உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 2025-26ம் நிதியாண்டு மத்திய பட்ஜெட் தாக்கல்; முக்கிய அம்சங்கள்

2025-26ம் நிதியாண்டு மத்திய பட்ஜெட் தாக்கல்; முக்கிய அம்சங்கள்

புதுடில்லி: பார்லிமென்டில் 2025-26ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lrfwnxlw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனாதிபதி உரையுடன் நேற்று(ஜன.31) துவங்கியது. அப்போது லோக்சபா மற்றும் ராஜ்யசபா கூட்டு கூட்டத்தில், ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். இந்நிலையில், இன்று (பிப்.,01) முற்பகல்11 மணிக்கு பார்லிமென்டில் 2025-26ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.மத்தியில் பா.ஜ., தலைமையிலான அரசின் ஆட்சியில் 3வது முறையாக தாக்கல் செய்யப்பட்ட முழு பட்ஜெட் இதுவாகும். தொடர்ந்து 8வது முறையாக பார்லிமென்டில் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையை வாசிக்க விடாமல் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.பட்ஜெட் உரையில் அவர் பேசியதாவது; * இளைஞர் முன்னேற்றம், வேளாண்மை, வறுமை ஒழிப்பு, உணவு உத்தரவாதம் உள்ளிட்ட அம்சங்களை கொண்டு பட்ஜெட்டை தயாரிப்பு, * வரிவிதிப்பு, நகர்ப்புற மேம்பாடு, கனிமவளம், நிதி மேலாண்மை,மின்சாரம், ஒழுங்குமுறை ஆகிய 6 துறைகளில் சீரமைக்கும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது.* பாரதத்தை வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்கும் பணியை செய்து வருகிறோம் * உலகின் பெரிய பொருளாதரங்களிலேயே வளர்ச்சியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. * நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் * உலகின் வேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. * நாட்டின் வளர்ச்சிக்கு விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது.* பருப்பு உற்பத்தில் ஆறு ஆண்டுகளில் தன்னிறைவு அடைய இலக்கு. * புதிய வேளாண் திட்டத்தின் மூலம் 1.7 கோடி விவசாயிகள் பயன்பெற உள்ளனர். * தாமரை விதைகளுக்காக புதிய வாரியம் பீஹாரில் அமைக்கப்படும். * விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்படும். நாட்டின் முதுகெலும்பாக விவசாயிகள் திகழ்கின்றனர். * அசாமில் யூரியா உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்படும். * கிசான் கிரெடிட் கார்டுகளுக்கான உச்சவரம்பு 3 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்படுகிறது. * உலகின் உற்பத்தி மையமாக இந்தியா திகழ சிறு,குறு நிறுவனங்கள் தான் காரணம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 49 )

தாமரை மலர்கிறது
பிப் 03, 2025 02:45

பீகார் எம்பிக்கள் மத்திய அரசுக்கு ஆதரவு கொடுக்கிறார்கள். அதனால் பட்ஜெட் அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. தமிழக எம்பிக்கள் திட்டுகிறார்கள். அதனால் ஒன்றும் கிடையாது. பிஜேபி எம்பிகளை தேர்ந்தெடுத்தால் தமிழகத்திற்கு நிதி கிடைக்கும். இல்லையெனில் ஒரு பைசா கிடையாது. ஓரமா போய் உட்கார்ந்து குமுறி குமுறி அழுவுங்கள்.


இறைவி
பிப் 02, 2025 20:31

உங்களுக்கு கடந்த பத்து வருடத்தில் மோடி அரசு என்ன என்ன செய்தது என்று பட்டியல் போட்டு சொல்ல முடியும். ஆனாலும் நீங்கள் பொய் பரப்பினால்தான் உங்களுக்கு சன்மானம். தமிழ் நாடே செலவு செய்து கொள்கிறோம் என்ற பல நகர மெட்ரோக்களுக்கு, நீங்கள் திடீர் பல்டி அடித்தபின் மத்திய அரசுதான் பல்லாயிரம் கோடி தர ஒப்புக்கொண்டுள்ளது. இது எந்த வட மாநிலத்திற்கு போகிறது. நீங்கள் விடாமல் சொல்லும் பொய்கள் ஒரு நாள் உங்களையே வீழ்த்தும்.


K.n. Dhasarathan
பிப் 02, 2025 13:59

அம்மா நிதி அமைச்சரே தவறாக பீகார் பட்ஜெட் வாசித்தீர்களா ? அப்படியே அல்லி அல்லி கொடுக்கிறீர்கள் , இங்கே புயல் , வெள்ளம், மழை பாதிப்பு ஆனால் ஒன்றும் இல்லை, இன்னும் கேட்டால் போன பட்ஜெட்டுக்கு கணக்கு சொல்லுங்கள் என்று கேட்பீர்கள், உங்கள் உடைந்த பதவி நாற்காலி, அதை ஓட்ட வைக்க பசை கொடுத்த பிஹாருக்கு நன்றாக நன்றி சொன்னீர்கள், ஆனால் தனி நபர் வரி சலுகை என்று தென் தடவி எல்லோருக்கும் மொட்டை போட்டு விட்டீர்கள். ஆனால் தமிழ்நாட்டிற்கு உங்களை போல துரோகம் செய்தவர்கள் யாரும் இருக்க முடியாது, பதவி ஆசை எல்லோருக்கும் உண்டுதான் ஆனால் அதற்காக தாயை தெருவில் விடுவார்களா ?தமிழ் நாட்டில் மட்டுமல்ல, தென்னிந்தியாவில் எங்கு நீங்கள் தேர்தலில் நின்றாலும் டெபாசிட் காலி செய்வார்கள்.


