உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை; பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்

நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை; பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிஎஸ்என்எல் 4ஜி சேவையை நாடு முழுவதும் பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்க இருப்பதாக மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி நாளை இரண்டு மிக முக்கிய திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். முதலாவது, பிஎஸ்என்எலின் 4ஜி சேவையாகும். நாடு முழுவதும் உள்ள 98,000 தளங்களில் அறிமுகப்படுத்தப்படும். இந்தியாவின் எந்த பகுதியும் விடுபடாது. எங்களின் 4ஜி டவர்கள் மற்றும் பிடிஎஸ்கள் ஏற்கனவே நாடு முழுவதும் 2.2 கோடி வாடிக்கையாளர்களுக்கு சேவை அளித்து வருகின்றன. இது முழுமையாக மென்பொருள் மூலம் இயக்கப்பட்டு, தடையில்லாமல் 5Gக்கு மேம்படுத்தப்படும். இந்த 4ஜி சேவையுடன், டிஜிட்டல் பாரத் நிதி மூலம் இந்தியாவின் 100 சதவீத 4ஜி செறிவு நெட்வொர்க்கையும் அறிமுகப்படுத்துகிறோம். இதில், 29,000 முதல் 30,000 வரையான கிராமங்கள் 4ஜி செறிவு திட்டப் பணியின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன, இவ்வாறு அவர் கூறினார். இன்று ஒரு வரலாற்று நாள். பிஎஸ்என்எல்லுக்கோ, தொழில்நுட்ப உபகரண உற்பத்தி துறைக்கோ மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் ஒரு வரலாற்று நாள். பிரதமர் மோடி நாளை ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். அது பிரதமர் தலைமையில் உலகத்திற்கும், உலக சமூகத்திற்கும் இந்தியாவின் பங்களிப்பாக இருக்கும்.இது தொலைதொடர்புத் துறைக்கு ஒரு புதிய யுகம். உலகில் தொலைதொடர்பு உபகரணங்களை உற்பத்தி செய்யும் நான்கு பெரும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் நுழைந்துள்ளது. டென்மார்க், ஸ்வீடன், தென் கொரியா, சீனா ஆகிய நான்கு பெரும் நாடுகள் மற்றும் ஐந்து பெரும் நிறுவனங்கள் உள்ளன. தற்போது, இந்தியா உலக வரலாற்றில் தொலைத்தொடர்பு உபகரணங்களை உற்பத்தி செய்யும் ஐந்தாவது நாடாகவும், ஆறாவது நிறுவனமாகவும் உள்ளது.இந்தப் பெரிய மாற்றத்தை பிரதமர் மோடி முன்னெடுத்து, உந்துதல் அளித்து, வழிநடத்தினார். 2020ம் ஆண்டில், 4ஜி உபகரணங்களுக்கான டெண்டர்கள் விடுக்கப்பட்டபோது, வெளிநாட்டு உபகரணங்களை வாங்குவதற்கு பதிலாக, நமது சொந்த 4ஜி உபகரணங்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்வோம் என்று ஒரு துணிச்சலான முடிவை அவர் எடுத்தார். அதன்படி, வரலாற்று ரீதியாக வெளிநாட்டு தொழில்நுட்பத்தை வாங்குபவராக இருந்த நம் நாடு, வெறும் 22 மாதங்களில், சொந்த உள்நாட்டு 4ஜி உபகரணங்களை உருவாக்கும் நாடாக மாறி சாதனை படைத்துள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

venu
செப் 27, 2025 12:12

பிஎஸ்என்எல் இன்னும் ஓடிட்டு இருக்கா எவ்வளவோ செய்யும் இந்த மத்திய அரசு இந்த மக்கள் கேட்கும் விதமாக செயல்பட வேண்டுமா எவ்வளவோ கட்டிடங்கள் bsnl பேரை தாங்கிக் கொண்டு இன்னும் நின்று கொண்டிருக்கின்றன உபயோகம் ஒன்றும் இல்லை அரசாங்கம் இதை கவனிக்க வேண்டும் உடனடியாக மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் இல்லை என்றால் தனியார் நிறுவனங்கள் கொள்ளையடித்து கொண்டே இருக்கும்


