உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.90 லட்சம் பேசி ரூ.80 லட்சம் சம்பளம்; ஐ.டி., நிறுவன அதிகாரிகள் மீது வழக்கு

ரூ.90 லட்சம் பேசி ரூ.80 லட்சம் சம்பளம்; ஐ.டி., நிறுவன அதிகாரிகள் மீது வழக்கு

பெங்களூரு : பெங்களூரில், பேசிய சம்பளத்தை விட குறைவாக சம்பளம் வழங்கி மோசடி செய்த, தனியார் ஐ.டி., நிறுவன அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.கர்நாடக மாநிலம், பெங்களூரு எச்.எஸ்.ஆர்., லே - அவுட்டில், 'பீட்டாபிளக்ஸ்' என்ற பெயரில், ஐ.டி., கன்சல்டிங் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக அனிமேஷ் குமார்; தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக உத்கர்ஷ் சின்ஹா; கணக்கு தணிக்கையாளராக பவன் உள்ளனர்.இந்நிறுவனத்தில், 2023 பிப்ரவரியில், சரவணன் என்பவர் பணிக்கு சேர்ந்தார். செயற்கை நுண்ணறிவு, டெவலப்மென்ட் செயலிகள், தகவல் பாதுகாப்பு ஆகியவற்றில், 15 ஆண்டுகள் பணி அனுபவம் உடையவர் என்பதால், சரவணனுக்கு ஆண்டுக்கு, 90 லட்சம் ரூபாய் சம்பளம் தருவதாக, நிறுவன அதிகாரிகள் கூறி இருந்தனர்.சரவணன் பணிக்கு சேர்ந்த பின், பல நிறுவனங்களுடன் பீட்டாபிளக்ஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கிடைத்தது. இதன் வாயிலாக, 20 கோடி ரூபாய்க்கு வணிக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், தன் சம்பளத்தை, 90 லட்சம் ரூபாயில் இருந்து, 80 லட்சம் ரூபாயாக நிறுவனம் குறைத்தது சரவணனுக்கு தெரியவந்தது. அவர் சம்பள ரசீதை சரிபார்த்த போது, 31 நாட்கள் வேலை செய்து இருந்தாலும், 28 நாட்கள் மட்டுமே வேலை செய்ததாக குறிப்பிட்டு இருந்ததும் தெரிந்தது.அதிர்ச்சி அடைந்த அவர், அனிமேஷ் குமார், உத்கர்ஷ் சின்ஹா, பவனிடம் சென்று கேட்ட போது, இன்னும் அதிகமாக வேலை செய்தால் 90 லட்சம் ரூபாய் சம்பளம்; போனஸ் தருவதாக கூறினர். இதை நம்பி, சரவணனும் கூடுதல் நேரம் வேலை பார்த்துள்ளார்.ஆனாலும், கூறியபடி நிறுவனம் சம்பளம் வழங்கவில்லை. அங்கு வேலை செய்த முன்னாள் ஊழியர்கள் சிலரிடம் சரவணன் விசாரித்த போது, வருமான வரி கட்டுவதை தவிர்க்க ஊழியர்கள் சம்பளத்தை குறைத்து கணக்கு காண்பித்து ஏமாற்றுவது தெரிந்தது.கோபம் அடைந்த சரவணன், அனிமேஷ் குமார், உத்கர்ஷ் சின்ஹா, பவன் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். மூன்று பேர் மீதும், போலீசார் நேற்று முன்தினம் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

S Kumar
ஏப் 21, 2025 21:05

Less number of working days than the school students despite crores of pending cases. If SC can fix timeline for President and Governors to complete the task then why dont forget judges. Salary of ministers, government staff including judiciary are paid from tax paid by the general public. Hence, every body should be made accoun


என்றும் இந்தியன்
ஏப் 21, 2025 16:08

இது சர்வசாதாரணமாக நடந்து கொண்டிருக்கின்றது. மனது ஒப்பவில்லையென்றால் அந்த நிறுவனத்தை விட்டு போய் விடுகின்றனர்.


Padmasridharan
ஏப் 21, 2025 11:28

வெளி வராமல், நிறைய தொழில்களில் இதுதான் நடக்கின்றது


சுந்தரம் விஸ்வநாதன்
ஏப் 21, 2025 09:15

சில நிறுவனங்களில் வரியைக்குறைக்க கணக்கில் வராதபடி வெவ்வேறு அலவன்ஸ் கொடுத்து சம்பளத்தை குறைத்து காட்டும் வழக்கம் உண்டு.


நிக்கோல்தாம்சன்
ஏப் 21, 2025 06:39

இன்னமும் விசாரிக்காமல் அவர்கள் மூவரையும் கைது செய்யும் நடவடிக்கையை எடுங்க


தாமரை மலர்கிறது
ஏப் 21, 2025 05:11

உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் கூட வேலைக்கு ஆள் எடுக்கும் இந்திய நிர்வாகிகள் ஐடி துறையில் காண்ட்ராக்ட் அடிப்படையில் சம்பளம் பேசும்போதே, உனக்கு வரும் சம்பளத்தில் இருபது சதவீதம் என்னோடது என்று சொல்லி தான் வேலைக்கே ஆள் எடுக்கிறார்கள். அந்த இருபது சதவீதத்தை கேஷாக கொடுக்க வேண்டும் என்று நிர்பந்திக்கிறார்கள். இதெல்லாம் நமது அரசியல்வாதிகளிடம் இந்த கமிஷனை இந்திய ஐடி நிர்வாகிகள் கற்றுக்கொண்டுவிட்டார்கள்.


chennai sivakumar
ஏப் 21, 2025 08:25

உள்ளே புகுந்து பார்த்தால் ஒரே ஊழல் மயம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை