உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கெஜ்ரிவாலை 3 நாள் காவலில் விசாரிக்க சி.பி.ஐ.,க்கு அனுமதி

கெஜ்ரிவாலை 3 நாள் காவலில் விசாரிக்க சி.பி.ஐ.,க்கு அனுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : மதுபான கொள்கை ஊழல் வழக்கில் நேற்று சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்ட டில்லி முதல்வர் கெஜ்ரிவால் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 3 நாள் சி.பி.ஐ.,காவலில் விசாரிக்க கோர்ட் அனுமதி வழங்கியது.மதுபான கொள்கை ஊழல் தொடர்பான பண மோசடி வழக்கில், டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த மார்ச் 21ல் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமின் உத்தரவுக்கு எதிராக டில்லி உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில் மதுபான கொள்கை வழக்கினை விசாரித்து வரும் மற்றொரு அமைப்பான சி.பி.ஐ., நேற்று கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தியது. தொடர்ந்து நேற்று இரவு அவரை திகார் சிறையிலேயே வைத்து கைது செய்தது. இன்று ரோஸ் அவென்யூ கோர்ட்டில் கெஜ்ரிவால் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை சி.பி.ஐ., காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனு செய்தது. மனுவை விசாரித்த நீதிபதி 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

SP
ஜூன் 26, 2024 21:27

தேசத்திற்கு எதிரானவர்கள் மீது இனியும் மென்மையான போக்கை கடைபிடித்தால், மத்திய அரசின் மீது நம்பகத் தன்மை குறைய தான் செய்யும்


K.Rajasekaran
ஜூன் 26, 2024 21:22

உங்க கூட்டணி கட்சியில யாருமே அவசர நிலைன்னு சொல்லவே இல்ல


Raghavan
ஜூன் 26, 2024 21:06

மயிலே மயிலே என்றல் இறகு போடாது. இவர் கடப்பாரையை முழுங்கிவிட்டு சுக்கு கஷாயம் கேட்பவர். இவரை எல்லாம் எப்படி பாமர மக்களை விசாரனை செய்வார்களோ அப்படி செய்தால் தான் உண்மை வெளிவரும். இவருக்கு ஏன் அமெரிக்கா உதவி செய்கிறது? உள் நாட்டில் ஏதேனும் பிரச்சனையை உருவாக்கவா என்பதெல்லாம் கண்டுபிடிக்கவேண்டும். இவர் ஒரு மலை முழுங்கி மஹாதேவன். லேசில் உண்மையை வாங்கமுடியாது. வழக்கு ஒரு 20 வருடங்கள் இழுத்தடிக்கும் அதற்குள் ஆட்சி மாறி ஒன்றும் இல்லாமல் போய்விடும். எல்லாம் நம் தலை எழுத்து


M Ramachandran
ஜூன் 26, 2024 20:21

ஆயாராம் கயாராம்


M Ramachandran
ஜூன் 26, 2024 20:20

கஜினி முஹமது தான் நினைவிற்கு வருகிறார்


M Ramachandran
ஜூன் 26, 2024 20:06

இவன் ஒரு கல்லுளி மாங்கண். நீஙகள் ஏன்னா கேட்டாலும் பேப்பே பேப்பே தான். பார்ப்போம் யார் திறமைசாலியென்று. முன்பு போல் தற்போது உங்களிடம் கடுமை காட்டும்.


Pandi Muni
ஜூன் 26, 2024 19:47

திருட்டு முழி முழிக்கிறான்


Lion Drsekar
ஜூன் 26, 2024 19:24

ஆண்டவா இதுவும் ஒரு சீரியல் தான் என்ற உணர்வே,யாருக்கும் இல்லாமல் போனது வருத்தம். . . இதற்கு முன்னால் எத்தனை , இன்றைக்கு அவர்கள் புதிதாகக்கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் கூச்சல் போட்டு பக்குவம் இல்லாமல், நாகரீகம் இல்லாமல் , தன்னிலை மறந்து ,தகுதி மறந்து , குறுநில மன்னர்களின் பெயர்களைக்கூறி , அவர்களது கொள்கைகளைக்கூறி பதவி ஏற்றுக்கொண்டது ஜனநாயகத்தின் தலைகுனிவு . பள்ளியில் படிக்கும் மாணவர்கள் , கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இப்படி செய்தால் எப்படி இருக்கும் . எதற்காக இந்த பதிவு , இவர்கள் அனைவருமே இதேபோன்று விசாரிக்கப்பட்டவர்கள்தான் ஆனால் இன்று அவர்கள் புனிதர்களாகிவிட்டனர் . மீண்டும் மக்கள் வரிப்பணத்தில் அதே சம்பளம், பாதுகாப்பு , ஆகவே இவைகள் எல்லாம் செய்திகள். பாமர மக்கள்மீது எடுக்கப்படும் நடவடிக்கை போல் எடுத்தால் பாராட்டலாம் . வந்தே மாதரம்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை