உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருமணத்துக்கு வற்புறுத்திய காதலியை கொன்று புதைத்த காதலன் சிக்கினார்: 6 மாதத்துக்கு பின் காதலன் கைது

திருமணத்துக்கு வற்புறுத்திய காதலியை கொன்று புதைத்த காதலன் சிக்கினார்: 6 மாதத்துக்கு பின் காதலன் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கதக்: கர்நாடகாவில், திருமணத்திற்கு வற்புறுத்தியதால் காதலியை கழுத்தை நெரித்துக் கொன்று, உடலை புதைத்த காதலன் ஆறு மாதங்களுக்கு பின் கைது செய்யப்பட்டு உள்ளார்.கர்நாடக மாநிலம், கதக் அருகே நாராயணபுரா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சதீஷ் ஹிரேமத், 27 மற்றும் மதுஸ்ரீ அங்காடி, 24. இருவரும் ஆறு ஆண்டுகளாக காதலித்தனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இவர்களின் காதல் விவகாரம், மதுஸ்ரீ குடும்பத்தினருக்கு தெரிந்தது. காதலை கைவிடும்படி கூறினர். மதுஸ்ரீ கேட்கவில்லை. இதனால், கதக்கில் உள்ள உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.கடந்த ஆண்டு டிசம்பர் 16ம் தேதி உறவினர் வீட்டில் இருந்து, மதுஸ்ரீ வெளியேறினார். பின், அவர் எங்கு சென்றார் என்று தகவல் இல்லை. அவரது மொபைல்போனும், 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டது. மதுஸ்ரீ குடும்பத்தினர் அளித்த புகாரில், காதலன் சதீஷை பிடித்து போலீசார் விசாரித்தனர்.'மதுஸ்ரீ என்னிடம் வந்தது உண்மை தான். ஆனால், அவருக்கு புத்திமதி கூறி, வீட்டிற்கு அனுப்பி வைத்தேன். அதன்பின் அவர் எங்கு சென்றார் என தெரியாது' என, சதீஷ் கூறி உள்ளார். அவரை போலீசார் விட்டுவிட்டனர்.பெட்ரோல் பங்க்கில் வேலை செய்த சதீஷ், எப்போதும் போல் வேலைக்கு சென்று வந்தார். மதுஸ்ரீயின் மொபைல் நம்பரை வைத்து, கடைசியாக அவரது மொபைல் டவர் எங்கு காண்பித்தது என்று, போலீசார் ஆய்வு செய்தனர். சதீஷ் இறக்கி விட்டதாக கூறிய இடத்திற்கு, மதுஸ்ரீ செல்லவே இல்லை என்பதை போலீசார் உறுதி செய்தனர். இதனால் நேற்று முன்தினம் சதீஷை பிடித்து மீண்டும் விசாரித்தனர். இதில், மதுஸ்ரீயை கொன்றதை ஒப்புக் கொண்டார். அவர் கைது செய்யப்பட்டார்.திருமணத்துக்கு வலியுறுத்தியதால், மதுஸ்ரீயைக் கொன்று, நாராயணபுரா கிராமத்தில் உள்ள தன் பண்ணை வீட்டில் புதைத்ததாக சதீஷ் கூறினார்.அந்த இடத்திற்கு சதீஷை நேற்று போலீசார் அழைத்து சென்றனர். உடல் புதைக்கப்பட்ட இடத்தில், சில எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றை டி.என்.ஏ., சோதனைக்கு போலீசார் அனுப்பியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ஆரூர் ரங்
ஜூன் 16, 2025 14:48

முன்பு போல சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் ன்னு அழுத்தமா குறிப்பிடுங்கள்.


MP.K
ஜூன் 16, 2025 09:29

ஆறு ஆண்டுகள் காதலித்த பெண்ணை காதலியை திருமணம் செய்து கொள்ளாமல் கொலை செய்து எவளோ பெரிய அபத்தம் ? உன் காதலி என்ன கேட்டார் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றல் அதுக்கே கொலை செய்கிறாய் என்றால் உன் காதல் பொய் என்பதை அறியாத அந்த பெண்ணை நினைத்து தான் வருந்த வேண்டும்.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 16, 2025 07:01

ஒழுங்கா அப்பா அம்மா பேச்சை கேட்டிருந்தால் இந்த நிலை வருமா ..


Mani . V
ஜூன் 16, 2025 04:03

கல்யாணத்துக்குப் பின் காதல், கலவி செய்து தொலைத்தால் இந்தப் பிரச்சினை எல்லாம் வருமா? கல்யாணத்துக்கு முன்னரே கலவியில் ஈடுபட வேண்டியது. அப்புறம் திருமணம் செய்து கொள்ளச் சொன்னவுடன் அவன்கள் இதுகளை காலி செய்து விடுகிறான்கள்.


Kasimani Baskaran
ஜூன் 16, 2025 03:48

பீஸ்ட் வெர்சஸ் பியூட்டி என்பது போல இருக்கிறது.. சற்றும் பொருத்தமில்லாத ஆளை எப்படி மதுஸ்ரீ கண்டுபிடித்தாரோ.