வாசகர்கள் கருத்துகள் ( 37 )
கன்னட மக்களுக்கு படம் வராவிட்டால் மக்கள் தப்பிப்பர் .கன்னட மக்களை காப்பற்ற இந்த கமலஹாசன் மன்னிப்பு கேட்கமாட்டான்
இந்த படம் தக்க வைத்துக்கொள்ள லைஃபே கிடையாது இதை பார்த்ததால் எதையும் தக்க வைக்கவே முடியாது ஆதாலால் .......... உங்களுடைய அபிப்பிராயத்திற்கு விட்டுவிட்டேன்
யாகாவாராயினும் நாகாக்க -
இதுக்கு அப்புறம் பொண்ணு சமஞ்சா என்ன இல்லன்ன என்னா ? thug life டெத் ஆயி ஸ்பிரிட் ஆயிடுச்சி
கமல் அரசியலில் ஆழம் தெரியாம காலை விட்டவராக ஒரு அரசியல் காமெடியனாக இருந்தாலும், இந்திய சினிமாவின் ஐகான் கமல்ஹாசன். இந்திய திரை உலகிற்கு பல புதிய தொழில்நுட்பங்களை புகுத்தியவர். கமல் ஒரு பச்சை தமிழன், அப்படி அவர் என்ன சொன்னார், தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம் என்றார். உடனே அரசியல் ரீதியாக திட்டமிட்டு உசுப்பிவிடப்பட்ட கூலி போராட்டக்காரர்களை வைத்து அவருக்கு எதிராக போராட்டம் நடத்தி, கொடும்பாவி கொளுத்தி, அவர் படத்தை செருப்பால் அடித்து அவர் பட போஸ்டரை கிழித்து அவர் தயாரித்த படத்தை கர்நாடக மாநிலத்தில் ரிலீஸ் செய்ய விடாமல் அவர் பிழைப்பை கெடுத்து அவருக்கு அதாவது ஒரு தொழில் அதிபருக்கு பெரிய நஷ்டத்தை கொடுத்து இருக்கிறார்கள். கன்னட மக்கள் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ளவேண்டும். இதே தமிழ்நாட்டில் ஈ.வே.ராமசாமி என்ற ஒரு கன்னடியன் ஒரு நூற்றாண்டுகாலமாக கொண்டாடப்பட்டு வருகிறார். அவர் என்னவெல்லாம் சொல்லி இருக்கிறார். தமிழ் காட்டுமிராண்டி பாஷை, தமிழன் காட்டுமிராண்டி, திருக்குறள் தங்க தட்டில் வைத்த அசிங்கம். தமிழ் நீச மொழி. தொல்காப்பியன் மாபெரும் துரோகி, தமிழ்ப் புலவன் என்றால் புளுகன், சொந்தப் புத்தி இல்லாதவன், என்று பினாத்திய கன்னடியனை தமிழன் கொண்டாடவில்லையா. அதற்காக கமலிடம் கர்நாடகா மன்னிப்பெல்லாம் கேட்கவேண்டியதில்லை. அவரது தயாரிப்பான படத்தை தடை செய்ததற்கு, அதனால் ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு, அவருக்கு ஏற்படுத்திய நஷ்டத்துக்கு, கர்நாடகா அரசுக்கு வரவேண்டிய வரியை தடுத்த குற்றத்திற்காக கமல்ஹாசனுக்கு நூறு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும். இதை தண்டிக்காமல் விட்டால் போராட்டம் என்கிற பெயரில் பொறுக்கிப்பயலுவோலாம் ரவுடித்தனத்தில் தொடர்ந்து ஈடுபட ஆரம்பித்துவிடுவார்கள்.
கன்னடனை தமிழின தந்தையாக கொண்டாட எந்த கன்னடரும் வற்புறுத்தவில்லை. சில தமிழர்கள் தூக்கி வைத்து ஆடுவதற்கு கன்னடத்தவர் எப்படி பொருப்பாவர் ? மேலும் இந்த படத்துக்கு கன்னட அரசு திரையிட தடை விதிக்கவில்லை.ஆனால் பாதுக்காப்பு தர முன்வரவில்லை. ஆயிரக்கணக்கான போலீசை குவித்து பாதுகாப்பு தர ஒரு பட ரிலீஸ்க்காக கேட்பது முறையான ஒன்றா என எண்ணிப்பாருங்கள். கமல் இந்த விஷயத்தில் செய்த தவறே நீதிமன்றம் சென்றதுதான். அவர் கூட்டணி கட்சி ஆட்சி நடத்தும் கர்நாடகாவில் அந்த அரசு மூலமாகவே அந்த போராட்ட அமைப்புகளோடு பேச்சு வார்த்தை மூலம் தீர்த்திருக்கலாம். ஆனால் கமல் எதிர்பார்த்தது இந்த மொழிபிரிச்சனையால் தமிழகத்தில் வசூல் மழை பெய்யும் என் தப்புகணக்கு போட்டதே. மேலும் கர்நாடக அரசுக்கு ஏற்பட்ட வரி இழப்புக்கு எதற்கு கர்நாடக அரசு கமலுக்கு இழப்பீடு தர சொல்கிறீர்கள் என புரியவில்லை.
நீங்கள் நினைப்பது போல் கமல் மட்டும் தயாரிப்பாளர் அல்ல. உதயநிதியும் இந்த படத்தின் தயாரிப்பாளரே. கமல் மற்றும் உதய் நினைத்திருந்தாலே பப்பு வரை தீர்வுக்காக பேச முடியும். அவர்கள் எதிர்பார்த்தது தீர்வல்ல, பிரச்சனையை.
அடுத்து என்ன எதிர்பார்க்கலாம்? திரை அரங்குகள் படத்தை வெளியிட மறுக்கின்றன என வினயோகிஸ்தர் உச்ச நீதிமன்றம் போவார். திரையரங்குகள் படத்தை வெளியிட வேண்டும் என கோர்ட் சொல்லும். பார்க்க யாரும் வரவில்லை என திரையரங்க முதலாளிகள் கோர்ட் போவார்கள். மக்கள் படத்தை பார்க்கவேண்டும் என தீர்ப்பு சொல்லும். மக்கள் எங்களிடம் பணம் இல்லை என கோர்ட் போனால் மக்களுக்கு படத்தை ஓசியாக ஒட்டி காட்ட வேண்டும் அந்த இழப்பீட்டை கர்நாடக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என சொன்னாலும் சொல்லலாம்
இந்த ஆளு பேசுவது யாருக்குமே புரியாதே. நீதிபதிகளுக்கு எப்படி புரிந்தது.
In the eyes of SC, creating tension between two states over the parentage of two languages which may lead to violent pros is a small thing and does not require any decision, knowing fulwell that Kamala Hasan is not a linguistic research scholar. He can be let off. But poor Nupur Sharma for quoting verbatim verses from Quaran and Hadiths in support of her defence in a TV debate drew sharp reaction and comments from SC judges. In that case, Nupur only asked for merging all the cases filed against by Islamic fundamentalists be clubbed and transferred to a court in Delhi. Instead of addressing the petition and the relief sought by the petitioner, the SC virtually branded her as a criminal that she is fanning violence between two communities. I am at a loss about the positions taken by judges in two cases which are very similar in nature.
அனுமதி கொடுத்த நீதிபதியை இந்த படத்தை நாலு தடவை பார்க்க வைக்கணும். விடுமுறை கால கோர்ட் எதுக்கு அவசரமா விசாரிக்கணும் என உயர்நீதிமன்றங்களை கேட்கும் உச்சநீதிமன்றம் இப்போது விடுமுறையில் இதை ஒரு அவசர வழக்காக ஏன் விசாரிக்கிறது என தெரியவில்லை. படம் வெளிவரத்திற்கு முன்னாடி இதை உச்ச நீதி மன்றம் அவசர வழக்காக விசாரித்திருந்தால் சரி. படம் வந்து 2 வாரம் ஆகி விட்டது. இப்போது எதுக்கு இதை அவசரமாக விசாரிக்க வேண்டும்?
சரி இதே உச்ச நீதிமன்றத்தில் பப்பு மன்னிப்பு கேட்டு தண்டனை இல் இருந்து தப்பலாம் தப்பே இல்லை. ரஃபேல் வழக்கில் என்ன நடந்தது. நுபுர் ஷர்மா வழக்கில் என்ன நடந்தது. இப்போது bothi மரம் எதுவும் கிடைத்தது விட்டதா