ஆரூர் ரங்
பிப் 02, 2025 18:17

அவர் கர்நாடகா MP. புகுந்த வீடு தெலங்கானா. தமிழ்நாட்டில் ஆளுங்கட்சி தமிழராகவே ஏற்க மறுக்கிறது. பின் அவரைத் திட்ட நீங்க யார்?


Arunkumar,Ramnad
பிப் 02, 2025 20:02

அறிவாலய அடிமையே அது எப்படி எல்லாரும் ஒண்ணு சொன்ன மாதிரி ஒரே மாதிரி ஒப்பாரி வைக்கிறீங்க?


Dharmavaan
பிப் 02, 2025 12:37

அரசியல்வாதிகள் எம்.பி. எம்.எல்.ஏ சலுகைகளை சட்டப்படி நிறுத்துவது எப்படி என்று வல்லுநர்கள் சொல்ல வேண்டும்


vbs manian
பிப் 02, 2025 09:36

கடைநிலை ஊழியர் கூட இன்று பன்னிரெண்டாயிரம் வாங்குகிறார். அதற்குமேல் பெறுபவருக்கு பெரிதாக ஒன்றும் இல்லை. பணவீக்கம் சாப்பிட்டு விடுகிறது. சீனியர்களுக்கு எதுவும் இல்லை. அனாவசிய செலவுகளை குறைக்க முயற்சி இல்லை. கோடீஸ்வர பார்லிமென்ட் அசெம்பிலி உறுப்பினர் வாழ்நாள் ஒய்வு ஊதியம். மேலும் பல சலுகைகள். இவர்கள் என்ன செயகிறார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். உப்பு சப்பில்லாத சட்னி.


VENKATASUBRAMANIAN
பிப் 02, 2025 08:09

இங்கே பட்ஜெட் எப்படி போட்டார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். டாஸ்மாக் வருமானம் உயரவேண்டும். எந்த திட்டமும் இல்லை. இதுதான் திராவிட மாடல்.


Svs Yaadum oore
பிப் 02, 2025 07:12

இந்த பட்ஜெட்டானது, பீஹாரில் ஓட்டுப்போட தகுதியான 7.64 கோடி மக்களால் வரவேற்கப்படுமாம்.. ஒன்றிய அரசு பட்ஜெட்டில் சரியாக நிதி கொடுக்கவில்லை என்று விடியல் புகார் ..ஈரோட்டில் வளைத்து வளைத்து வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறது ....ரேஷன் கார்டு வைத்து வாக்காளர்களை அடையாளம் கண்டு டோக்கன் கொடுகிறார்களாம். இந்த லட்சணத்தில் தமிழ்நாட்டில் ஆட்சி நடக்குது ...இதில் அரசு தமிழ் நாட்டுக்கு நிதி கொடுக்கவில்லையாம். ஈரோடு கிழக்கில் கொடுக்கும் பணம் எல்லாம் எவன் அப்பன் வீடு பணம்?? ...


Dharmavaan
பிப் 02, 2025 12:39

தேர்தல் அதிகாரி இதை எப்படி அனுமதிக்கிறார்.


A P
பிப் 01, 2025 20:47

இங்கு கருத்து எழுதியவர் தனது சொந்தக் கடன்சுமை அதிகரித்துவிட்டது என்கிறாரா அல்லது தமிழ்நாட்டின் கடன் சுமை அதிகரித்துவிட்டது என்கிறாரா என்பது தெரியவில்லை. பட்ஜெட்டில் சொல்லப் பட்டிருப்பதை ஏதாவது ஒரு நல்ல ஆடிட்டரைக் கலந்தாலோசித்து இவர் போன்றோர் தெளிவடைய வேண்டும். 200 ரூபாய்க்கு மேல் கூவுகிறார் போலும்.


xyzabc
பிப் 02, 2025 03:13

சரியாக சொன்னீர்கள். தென்னரசுவின் பட்ஜெட் ஒரு கேவலமான பட்ஜெட் என்பதை நினைவு கூர்வோம்.


Mediagoons
பிப் 01, 2025 18:19

பட்ஜெட்டில் வரலாறு காணாத கடனை அடைக்க எந்த வழிவகைகளும் இல்லை. கடன் சுமை மேலும் மேலும் அதிகரிக்க செய்யும் பட்ஜெட்


xyzabc
பிப் 02, 2025 03:16

கடன் சுமை தமிழக அரசு தரும் இலவசங்களால்


Ray
பிப் 02, 2025 16:36

பேரிலா பேதையே மத்திய நிதியிலா தமிழ்நாட்டு இலவசங்கள் கொடுக்கறான்? திருநெல்வேலியில் வெள்ளம் வந்தாலும் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டாலும் பைசா தராமலே அகண்ட பாரதத்தின் நாற்பது லக்ஷம் கோடிக்குமேல் உள்ள கடன் சுமையைப்பத்தி சொன்னா இங்கேகொடுக்கற இலவசத்தால போச்சுங்கறான்


S.Martin Manoj
பிப் 01, 2025 17:29

பீஹார் பட்ஜெட் ஓகே மத்திய பட்ஜெட் எப்பொழுது?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை