உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருப்பதி- காட்பாடி இடையே 104 கி.மீ., தூரம் இரட்டை ரயில் பாதை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

திருப்பதி- காட்பாடி இடையே 104 கி.மீ., தூரம் இரட்டை ரயில் பாதை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடில்லி: திருப்பதி- காட்பாடி இடையே 104 கி.மீ., தூரத்துக்கு இரட்டை ரயில் பாதை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: திருப்பதி - பகாலா - காட்பாடி இடையிலான சுமார் 104 கி.மீ., தொலைவுள்ள ஒற்றை ரயில் பாதையை, இரட்டை ரயில் பாதையாக மாற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=la7lqs5f&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ரூ.1,332 கோடி செலவில் ஆந்திரா மற்றும் தமிழகம் பயன்பெறும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் 400 கிராமங்கள், 14 லட்சம் மக்கள் பயன்பெற இருக்கிறார்கள். திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கான இணைப்பு மேம்படுவதோடு, ஆண்டுக்கு 4 மில்லியன் டன் கூடுதல் சரக்கு போக்குவரத்து நடக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பரந்தூர் விமான நிலையம்

அதேபோல், பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு கொள்கை ரீதியில் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு வெளியிட்டுள்ள அறிக்கை:பரந்தூர் விமான நிலையத்திற்கு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் கொள்கை ரீதியான ஒப்புதலை வழங்கியுள்ளது என்பதை பகிர்ந்து கொள்வதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், நாடு முழுவதும், குறிப்பாக டில்லி, மும்பை மற்றும் சென்னை போன்ற பெருநகரங்களில் இரண்டாவது விமான நிலையங்களை உருவாக்குவதன் மூலம், பயணிகள் தேவைக்கு தீர்வு காண முடியும்.தமிழகத்தின் விமான உள்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு உறுதிபூண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Varuvel Devadas
ஏப் 10, 2025 12:26

Welcome. Nal Valthukal.


Vijay D Ratnam
ஏப் 09, 2025 23:01

ஏற்கெனவே ஒப்புதல் வழங்கிய காரைக்கால் தஞ்சாவூர் இடையே இரட்டை பாதை பணிகள் எந்தளவில் உள்ளது. காரைக்கால் துறைமுக சரக்கு ரயில்கள் எண்ணிக்கை அதிகளவில் இயங்குகிறது.


Rajasekaran Cdm
ஏப் 09, 2025 18:03

தஞ்சாவூ- மயிலாடுதுறை - விழுப்புரம் , இரண்டு வழியாக மாற்ற தமிழக MPகல் கேட்கவில்லையா


தமிழ்வேள்
ஏப் 09, 2025 20:06

தமிழக எம்பி எம்எல்ஏ–க்கள் ஆளுக்கு நாலு ஆம்னி பஸ் வைத்திருப்பதால் தமிழக ரயில் திட்டம் எதையும் கேட்பதோ ஒத்துழைப்போடு கிடையாது.. போதாக்குறைக்கு தமிழக அரசே ரயில் சேவை வேண்டாம் என்று மறைமுகமாக அழுத்தம் தருகிறது...எ.கா..சென்னை வேலூர் கன்டோன்மென்ட் இஎம்யூ ரயில் சேவை, சென்னை சென்ட்ரல் திருவண்ணாமலை ரயில் சேவை...


Rajasekaran Cdm
ஏப் 09, 2025 18:03

தஞ்சாவூ- மயிலாடுதுறை - விழுப்புரம் , இரண்டு வழியாக மாற்ற தமிழக MPகல் கேட்கவில்லையா


Rajasekaran Cdm
ஏப் 09, 2025 18:03

தஞ்சாவூ- மயிலாடுதுறை - விழுப்புரம் , இரண்டு வழியாக மாற்ற தமிழக MPகல் கேட்கவில்லையா


Rajasekaran Cdm
ஏப் 09, 2025 17:58

This should be extended till villupuram. Renigunta-pakala-Katpadi-Villupuram, in this route Andra is covered , but tamil nadu part missing. Hope Andra MPs are intrested in development. TN MPs are not intrested.


Rathnam Mm
ஏப் 09, 2025 17:57

Sh Hon Minister Pls restore again the Ranipattai to Chennai MEMU train service soon. Track and signal, station all are ok, only Railway approval required. On this many more commuters will get benefited.


தமிழ்வேள்
ஏப் 09, 2025 20:09

இந்த ரயில் சேவை துவக்க முட்டுக் கட்டை போடுவது சோளிங்கர் எம்எல்ஏ/ அரக்கோணம் எம்பி மற்றும் வேலூர் ராணிப்பேட்டை மாவட்ட தனியார் பஸ் ஆபரேட்டர்கள்... இவர்களை ஒருங்கிணைப்பு செய்வது சோளிங்கர் தனியார் பஸ் முதலாளி... இந்த தனியார் பஸ் முதலாளி கும்பல் இந்த மாவட்டங்களில் இருக்கும் வரை ரயில் சேவை சாதாரண மக்களுக்கானதாக இருக்கும் வாய்ப்பு இல்லவே இல்லை..


தமிழ்வேள்
ஏப் 09, 2025 17:35

இந்த தடம் முழுவதும் -காட்பாடி சந்திப்பு தவிர - தெற்கு மத்திய ரயில்வேயை சேர்ந்தது ..நிலம் எடுப்பு ஆந்திர அரசின் பொறுப்பு ...தெற்கு மத்திய ரயில்வேயின் திட்டம் . தெற்கு ரயில்வேயினுடையது அல்ல ..ஆனால் இதற்கும் ஸ்டிக்கர் ஓட்ட அய்யா சுடாலினாரின் கும்பல் முந்திரிக்கொட்டை போல வெளிவரும் ..


Ramesh Sargam
ஏப் 09, 2025 17:35

திருப்பதிக்கு போக பல போக்குவரத்து வசதிகள் உள்ளன. ஆனால் அங்கே சென்ற பிறகு அந்த பெருமாளை தரிசிக்க ஒரே ஒரு வழி.அதில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டும். பெருமாளை சுலபமாக தரிசிக்க ஒரு சில சுலப வழிகளை காட்டுங்கள் அமைச்சரே. VIP, VVIP தரிசன வழிகளை மூடுங்க அமைச்சரே.


venugopal s
ஏப் 09, 2025 17:34

இந்தப் பாதையில் இருபது கிலோமீட்டர் மட்டுமே தமிழகத்தில் உள்ளது.இது ஆந்திராவுக்கு அதிகம் பயனளிக்கும் திட்டம். வழக்கம் போல் மத்திய பாஜக அரசு தமிழர்களை ஏமாற்றுவதையே முழு நேரத் தொழிலாக செய்து வருகிறது! பேரு பெத்த பேரு தாக நீரு லேது!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை