உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய அரசின் பதில் அதிர்ச்சி அளிக்கிறது: ராகுல்

மத்திய அரசின் பதில் அதிர்ச்சி அளிக்கிறது: ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக மத்திய அரசு அளித்த பதில் அதிர்ச்சி அளிக்கிறது என காங்கிரஸ் எம்பி ராகுல் கூறியுள்ளார்.ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் துவங்க உள்ளது.இந்நிலையில் ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஜாதி வாரி கணக்கெடுப்பு குறித்து அரசிடம் பார்லிமென்டில் கேள்வி கேட்டேன். அவர்களின் பதில் அதிர்ச்சி அளிக்கிறது. உறுதியான திட்டமிடல் இல்லை. குறிப்பிட்ட காலக்கெடு இல்லை. பார்லிமென்டில் விவாதிக்கப்படவில்லை. மக்களுடன் ஆலோசிக்கப்படவில்லை. மற்ற மாநிலங்களில் வெற்றிகரமாக நடந்த ஜாதிவாரி கணக்கெடுப்புகளின் திட்டங்களில் இருந்து கற்றுக்கொள்ளும் விருப்பம் இல்லை. இந்த விவகாரத்தில் மோடி அரசின் நிலைப்பாடு நாட்டின் ஏழை மக்களுக்கு செய்யும் வெளிப்படையான நம்பிக்கை துரோகம் ஆகும் . இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Rajasekar Jayaraman
டிச 04, 2025 06:11

ஜாதி இல்லை என்று சொல்லும் ... கணக்கேடுப்புக்கேட்பது ஏன் அரசியல் செய்யமுடியாது என்ற பயமா.


Ramesh Sargam
டிச 03, 2025 20:58

இனி எல்லாமே உனக்கு அதிர்ச்சிதான்.


Rajan A
டிச 03, 2025 19:59

சும்மா வெளிநாட்டில் செட்டில் ஆகி எங்களை நிம்மதியாக வாழ விடு


M Ramachandran
டிச 03, 2025 19:49

தேசவிரோதிகளுக்கு வக்காலத்து


தாமரை மலர்கிறது
டிச 03, 2025 19:40

ஜாதியை ஒழிக்கவேண்டும் என்று சொல்லிவிட்டு, என்ன மண்ணாங்கட்டிக்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவை? ஜாதியை வைத்து அரசியல் செய்யும் காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகளுக்கு ஜாதியை ஒழிக்கும் எண்ணம் இல்லை.


V.Mohan
டிச 03, 2025 19:24

""உறுதியான திட்டமிடல் இல்லை,காலக்கெடு இல்லை, சபையில் விவாதிக்க வில்லை" ஆஹா இவரும், இவரது கட்சியும் என்னிக்கய்யா ""விவாதிக்க தயாரா இருந்தாங்க ???? போகாத ஊருக்கு டிக்கெட் விக்கும் இவரை மாதிரி ஆசாமிகள் நாட்டிற்கே சாபக்கேடு


HoneyBee
டிச 03, 2025 19:23

உனக்கு புரிஞ்சா‌ என்ன புரியாட்டா என்ன. எப்படியும் வெளிநடப்பு தான் செய்ய போற.


MARUTHU PANDIAR
டிச 03, 2025 18:44

மேல் மாடி ...மேல் மாடி ...மேல் மாடி


பேசும் தமிழன்
டிச 03, 2025 18:34

எதற்கும் கொஞ்சம் தள்ளியே நில்லுங்கள் !!!


Anand
டிச 03, 2025 18:09

இதுக்கே இப்படி அதிர்ச்சி ஆனால் எப்படி? இன்னும் நிறைய அதிர்ச்சி அடையவேண்டிவரும், கூடிய சீக்கிரம் நேஷனல் ஹெரால்டு கேசில் உன் குடும்பம் உள்ளே செல்லும்போது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை