உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது முதல்கட்டத்தில் 33 கேள்விகள்; என்னென்ன தெரியுமா?

மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது முதல்கட்டத்தில் 33 கேள்விகள்; என்னென்ன தெரியுமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி:மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது மக்களிடம் கேட்க வேண்டிய 33 கேள்விகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஓர் சிறப்பு அலசல்!அரசின் நலத்திட்ட உதவிகள், பொது மக்களுக்கு முறையாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில், 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை, நாடு முழுதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடக்கும். அந்த வகையில், நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, 2027ல் இருகட்டங்களாக நடக்கும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. அதாவது 2027ம் ஆண்டு பிப்ரவரியில் மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடக்க உள்ளது. இதற்காக வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் செப்டம்பர் வரை வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் நடக்க உள்ளது. 33 கேள்விகள் இந்த கணகெடுப்புப் பணியின்போது கேட்பதற்காக பட்டியலிடப்பட்டுள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:1. கட்டட எண் (நகராட்சி அல்லது உள்ளூர் அதிகாரசபை அல்லது மக்கள் தொகை கணக்கெடுப்பு எண்).2.வீட்டு எண் என்ன?3. வீட்டின் தரையின் நிலைமை?4. வீட்டின் சுவரின் நிலைமை?5. வீட்டு கூரையின் நிலவரம்?6. வீடு தற்போது பயன்பாட்டில் உள்ளதா?7.. வீட்டில் வசிக்கும் மொத்த நபர்களின் எண்ணிக்கை என்ன?8. குடும்ப தலைவரின் பெயர்.9. குடும்ப தலைவரின் பாலினம்.10. குடும்பத் தலைவர் பட்டியல் சாதி/பட்டியல் பழங்குடி/பிற இனத்தைச் சேர்ந்தவரா?11. வீட்டில் வசிக்கும் திருமணமான தம்பதிகளின் எண்ணிக்கை.12. குடிநீரின் முக்கிய ஆதாரம்?13. கழிப்பறை உள்ளதா?14. கழிவு நீர் வெளியேற்றம் எங்கே?15. சமையலறை மற்றும் எல்ஜிபி காஸ் இணைப்பு உள்ளதா?16. சமையலுக்குப் பயன்படுத்தப்படும் முக்கிய எரிபொருள் என்ன?17. ரேடியோ உள்ளதா?18. தொலைக்காட்சி உள்ளதா?19. மடிக்கணினி, கணினி உள்ளதா?20. மொபைல் எண் என்ன? ஸ்மார்ட் போன் உள்ளதா?21. சைக்கிள், பைக் உள்ளதா?22. கார், ஜீப், வேன் உள்ளதா?23. வீட்டில் உட்கொள்ளப்படும் முக்கிய தானியம் என்ன? உள்ளிட்ட மொத்த 33 கேள்விகள் கேட்கப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

சந்திரசேகர்
ஜன 23, 2026 15:35

இந்த கேள்விகளின் நோக்கம் அடுத்து வரும் ஆண்டுகளில் எல்லோரும் மாடி வீட்டில் குடியிருந்தால் ரேஷன் மானியத்தில் இருந்து மற்றும் அனைத்து விதமான சலுகைகள் இருந்தும் நீக்கப்படுவார்கள். இலவசம் எதுவும் கிடைக்காது. ஆனால் தாழ்த்தப்பட்டோர் எந்த வீட்டில் குடியிருந்தாலும் எப்படிப்பட்ட வளமான வாழ்க்கை வாழ்ந்தாலும் சலுகைகள் எப்போதும் உண்டு


பெரிய குத்தூசி
ஜன 23, 2026 13:14

முதலில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்துக்கு ஆதரவாக ஜவார்களால் நேரு கொண்டுவந்த மத சார்பற்ற என்ற வார்த்தையை இந்திய அரசியல் அமைப்பிலிருந்து நீக்கி இந்தியாவை இந்து மதம் சார்ந்த நாடாக சட்டபூர்வமாக மாற்ற்றுங்கள். பின்னர் நாட்டின் சிறுபான்மையருக்கு உள்ள அணைத்து சலுகையையும் ரத்து செய்து சாதாரண இந்தியருக்கான வாக்கு அளிக்கும் உரிமையை தவிர மற்ற முழு உரிமையை சிறுபான்மையினருக்கு அளிக்க வேண்டும். பின்னர் முக்கியமாக 15 வருடத்திற்கு ஒரு ஸ்டாண்டர்ட் அரசியல் அமைப்பு, நிர்வாக அமைப்பு என மாறும் வரை சிறுபான்மையருக்கு வாக்களிக்கும் தகுதியை தற்காலிகமாக நிறுத்தி வைத்து இந்து மக்களை பாரத பூமியின் ஆதி பிள்ளைகளாக போற்றி இந்துமக்களுக்கு வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் அரசியல் அமைப்பு மாற்றி அமைக்கப்பட வேண்டும். தேச துரோக அரசியல் கட்சிகளை ஒழித்து மக்களின் மனதை, சிந்தனையை அரசு நல திட்டங்கள் மூலம் மாற்றி சமூக மாற்றத்தை உருவாக்கி பின்னர் குறைந்த பட்சம் 15-25 ஆண்டுக்கு பின் சிறுபான்மையினருக்கு வாக்களிக்கும் உரிமையை அளிக்கலாம். ஏனென்றால் தற்போதுள்ள சிறு பான்மையினர் மதம் சார்ந்து வாக்களித்து நாட்டை சீர்குலைப்பதால் கண்டிப்பாக அரசு மேற்கண்டவற்றை பரிசீலிக்க வேண்டும். இது சம்பந்தமாக பாராளுமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சிறப்பு சட்டம் உருவாக்க வேண்டும். முக்கியமாக அமெரிக்கா, ஐநா, மேலைநாட்டு நரித்தன சொம்புகளின் அறிக்கை தடைகளை சமாளிக்க மத்திய அரசுக்கு தெரியவேண்டும், சீனா விடம் இதுபற்றி பிரதமர் மோடி கற்றுக்கொள்ளவேண்டும்.


Barakat Ali
ஜன 23, 2026 12:14

மதம் குறித்த கேள்விகள் இடம்பெற வாய்ப்பில்லை என்று தோன்றுகிறது.. ரேடியோ இருக்கான்னு கேட்க காரணம் மன் கி பாத் ....


GMM
ஜன 23, 2026 12:01

இந்திய மக்கள் தொகை கணக்கில் மக்களை குடிமக்கள் என்று அடையாளப்படுத்த விவரம் இருக்க வேண்டும். பிறப்பிடம், பிறந்த தேதி, பெயர், பெற்றோர், சகோதர சகோதரிகள் மற்றும் வாரிசு சாதி, மத விவரம் அவசியம். கல்வி தகுதி, குல தொழில் திறன் , அரசு, அரசியல் பதவி, கடும் குற்ற பட்டியல் விவரம் சேகரிக்கலாம். புகை, மது, முட்டை, மாமிச உணவு பழக்கம் சேகரிக்கலாம். உணவில் அரிசி, கோதுமை, கம்பு, சோளம், கேப்பை உணவு பழக்கம் சேகரிக்கலாம் . நிரந்தரம் இல்லாத ரேடியோ, டிவி தகவல்கள் எதற்கு? ஓட்டு வாங்க சலுகைகள் நீடிக்க நிலையற்ற விவரங்கள் இணைப்பு. மத்திய, மாநிலமிடம் இருந்து சலுகை பெறும் நபர் தேர்தலில் வாக்களிக்க அனுமதி கூடாது. அத்தியாவசிய சலுகையை உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி உதவி செய்து கொடுக்க வேண்டும். கட்சிகள் சமூக நலம் என்று கொள்ளை அடித்து போதும்.


Srinivasan Krishnamoorthi
ஜன 23, 2026 11:38

கேள்விகள் அளவு கம்மியாக உள்ளது


ஆரூர் ரங்
ஜன 23, 2026 10:43

ரேடியோ உள்ளதா??? ட்ரான்சிஸ்டர் உள்ளதா ?.ரெக்கார்டு அல்லது கேசட் பிளேயர் உள்ளதா ?. ஆண்டனா வைத்த கருப்பு வெள்ளை டிவி உள்ளதா?. பெட்ரோமாக்ஸ் லைட் அல்லது சிம்னி விளக்கு உள்ளதா? கடைசியா ஒரு கேள்வி. வீட்டில் சிக்கிமுக்கிக் கல் உள்ளதா? நல்லா கேட்டாங்க போ .


உண்மை கசக்கும்
ஜன 23, 2026 11:40

எத்தனையோ கிராம மக்கள் இன்றும் வானொலி பயன் படுத்துகிறார்கள்


Keshavan.J
ஜன 23, 2026 11:50

எனக்கும் சில கேள்விகள் அபத்தமாதான் தோணுது .இருந்தாலும் நாம் ஏன் இந்த கேள்விகளை கேட்கிறார்கள் என்று யோசிக்க வேண்டும். சமூக நலத் திட்டங்களுக்கு இந்தக் கேள்விகள் முக்கியமானவையாக இருக்கலாம் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள மக்களின் குறைபாடுகளை இந்த சென்செக்ஸ் மூலமாக அடையாளம் காண முடியும். ஏழை மக்களுக்கு மானியம் வழங்க இது மத்திய அரசுக்கு உதவியாக கூட இருக்கலாம். பொறுத்திருந்து பார்ப்போம்


Balasubramanian
ஜன 23, 2026 10:06

தனி ஒருவனுக்கு உணவில்லை என்றால் என்ன செய்ய போகிறீர்கள் அவன் ஜாதி மதம் தெரிந்து?


Amar Akbar Antony
ஜன 23, 2026 11:19

தனி ஒருவனுக்கு உணவு இல்லை? ஏன் இல்லை ரேஷன் கடையில் இலவசமாக அரிசி வழங்குகிறார்கள். கோதுமையும் வழங்குகிறார்கள். அந்த தனி ஒருவன் வேலைக்கு செல்லவேண்டும். இல்லையேல் இந்துக்கோவில்களில் உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. ஆக இந்த வசனம் எடுபடாது.


Keshavan.J
ஜன 23, 2026 09:15

இதற்காக எதிர்க்கட்சிகள் என்ன நாடகம் நடத்தப் போகின்றன என்று எனக்குத் தெரியவில்லை. இது தொடங்கியதும், அனைத்து முஸ்லிம்களும் பாகிஸ்தானுக்கு அனுப்பப்படுவார்கள் என்று திமுக கூறும். ஆனால், வருத்தகரமாக, ஒருத்தன் கூட பாகிஸ்தானுக்குப் போகமாட்டான்.


சமீபத்திய செய்தி