Varadarajan Nagarajan
செப் 26, 2025 22:39

அதிகமான சொந்தமான உள்கட்டமைப்புகளை கொண்டது நமது BSNL நிறுவனம். நாட்டின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் சேவையளித்தது. ஆனால் கடந்தகாலத்தில் உயர்ந்த அலைக்கற்றையை தனியாருக்கு ஒடுக்குவதற்காக ஊழல் செய்து விதிமுறைகளையே மாற்றி அலைக்கற்றையை BSNL க்கு கிடைக்காமல் செய்ததும், போராட்டம், சம்பள உயர்வு, மற்றும் இதர சலுகைகளுக்காக மக்கள் சேவையைப்பற்றி கவலையில்லாமல் எப்பொழுதும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தொழிலாளர் சங்கங்களாலும் BSNL தனது வாடிக்கையாளர்களை இழந்து ICU சென்றது. ஊழியர்கள் விருப்ப ஓய்வு போன்ற கடுமையான சிகிச்சையால் உயிர் ஓடிக்கொண்டுள்ளது. அதற்க்கு மிகுந்த சத்துள்ள 4G போன்ற சத்துக்களை அளித்தால்தான் மீண்டும் வாடிக்கையாளர்களை பெற்று எழுந்து நடக்கமுடியும். ஊழியர்களிடமும் வாடிக்கையாளர்களுக்கு துரித சேவையளிப்பதைப்பற்றி மாற்றம் தேவை. அரசு நிறுவனம்தான் மாத சம்பளம் வந்தால்சரி என்ற மனப்பான்மையில் மாற்றம் வேண்டும். நிறுவனம் லாபம் ஈட்டினால்தான் சம்பளம் மற்றும் சலுகைக்குகளை பெறமுடியும்.


Venugopal S
செப் 26, 2025 21:38

இன்னும் ஒரு பத்து வருடங்கள் கழித்து பி எஸ் என் எல் லுக்கு 5 ஜி கொடுத்து விடுவார்கள்!


sankaranarayanan
செப் 26, 2025 20:55

பிஎஸ்என்எல் 4ஜி சேவை நாட்டில் எங்கே இருக்கிறது என்றே theriyavillai


தாமரை மலர்கிறது
செப் 26, 2025 19:49

பி எஸ் என் எல் ஐ இழுத்து மூடுவது அரசுக்கு நல்லது. இதற்கு 4 ஜி கொடுப்பது, கடைசி நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பவருக்கு தண்ணீர் ஊற்றுவது போன்றது.


RAMESH KUMAR R V
செப் 26, 2025 17:14

தொடரட்டும் வெற்றிகள் உலகம் வியக்கட்டும்


Rajarajan
செப் 26, 2025 16:17

இங்க சிக்னல் இல்ல. இதுக்கு மேல, மரத்து மேல ஏற முடியாது, ஓவர்.


Anand
செப் 26, 2025 14:22

140 கோடி மக்கள் உள்ள நாட்டில் , 2 கோடி பேர்கள் மட்டுமே BSNL வைத்து இருக்கிறார்கள் ,முக்கால் சதவிகிதம் இவர்கள் அழகு நல்லவே தெரியுது .


ramesh
செப் 26, 2025 21:17

அம்பானிக்காக ஒழிக்க பட்டது bsnl


A.Gomathinayagam
செப் 26, 2025 14:11

தொன்னூற்று எட்டாயிரம் தளங்கள் அரசு நிறுவனம் ஒன்றாலே தான் ஏற்படுத்த முடியும் ,தனியார் அதை அனுபவிப்பார்கள்


Raja k
செப் 26, 2025 14:03

அம்பானி போன்ற தனியாருக்கு 5ஜி, 6ஜி னு தாரை வார்த்துவிட்டு, இப்போதான் 4ஜி கொடுக்கிறாராம், முக்கிய பகுதிகளிலேயே சிக்னல் இல்லை , இதுல 4ஜியாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை