட்பு பக்கத்தில், டில்லி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. இதேபோல, சென்னை, கோவா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள விமானநிலையங்களுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினர். இது குறித்து டில்லி போலீசார் கூறுகையில், 'நேற்று மாலை 4 மணியளவில் தீயணைப்பு வீரர்களுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில், டில்லி விமான நிலையத்தின் 3வது முனையத்தில் வெடிகுண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு நேரில் சென்று தீவிர சோதனை நடத்தப்பட்டது. அதன்பிறகு தான் அது புரளி என தெரியவந்தது. இதேபோல, பிற பகுதியில் உள்ள விமான நிலையங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. அங்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

சிந்தனை
நவ 13, 2025 21:07

நாட்டில் நிர்வாகம் பலமாக இல்லை என்றால் இப்படித்தான் கூத்தாடிகள் எல்லாம் மிரட்டுவார்கள்


Vasan
நவ 13, 2025 14:26

சம்பவம் மற்றும் புரளி : செய்பவர்கள் சொல்ல மாட்டார்கள். சொல்பவர்கள் செய்ய மாட்டார்கள்.


NALAM VIRUMBI
நவ 13, 2025 14:11

அரசியல் சாயம் என்பது போன்ற பேச்சு பேசும் உள்நாட்டு தேச விரோத சக்திகளை களை எடுக்க வேண்டும். இது மிகவும் அவசியம், அவசரமும் கூட.


sundar
நவ 13, 2025 11:44

அமைதிகளின் அமைதியான வேலை


C.Jeyabalan
நவ 13, 2025 11:32

வதந்திபரப்பும் இந்த மாதிரி நபர்களை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும். மதம் & அரசியல் சாயம் பூசாமல் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும். நம்மால் நிச்சயம் கண்டுபிடிக்க இயலும்.


Sugumar Mukambikeswaran
நவ 13, 2025 13:14

அரசியல் சாயம் நல்லா சப்பைக்கட்டு.


புதிய வீடியோ