உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  சென்னை, டில்லி, மும்பை உட்பட 5 ஏர்போர்ட்டுக்கு குண்டு மிரட்டல்

 சென்னை, டில்லி, மும்பை உட்பட 5 ஏர்போர்ட்டுக்கு குண்டு மிரட்டல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சென்னை, டில்லி, மும்பை, திருவனந்தபுரம், ஹைதராபாத் ஆகிய ஐந்து விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஹரியானாவின் குருகிராமை தலைமை இடமாக கொண்டு செயல்படும், 'இண்டிகோ' விமான நிறுவனத்துக்கு நேற்று பிற்பகல் 3:30 மணியளவில், 'இ - மெயில்' மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதில், 'சென்னை, டில்லி, மும்பை, திருவனந்தபுரம், ஹைதராபாத் ஆகிய சர்வதேச விமான நிலையங்களில் குண்டு வெடிக்கும்' என, குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, அந்த விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மோப்ப நாய் கொண்டு சோதனை நடத்தப்பட்டது. எனினும் வெடிகுண்டுகள் சிக்கவில்லை. இதனால், வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இதை தொடர்ந்து, மஹாராஷ்டிராவின் மும்பையில் இருந்து உத்தர பிரதேசத்தின் வாரணாசிக்கு நேற்று சென்ற, 'ஏர் இந்தியா எக்ஸ் பிரஸ்' விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வாரணாசி விமான நிலையத்துக்கு, இ - மெயிலில் வந்த இந்த மிரட்டலில், விமானத்தில் வைக்கப்பட்டுள்ள குண்டு வெடித்து நடுவானில் விமானம் சிதறும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, பறந்து கொண்டிருந்த விமானத்தில் சோதனை நடத்தப்பட்டது. வாரணாசி விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டு விமானத்தில் இருந்த பயணியர் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
நவ 13, 2025 07:53

மேற்குறிப்பிட்ட ஐந்து விமான நிலையங்களைத்தவிர மற்ற விமான நிலையங்களும், குறிப்பாக பெங்களூரு, கொல்கத்தா போன்ற விமான நிலையங்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. நாடுமுழுவதும் காவல்துறையினர் அந்த அமைதி மார்கத்தினர் குடியிருக்கும் இடங்களை தொடர்ந்து கண்காணிக்கவேண்டும். இனி மனிதாபிமானம், சகோதரத்துவம் போன்றவை அந்த அமைதி மார்கத்தினரிடம் சரிப்பட்டுவராது. நான் அவர்களுக்கு எதிரியல்ல. ஆனால் அவர்களில் இருக்கும் ஒருசில தேசதுரோகிகளால் அவர்களின் ஒட்டுமொத்த சமூகத்துக்கே அவப்பெயர்.


Ramesh Sargam
நவ 13, 2025 07:38

அந்த அமைதி மார்கத்தினர் இந்தியாவில் குடியிருக்கும் அனைத்து இடங்களையும் சோதனை செய்து, அங்கு பதுங்கியுள்ள கோழைகளை சுட்டுத்தள்ளவேண்டும். அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் இந்திய துரோகிகள் இருப்பிடங்களை சீக்கிரம் கண்டறிந்து அவர்களையும் சுட்டுத்தள்ளவேண்டும். இன்னும் எவ்வளவு வருடங்களுக்கு நாம் இப்படி அவர்களால் பயந்து பயந்து சாகவேண்டும்?


Kasimani Baskaran
நவ 13, 2025 03:57

1111 க்காக காத்திருந்து இருக்கிறார்கள். தெய்வாதீனமாக வெடி மருந்து முன்னரே வெடித்து காட்டிக்கொடுத்து விட்டது. ஆணி வேர் வரை சென்று இதுகளை அழிக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை